tag:blogger.com,1999:blog-390633955597689872024-03-14T09:47:41.513+03:00அப்துஸ்ஸலாம் மஸ்தூக்காஇறைவா! எனது கல்வி ஞானத்தை அதிகப்படுத்துமஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-39063395559768987.post-68792132615841592932012-04-09T23:18:00.000+03:002014-05-07T12:37:06.352+03:00தவ்ஹீத் இல்லம் தாருஸ்ஸலாம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="http://2.bp.blogspot.com/-fMGDXe1-coE/T4NDki22iuI/AAAAAAAAAqs/NU_NIwPV-zc/s1600/IMG_0211.JPG" imageanchor="1"><img border="0" src="http://2.bp.blogspot.com/-fMGDXe1-coE/T4NDki22iuI/AAAAAAAAAqs/NU_NIwPV-zc/s320/IMG_0211.JPG" height="320" width="240" /></a></div>
<div style="text-align: justify;">
மேலத்திருப்பூந்துருத்தியில் இந்த வீட்டைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது . இவ்வளவுக்கும் பிரம்மாண்டமான வீடு என்றோ பிரம்மாதமான வீடு என்றோ சொல்ல முடியாது. ஆனால் பிரபல்யமான வீடு. சுமார் 25 ஆண்டுகட்கு முன்னர் இது கட்டப்பட்ட காலத்தில் கொஞ்சம் அழகானதாக இருந்திருக்கலாம். ஆனால் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் எழில் மிகுந்த கட்டடங்கள் எழும்பி நமதூரின் அழகுக்கு அழகு சேர்க்கும் இந்தக் காலத்தில் தாருஸ்ஸலாம் ஒரு சாதாரண இல்லம் தான்.
ஆனால் இந்த வீடு கட்டப்பட்ட விதம் மற்ற வீடுகள் கட்டப்பட்ட விதங்களை விடச் சற்று வித்தியாசமானது </div>
<div style="text-align: justify;">
புதிய வீடு கட்டுவதெனத் தீர்மானித்த பிறகு அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசனை கேட்பது இயல்பு தானே. அதன்படி பலரிடமும் ஆலோசனைகள் கேட்டபோது, சிலர் சொன்ன ஆலோசனை, "வாஸ்து பார்ப்பவர்களிடம் வீட்டு மனையின் நீள அகலங்களைச் சொன்னால் அவர்கள் கணக்குப்(?) போட்டுப் பார்த்து, கூடம், அறைகள், சமையலறை, கழிவறை ஆகியவை எங்கு அமைய வேண்டும் என்று சொல்வார்கள் இவர்களிடம் ஆலோசனைக் கேளுங்கள்" எனக் கூறினார்கள்.
இன்ஜினியர்களிடம் கலந்தாலோசியுங்கள் எனக் கூறியிருந்தால் வரவேற்றிருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கையாளன் ஒருவனின் வீட்டை எழுப்ப, மூட நம்பிக்கையாளன் ஒருவனை அழைத்து, வந்து ஈமானை இழக்கலாமா? ஒரு முஸ்லிம் எப்படி இதற்கு உடன்பட முடியும்? 'முன்னோர்கள் செய்தார்கள்' 'முதியோர்கள் செய்தார்கள்' என்னும் முட்டாள்தனத்தை மூட்டைக் கட்டி வைத்து விட்டு நானே எனது வீட்டுக்கான மாதிரி வரைபடத்தை உருவாக்கி எனது தந்தையிடம் கொடுத்து " யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் இந்த வரைபடத்தில் உள்ள மாதிரி உள்ளமைப்பை உருவாக்குங்கள்" என்றேன்.
மார்க்க விஷயங்களில் எனது கருத்துக்களுக்கு மறுப்பேதும் சொல்லாமல் ஆமோதிக்கும் எனது தந்தை, இதற்கும் அப்படியே சம்மதித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். </div>
<div style="text-align: justify;">
வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் பணி இனிதே ஆரம்பமானது.
பொதுவாக அஸ்திவாரம் தோண்ட ஆரம்பிக்கும்போது கட்டடப் பணியாளர்கள், கற்களை வைத்து அவர்கள் சார்ந்த மதப் பழக்கமான பூஜை புணஸ்காரங்கள் செய்வார்கள். பிற சமூகத்தவர் தங்களுடைய வீடுகளை எழுப்பும்போது அவர்களின் மதச்சடங்குகளின்படி அமைப்பதை நாம் குறை கூறவில்லை. அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் நம் சமூக மக்கள் அமைக்கும் வீடுகளில் அந்த சடங்கு சம்பிரதாயங்கள் அரங்கேறும் போது கை கட்டி வாய் பொத்தி நின்று அவற்றை ஆமோதிக்கும் நம்மவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலைச் செய்கின்றோமே! அல்லாஹ்விடம் குற்றவாளியாக நிற்க வேண்டுமே! என்னும் நினைவு இவர்களின் உள்ளங்களில் தோன்றவே தோன்றாதா? மன்னிப்பே இல்லாத இந்த மொபெரும் பாவத்தைச் செய்ய எப்படி மனம் வந்தது? அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் எங்கே போனது?
எந்தவிதமான பூஜை புணஸ்காரங்களும் இல்லாமல் அஸ்திவாரம் தோண்டப்பட்டது . கட்டடம் இறையருளால் சிறிது சிறிதாக மேலெழும்பியது. இனி பேஸ் மட்டம் வரை வந்து நின்ற போது அடுத்த கட்ட போராட்டம் ஆரம்பமானது. </div>
<div style="text-align: justify;">
முதல் நிலை வைக்கும் போராட்டம். ஆசாரி கொத்தனார் அனைவரும் வந்து விட்டனர். முதல் நிலை தயாராகிவிட்டது. "குங்குமமும் சந்தனமும் வேண்டும்" என ஆசாரி சொல்ல, "பூவும் வாழைப்பழமும் வேண்டும்" என கொத்தனார் சொல்ல, "இவை எதுவுமே கிடையாது" என நான் சொல்ல அங்கு ஆரம்பமானது ஏகத்துவத்திற்கெதிரான போர். இறுதியில் ஏகத்துவம் தான் வென்றது என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
வீட்டின் அனைத்து நிலைகளும் ஒரு போல வடிவமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் ஒரே மாதிரி மிக எளிமையாக, மிகச் சாதாரணமாக தூக்கி நிறுத்தப்பட்டன. பூஜை புணஸ்காரம் இல்லை, பூவும் பொட்டும் இல்லை, சந்தனமும் சாம்பிராணியும் இல்லை, ஊது பத்தியும் வாங்கவில்லை. அஜரத்தும் அல்பாத்தியாவும் இல்லை.
கடகடவென கட்டடச் சுவர்கள் ஏறத் தொடங்கின. இடையிடையே கட்டட மேஸ்திரி "பாய்! இங்கு தான் ஜன்னல் வைக்க வேண்டும் இங்கு நிலை வைக்கக் கூடாது கழிப்பறை இங்கு வைக்கக் கூடாது, சமையலறை இங்கு தான் அமைய வேண்டும்" என்று ஒவ்வொன்றாகச் சொல்ல, அவற்றில் நியாயமான வற்றையும், அறிவுக்குப் பொருத்தமான வற்றையும் மட்டும் அங்கீகரித்து, மற்றவற்றைப் புறந்தள்ளி, எவையெல்லாம் நமது வசதிக்கும் வீட்டின் இட அமைப்புக்கும் சரியாக அமைந்ததோ அதன் படி அமைத்து, பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் காங்கிரீட் ரூப் மட்டம் வரை வந்து நின்றது. </div>
<div style="text-align: justify;">
இனி அடுத்த கட்டப் போராட்டம் காங்கிரீட் போடும்போது ஆரம்பமானது.
பொதுவாக காங்கிரீட் போடும் தினத்தன்று வேலை செய்பவர்கள் அன்று அதிகாலைத் தொடங்கி இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து காங்கிரீட் போட்டு முடிப்பார்கள். அன்று பணிபுரிவோர் அனைவருக்கும் பகல் உணவு வீட்டின் உரிமையாளர் பொறுப்பு. இது தான் வழக்கமாக உள்ள நடைமுறை. சந்தோஷத்தில் அளிக்கும் இந்த விருந்தை குறை கூற முடியாது. ஆனால் அந்த விருந்தின் பின்னனியில் ஒரு மாபெரும் சதித்திட்டமாக ஷிர்க் இருப்பதை பலரும் வசதியாக மறந்து விடுவர் அல்லது மறைத்து விடுவர்.
அதாவது காங்கிரீட் போடும்போது வீட்டுக்காக ஆடு அறுத்து பலியிட்டு அதன் இரத்தத்தை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளிப்பது. அன்று அறுத்த அந்த ஆட்டை விருந்தாக்கி அன்றைய தினம் வேலை செய்தவர்களுக்கு சோறு ஆக்கி போடுவது நடைமுறை.
பிற சமூகத்தவர் தங்கள் தெய்வங்களுக்கு இரத்த பலி கொடுப்பதும் அதன் காரணமாக வீட்டு வேலைகள் தடையில்லாமல் நடக்கும் என நம்புவதும் அவர்கள் மதம் சார்ந்த நம்பிக்கை. ஆனால் அல்லாஹ்வை நம்பும் முஸ்லிமுக்கு இது மாபெரும் இணைவைத்தல் என்னும் பாவச் செயல் அல்லவா? இதை ஏன் நாம் உணர்வதில்லை.
எமது வீடு காங்கிரீட் போடும் தினத்தன்று காலை, முதற் தவணையாக 10 மூட்டை சிமெண்ட், கருங்கள் ஜல்லி கலந்து கலவை தயாராகி விட்டது. மேஸ்திரி வந்து நின்று கொண்டு, "சீக்கிரம் ஆடு அறுத்து இரத்தம் கொண்டு வாருங்கள் நேரமாகின்றது" என்று கூற, "ஆடு அறுக்கவில்லை. இரத்தமும் இல்லை வேலையை ஆரம்பியுங்கள்" என நான் கூற "கோழியாவது அறுக்கத்தான் வேண்டும்" என்று கொத்தனார் கூற "கோழியும் அறுக்க வில்லை" என்று நான் கூற இறுதியாக எலுமிச்சம்பழமாவது அறுத்தால் தான் வேலை ஆரம்பிக்க முடியும் என வாக்குவாதம் தொடர்ந்தது.
"10 மூட்டை சிமெண்ட் கலவை போட்டாகி விட்டது கலவை காய்ந்து வீணாகி விடும்" என கொத்தனார் சொல்ல, "கலவை வீணாகி விட்டால் கலவையைக் குழி தோண்டிப் புதைப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை எமது கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்க நான் சம்மதிக்க மாட்டேன். எந்த வித பூஜைக்கும் இரத்த பலிக்கும் இங்கு இடமில்லை" என்று நான் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் இறுதி வரை உறுதியுடன் நின்றேன்.
தலைமைக் கொத்தனாரின் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப்போக இறுதியில் .'பாய்! உங்களுக்குத் தேவையில்லாமல் இருக்கலாம் எங்களுக்கும் கட்டடத்தின் பாதுகாப்புக்கும் அது தேவை" என்று கொத்தனார் கடைசி அஸ்திரத்தையும் பிரயோகித்து விட்டார்.
அதற்கு நான் அளித்த பதில், கொத்தனாரை மேற்கொண்டு விவாதத்தைத் தொடர முடியாமல் ஆக்கியது.
"இந்தக் கட்டடமே இடிந்து விழுந்தாலும் பரவாயில்லை. அதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இது போதுமா? என்று நான் சொல்ல
இறுதியாக வேறு வழியின்றி, கொத்தனார் காங்கிரீட் போடத் தொடங்கினார்.</div>
<div style="text-align: justify;">
அன்று பகல் அனைவருக்கும் விஜிடபிள் பிரியானி தான் வழங்கப்பட்டது.
3 வாரங்கள் கழித்து செண்டரிங் பலகைகள் பிரிக்கப்பட போது, அதே காலகட்டத்தில் சகலவிதமான பூஜை புணஸ்காரங்களுடன்(?) கட்டப்பட்ட வீடுகளின் காங்கிரீட்டை விட மிக அருமையாக ஒரு குறைபாடும் இல்லாமல் நமது காங்கிரீட் அமைந்திருந்ததை கொத்தனார்களும் சித்தாள்களும் கண்ணாரக் கண்டார்கள்.
'வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்தோம்' என்றில்லாமல் பொறுப்புடனும் அக்கரையுடனும் கட்டடம் பூர்த்தியடையும் வரை அயராது பாடுபட்ட மேஸ்திரி, கொத்தனார்கள், சித்தாள்கள், மற்றும் கட்டடப் பணியாளர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சம் நிறைந்த நன்றி.
கொண்ட கொள்கையில் சற்றும் மனம் தளராமல் உறுதியுடன் நாம் நின்றதற்கு
"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல் குர்ஆன் 9:51)
என்னும் இறைவனின் திருவசனமும்
"யார் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்"
என்னும் இறைத் தூதரின் பொன்மொழியுமே காரணம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறிப்பு: சொந்த வீட்டின் பெருமையைப் பறைசாற்ற எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. இந்த இல்லம் கட்டப்பட்ட விதத்தை அனைவருக்கும் அறியத் தருவதும் இன்ஷா அல்லாஹ் இனி நமதூரில் எழுப்பப்படவிருக்கும் இல்லங்கள் அனைத்தும் இந்த வழிமுறையில் எழுப்பப்படக் கூடாதா? என்னும் ஆதங்கத்திலும் ஆசையிலும் தான் இக்கட்டுரையை எழுதியுள்ளேன.. புகழும் பெருமையும் இறைவனுக்கே சொந்தம். அவனின் அடிமை அதற்கெப்படி சொந்தம் கொண்டாட முடியும்?
'போராட்டங்கள் இத்துடன் முடிவடைந்தன' என்றா நினைக்கிறீர்கள்?. அது தான் இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதுமனைப் புகுவிழாவில் நடந்த போராட்டங்கள் தனிக்கட்டுரையாக இன்ஷா அல்லாஹ்</div>
</div>
மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-62431307150653709432012-03-20T12:42:00.001+03:002012-03-20T12:46:06.244+03:00மறக்க முடியா நிகழ்ச்சி-3<span style="text-decoration: underline;">நமதூருக்கு அடிக்கடி தப்லீக் ஜமாஅத் வரும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். நானும் பல முறை பல நாட்கள் ஜமாஅத்தில் சென்றிருக்கிறேன். அவையெல்லாம் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்கள். அனுபவித்தவர்களுக்குத் தான் அதன் சுவை தெரியும்.<br /><br />சில ஆண்டுகளுக்கு முன்னர் சவூதியிலிருந்து விடுப்பில் ஊர் சென்றிருந்த போது ஒரு நாள் நமதூர் பெரியப் பள்ளியில் அசர் தொழுதுவிட்டு வெளியில் வந்த போது, அன்று வந்திருந்த வெளியூர் ஜமாஅத்திலிருந்து ஒரு நண்பர் என்னைப் பார்த்து விட்டு 'மஸ்தூக்கா! நலமாக இருக்கிறீர்களா?' என்று கைகொடுத்து விசாரித்துக் கொண்டிந்தார்.<br /><br />நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, மற்றொருவர் வந்து 'மஸ்தூக்கா! நலமா? நீங்கள் சவூதியிலிருந்து எப்போது வந்தீர்கள்? என்று என்னிடம் கேட்டுவிட்டு என்னிடம் பேசிக் கொண்டிருந்த நண்பரிடம் 'உங்களுக்கு மஸ்தூக்காவைத் தெரியுமா?, எனக் கேட்க இவர் அந்த நண்பரிடம் உங்களுக்கும் மஸ்தூக்காவைத் தெரியுமா? எனக் கேட்க, இருவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள். <br /><br />இப்படி நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது மேலும் ஒரு ஆச்சரியம் எங்களுக்கு காத்திருந்தது. மூன்றாவதாக வேறொருவர் வந்து என்னை ஆரத்தழுவி 'ஸலாம்! எப்படி மாப்ளே இருக்கே! என்றாரே பார்க்கலாம். எங்கள் அனைவருக்கும் ஆச்சரியம்.<br /><br />இதைப் படிக்கும் உங்களுக்கு தலை சுற்றுமே! அப்படித் தான் அன்று எங்கள் அனைவருக்குமே தலை சுற்றியது. தெரிந்த நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து விசாரிக்கிறார்கள் அவ்வளவு தானே! இதில் ஆச்சரியப் படவும் தலை சுற்றவும் என்ன இருக்கிறது? இது தானே உங்கள் கேள்வி.<br /><br />அந்த நேரத்தில் அந்த இடத்தில் அதாவது திருப்பந்துருத்தி பெரியப் பள்ளிக்கு வெளியில் வந்து நின்று என்னை சுகம் விசாரித்த அந்த 3 பேரும் ஒரே ஜமாஅத்தில் வந்தவர்கள் தான். ஆனால் இந்த ஜமாஅத்தில் வருவதற்கு முன் யாரையும் யாருக்கும் தெரியாது. இதற்கு முன் அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் அல்ல. பல்வேறு ஊர்களில் இந்த ஜமாஅத்தில் இணைந்து சில தினங்களாக ஜமாஅத்தில் வந்திருக்கின்றனர் அவ்வளவு தான்.<br /><br />இதற்கு முந்தைய நாள் தஞ்சாவூரில் தங்கள் தஃவாப் பணிகளை முடித்த பின்னர், 'இன்ஷா அல்லாஹ் நாளை திருப்பந்துருத்தி செல்கிறோம்' என அமீர் சாஹிப் சொல்ல 'நமது நண்பர் மஸ்தூக்காவின் ஊர் அல்லவா? நமது நண்பர் மஸ்தூக்காவை சந்திக்கலாமே! என்று மூவருமே ஒருபோல மனதில் நினைத்திருக்கின்றனர். இதை அன்றைய சநத்திப்பின் போது நண்பர்கள் மூவருமே சொன்னபோது என்னையும் சேர்த்து எங்கள் நால்வரின் வாயிலிருந்தும் வெளிவந்த வார்த்தை 'சுப்ஹானல்லாஹ்'<br /><br />தப்லீக் பற்றி சரியாகத் தெரியாவாதவர்களுக்கு ஒரு சிறு விளக்கம் இங்கு சொன்னால் பொருத்தமாக இருக்கும்.<br />ஒரு ஜமாஅத் புறப்படும். அதில் சிலர் 3 நாள் சிலர் 7 நாள் சிலர் 40 நாள் எனப் பெயர் கொடுத்திருப்பார்கள். 3 நாள் பெயர் கொடுத்தவர் 3 நாள் முடிந்ததும் விலகிவிடுவார். அதற்கிடையில் ஜமாஅத் 2 அல்லது 3 ஊர்களைக் கடந்திருக்கும். இந்த ஊர்களில் மேலும் பலர் இணைந்து கொள்வர். சங்கிலித் தொடர் போல் இது நீண்டு கொண்டே போகும்.<br /><br />இப்படித்தான் பல்வேறு ஊர்களிலிருந்தும் இந்த 3 பேரும் இந்த ஜமாஅத்தில் இணைந்திருக்கின்றனர். இதற்கு முன் இந்த மூவரில் யாரையும் யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த 3 பேரும் பல்வேறு காலகட்டங்களில் பல இடங்களில் எனக்கு நண்பர்களாகக் கிடைத்தவர்கள்.<br /><br /> திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் என்னுடன் பயின்ற நண்பர் ஒருவர். பம்பாயில் டிராவல்ஸ் ஒன்றில நான் அரபி மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது எங்கள் அலுவலகத்தில் வைத்து அறிமுகம் ஆன நண்பர் மற்றொருவர். அலுவலகப் பணி நிமித்தம் புது டெல்லி சென்ற போது அங்கு அறிமுகம் ஆன நண்பர் ஒருவா.<br /><br />இப்படி 3 வெவ்வேறு இடங்களில் எனக்கு அறிமுகம் ஆன 3 வெவ்வேறு நண்பர்களின் நட்பு பல வருட இடைவெளிக்குப் பின் இப்போது நமதூர் பெரியப் பள்ளியில் வைத்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.<br /><br /><br /><br /></span>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-1075457611253014762012-02-26T00:45:00.004+03:002012-02-26T00:50:00.703+03:00கலாச்சார ஊடுருவல்<a href="http://www.mylivesignature.com/" target="_blank"><strong>சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு </strong></a><div align="justify"><br />உலகின் பல்வேறு இன, மொழி, தேசக் கலாச்சாரங்களிலிருந்தும் வேறுபட்டு அகில உலகத்தையும் தன்பால் ஈர்த்தக் கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரமாகும். இறை வேத வரிகளும் இறைத்தூதர் மொழிகளும் போதித்த இஸ்லாமியக் கலாச்சாரத்தை இம்மியும் பிசகாமல் இஸ்லாமியச் சமுதாயம் கடைப்பிடித்த காலமெல்லாம் அகில உலகுக்கும் முன்மாதிரியாக அது திகழ்ந்தது.</div><div align="justify"><br />இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டப் பல்வேறு சமுதாய மக்களும் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது, அதுநாள் வரை தாங்கள் பின்பற்றி வந்த சில கலாச்சாரங்களைத் தங்களையும் அறியாமல் சிலர் தங்களுடன் கொண்டு வந்தனர். காலப் போக்கில் அந்த அந்நியக் கலாச்சாரங்கள் வேர்விட்டு, கிளைபரப்பி, முழு இஸ்லாமியச் சமுதாயத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைக் கலாச்சாரத்துக்குக் குழிபறித்து விட்டது எனலாம்.</div><div align="justify"> </div><div align="justify">சிலை வணக்கக் கலாச்சாரம் போன்ற, "பாவம்" என்று பார்வையில் கண்காணத் தெரிந்த சில கலாச்சாரங்கள் நம்மிடம் நுழைய முடியவில்லையே தவிர, நல்லவைதாமே என்ற போர்வையில் நுழைந்த கலாச்சாரங்களைப் பாமர முஸ்லிம்கள் அலட்சியத்தோடு கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு பல சீர்கெட்டக் கலாச்சாரங்களின் ஊடுருவல் நம் இஸ்லாமியச் சமுதாயத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. இந்தக் கலாச்சார ஊடுருவல்களில் பல, ஷிர்க் என்னும் இணைவைத்தலில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை நம் சமுதாயத்தில் பலர் இன்னமும் உணர்ந்ததாகத் தெரிய வில்லை.</div><div align="justify"> </div><div align="justify"><strong>நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்</strong> - (திருக்குர்ஆன் 4;:48)</div><div align="justify"> </div><div align="justify">இந்தக் காலாச்சார ஊடுருவலை அலட்சியம் செய்வோர், மற்றும் அவற்றுக்கு நியாயம் கற்பிப்போர் பின்வரும் நபி மொழியை நினைவிற் கொள்ள வேண்டும்.</div><div align="justify"> </div><div align="justify">"<strong>எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" - </strong>அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: அபூதாவூத்.</div><div align="justify"> </div><div align="justify">என்னும் நபி மொழியை நன்றாகப் புரிந்து கொண்டால் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வளவு மோசமானது என்பதை உணரலாம். "அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கருத்தாழமிக்க வார்த்தைகளை அலட்சியப் படுத்த எந்த ஒரு முஸ்லிமும் முன்வரமாட்டார்.</div><div align="justify"> </div><div align="justify">நமது அன்றாட வாழ்வில் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வாறெல்லாம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது என்பதைச் சிந்தித்து, ஆராய்ந்து, நல்லுணர்வு பெற வேண்டும். </div><div align="justify"> </div><div align="justify">பிறப்பில், இறப்பில், வாழ்வில், திருமணத்தில் மற்றும் அன்னறாடப் பழக்க வழக்கங்களில் நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட இந்தக் கேடு கெட்டக் கலாச்சார ஊடுருவலை நாம் வேரோடும் வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.</div><div align="justify"> </div><div align="justify">பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் தொடங்கி, பெண் குழந்தைகள் பருவமடைவதிலும் திருமணம் நடத்துவதிலும் புதிய வீடு கட்டுவதிலும், இப்படி அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவலால், "மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் எவ்வகையிலும் வேறுபடவில்லையே" என்று பிற மதத்தவர் விமர்சிக்கும் அளவுக்குப் போய்விட்டது.</div><div align="justify"> </div><div align="justify">பிறமதச் சகோதரர்கள் இஸ்லாத்தைப் படித்து தெரிந்துக் கொள்வதை விட முஸ்லிம்களாகிய நமது நடவடிக்கைகளைப் பார்த்துத் தான் இஸ்லாத்தை தெரிந்துக் கொள்ள முடியும். அப்படியிருக்க நமது நடவடிக்கைகள் இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு முரணாக இருந்தால் உண்மையான இஸ்லாத்தை எவ்விதம் மற்றவர்களால் புரிந்துக் கொள்ள முடியும் என்பதை நாம் உணர வேண்டாமா?</div><div align="justify"> </div><div align="justify"><strong><span style="font-size:130%;">காலமும் நேரமும்</span></strong></div><div align="justify"> </div><div align="justify">நல்ல காரியங்கள் நடத்துவதற்கு நல்ல நேரம் பார்ப்பது பிற சமூகத்தவர் பின்பற்றும் பழக்கம். இஸ்லாத்தில் "நல்ல நேரம்', "கெட்ட நேரம்' என்று நேரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. காலண்டரைப் பார்த்துக் காலநேரம் பிரிப்பது அறிவுக்கு ஏற்ற செயலும் அல்ல; அல்லாஹ்வுக்கு உகந்த செயலும் அல்ல.</div><div align="justify"> </div><div align="justify">நேரம் காலம் பார்த்து நடத்தப்பட்ட எத்தனையோ திருமணங்கள் விவகாரத்தில் தொடங்கி விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. காலமும் நேரமும் அவர்களுக்குக் கைகொடுக்வில்லை. </div><div align="justify"> </div><div align="justify">ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து "முகூர்த்த நேரம்" என்று பிற சமூகத்தவர் குறிப்பிடுவதை "முபாரக்கான நேரம்" என்று அரபியில் குறிப்பிடுவதால் மட்டும் இஸ்லாமிய அங்கீகாரம் பெற்று விட்டதாக ஆகிவிடாது.</div><div align="justify"> </div><div align="justify">பசிக்கும்போது உணவருந்த எவரும் பஞ்சாங்கம் பார்ப்பதில்லை. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் தாய், தன் குழந்தையைப் பெற்றெடுக்க நல்ல நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, எந்த மருத்துவரும் கால நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை.</div><div align="justify"> </div><div align="justify">வாழ்க்கையில் ஏற்படும் வெற்றியும் தோல்வியும் அல்லாஹ்வின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்று ஈமானில் உறுதி கொள்ள வேண்டும்.நினைத்த காரியம் நடக்காமல் போவதும், தொடங்கிய காரியம் தோல்வி அடைவதும், இதைவிடச் சிறந்ததை நமக்குத் தருவதற்காக அல்லது இதன் மூலம் ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பதற்காக இறைவனுடைய ஏற்பாடாக இருக்கக் கூடும்.அதை விட்டு விட்டு காலத்தின் மீதும் நேரத்தின் மீதும் பழி சுமத்துவது பெரும் பாவம். ஏனனில், இறைவன் கூறுகிறான். <strong>"காலத்தை ஏசாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன்."</strong> (ஹதீஸ் குத்ஸி)</div><div align="justify"> </div><div align="justify">தொடங்கிய காரியம் தோல்வி அடைந்தால், "நேரம் சரியில்லை" என்று நேரத்தைக் குறை கூறுவதும் பிறமதத்திலிருந்து நம்மிடம் புகுந்து விட்ட ஒரு கலாச்சார ஊடுருவல்தான்.</div><div align="justify"> </div><div align="justify"><span style="font-size:130%;"><strong>சகுனம் பார்ப்பது சரியானதல்ல</strong></span></div><div align="justify"> </div><div align="justify">ஏதேனும் காரியமாக வெளியில் புறப்படும்போது, "எங்கே போகிறீர்கள்?" என்று யாராவது கேட்டு விட்டால் போகிற காரியம் நடக்காது என்று நம்புவதும், நடந்து செல்லும்போது காலில் ஏதேனும் தடுக்கினால் சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வதும், போகிற வழியில் பூனை குறுக்கிட்டால் போகிற காரியம் தடங்கல் ஏற்படும் என்று கருதுவதும்,விதவைப் பெண்கள் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைப்பதும் வடிகட்டிய முட்டாள் தனம்.</div><div align="justify"> </div><div align="justify">நாம் நமது வேலையாகப் போகிறோம். பூனை தனது வேலையாகப் போகிறது. நமது வேலையைக் கெடுப்பது பூனையின் வேலையல்ல என்பதைச் சிந்தித்து உணர வேண்டும்.</div><div align="justify"> </div><div align="justify">பேசிக் கொண்டிருக்கும் போது சுவர்க்கடிகாரம் மணி அடித்தாலோ பல்லி சப்தமிட்டாலோ பேசும் பேச்சு உண்மையானது என்று கடிகாரத்தையும் பல்லியையும் சாட்சிகளாக்குவதும், 'பாலன்ஸ்' தவறி பல்லி விழுந்துவிட்டால், பதறித் துடித்து காலண்டரைத் திருப்பி "பல்லி விழும் பலன்" பார்ப்பதும் ஆகிய இவை யாவும் அந்நியக் கலாச்சார ஊடுருவல்கள் தாம்.</div><div align="justify"> </div><div align="justify">தேதி பார்க்கக் காலண்டர் வாங்கும் போது பல்லி விழும் பலனும், ராசி பலனும் இல்லாத காலண்டர் வாங்கினாலே பெரும்பாலும் இந்த மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடலாம்.மூடக் கொள்கைகளை முற்றிலும் ஒதுக்கிய குர்ஆன் வசனங்களும், பெருமானார் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும், அடங்கிய இஸ்லாமியக் காலண்டர்கள் பரவலாக இப்போது விற்பனைக்கு வந்து விட்டன.</div><div align="justify"> </div><div align="justify">நல்ல சகுனம், கெட்ட சகுனம், எதுவுமே இஸ்லாத்தில் இல்லை. எவ்வித சகுனமும் பார்க்கக்கூடாது. சகுனங்கள் ஒரு போதும் நமது செயல்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தமாட்டா.நல்லதும் கெட்டதும் அல்லாஹ்விடமிருந்தே எற்படுகின்றது என்று நம்புவது, "ஈமான்" என்னும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.</div><div align="justify"> </div><div align="justify">அல்லாஹ் விதித்தபடிதான் அனைத்துமே நடக்கும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமாக நமது உள்ளத்தில் வேரூன்ற வேண்டும். அந்த ஈமானின் உறுதி நமது இதயத்தில் இருக்கும் வரை தீமைகள் எதுவும் ஏற்படாது.</div><div align="justify"> </div><div align="justify"><strong>"மந்திரிக்கச் செல்லாமலும் சகுனம் பார்க்காமலும் தங்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்த எழுபது ஆயிரம் பேர் எனது சமுதாயத்தில் விசாரனையின்றி சுவர்க்கம் செல்வார்கள்"</strong> என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். </div><div align="justify">(அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் புகாரி).</div><div align="justify"> </div><div align="justify"><strong><span style="font-size:130%;">திருமணத்தில் தீய பழக்கங்கள்</span></strong></div><div align="justify"> </div><div align="justify">சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட, 'சீர்திருத்தத் திருமணங்கள்' என்னும் பெயரில், இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் சிலர், இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே!</div><div align="justify"> </div><div align="justify">மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து, மணப்பெண் கழுத்தில் 'தாலிகட்டும்' வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவனுக்குச் சமமான மகிமை அளிப்பதும் திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும், அரிசி அளக்க வைத்து அல்லாஹ்வின் இரணத்தை அள்ளி இறைப்பதும், மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும், பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும், ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும், ஆகிய இவை யாவும் அந்நிய கலாச்சார ஊடுருவல்தான் என்பதில் ஐயமில்லை.</div><div align="justify"> </div><div align="justify">சமுதாயம் சீர் பெற, இதுபோன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப் பிடிக்க வேண்டும்<strong>."நீங்கள் மணம் (செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்து விடுங்கள்" </strong>(அல்குர்ஆன் 4:4)<br /><br />என்னும் இறைவசனம் "மஹர் கொடையைக் கொடுத்து மணம் முடியுங்கள்" என்று தெளிவாகக் கூறும்போது இதற்கு நேர் முரணாகப் பெண் வீட்டாரிடம் பணம் கேட்கும் இழி செயலாகிய - தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப் போய்விட்ட வரதட்சணை என்னும் வன்கொடுமை ஒரு கலாச்சார ஊடுருவல்தான்.</div><div align="justify"> </div><div align="justify">இந்தக் கலாச்சாரச் சீர்கேட்டினால் எண்ணற்ற இஸ்லாமிய இளம் பெண்கள் வாழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். பல பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் வரதட்சணை கொடுக்க முடியாமல் வருடங்கள் பல கடந்தும் தம் பெண்மக்களை வாழ வைக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.</div><div align="justify"> </div><div align="justify">இறையச்சமுள்ள இஸ்லாமிய இளைஞர்களே! நீங்கள் எங்கே சென்றீர்கள்? வரதட்சணை வாங்கித்தான் மணம் முடிக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் பெற்றோர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லுங்கள். மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைவு படுத்துங்கள்.</div><div align="justify"> </div><div align="justify"><strong><span style="font-size:130%;">வீடு கட்டுவதில் மூடப் பழக்கங்கள்</span></strong></div><div align="justify"> </div><div align="justify">வீடு கட்டுவதற்கு முன், வீட்டு மனையின் அளவையும் அமைப்பையும் பொறுத்து, கட்டடப் பொறியாளரைக் கொண்டோ அல்லது அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ நம் வசதிக்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கட்டுவது நல்லது தான். அதற்காகச் சிலர் வாஸ்து சாஸ்திரம் - மனையடி சாஸ்திரம் என்னும் பெயரில் ஏமாற்றுச் சாஸ்திரங்களில் தங்கள் ஈமானை இழக்கின்றனர். இஸ்லாத்திற்கு எள்ளளவும் தொடர்பில்லாத இந்த வாஸ்து சாஸ்திரமும் ஒரு கலாச்சார ஊடுருவல் தான்.</div><div align="justify"> </div><div align="justify">மனையடி சாஸ்திரத்தில், ஓர் அளவைக் குறிப்பிட்டு இந்த அளவில் வீட்டின் நீள அகலம் இருந்தால் மரணம் ஏற்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படியானால் அந்த அளவைத் தவிர்த்துக் கட்டப்படும் எந்த வீடுகளிலும் யாருமே மரணிப்பதில்லையா?மனையடி சாஸ்திரம் மரணத்தைத் தடுக்காது. இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் இறப்பது நிச்சயம்.</div><div align="justify"> </div><div align="justify">நாம் வசிக்க உருவாக்கும் வீட்டை, நம் வசதிக்கு ஏற்றபடியும், இடத்திற்குத் தக்கபடியும், நீள அகலங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர வாஸ்து சாஸ்திரம் பார்த்து வாசற்படிகளை மாற்றி அமைப்பது, மனித வாழ்க்கையில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்த வல்லதன்று.எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் இன்றி அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் கட்டப் பட்ட வீடுகளில் வசிப்போர் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.இன்னமும் மூட சாஸ்திரங்களை முழுக்க முழுக்க நம்பிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?</div><div align="justify"> </div><div align="justify">கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் அநாச்சாரத்தில் ஆரம்பிக்கப் படுவதும் கட்டுகிற வீடு நமக்கு உரியது என்பதைக் கூட மறந்து நம்மிடம் கூலி வாங்கிக் கொண்டு கட்டுபவர்களின் பிறமதக் கலாச்சாரப்படி அனைத்து வகை ஆச்சாரங்களையும் அனுமதிப்பதும் அங்கீகரிப்பதும் கதவு நிலை வைப்பதற்குக் கூட காலமும் நேரமும் பார்த்து, பூவும் பொட்டும் வைத்து, பூஜை புனஸ்காரங்கள் செய்வதும் காங்கிரீட் போடும் போது ஆடும் கோழியும் அறுத்துப் பலியிடுவதும் கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதும் ஆகிய இவை யாவும் அந்நியக் கலாச்சாரத்தின் ஊடுருவல் தான். இஸ்லாத்துக்கும் இந்தக் கலாச்சாரங்களுக்கும் கடுகளவும் தொடர்பில்லை.</div><div align="justify"> </div><div align="justify"><span style="font-size:130%;"><strong>பிறந்தநாள்விழாவும் பெயர் சூட்டு விழாவும்</strong></span></div><div align="justify"> </div><div align="justify">பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள், ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாக இருப்பின் ஓர் ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும்; இது நபிவழி.ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு, ஒரு பித்அத் உருவாகிவிட்டது.</div><div align="justify"> </div><div align="justify"> குழந்தை பிறந்த 40 ஆம் நாள் அன்று தடபுடலாக விருந்து வைத்துப் 'பெயர் சூட்டு விழா' என்று அதற்கொரு பெயர் வைத்து, 'அசரத்தைக்' கூப்பிட்டுப் பெயர் சூட்டப்படுகிறது.</div><div align="justify"> </div><div align="justify">குழந்தை பிறந்தாலும் 40. திருமணத்திலும் 40. இறந்தவர் வீட்டிலும் 40. சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிட ஏற்பட்ட இந்த, 'மண்டல'க் கணக்கிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. </div><div align="justify"> </div><div align="justify">பெயர் சூட்டுவதற்கு ஒரு விழா வைத்து அசரத்தைக் கூப்பிட்டுத்தான் பெயர் வைக்க வேண்டும் என்பதில்லை. விருப்பமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்கு அதிக உரிமையுள்ள தாயோ, தந்தையோ கூப்பிட வேண்டியது தான். இதற்கென்று எந்தச் சடங்கும் மார்க்கத்தில் இல்லை.</div><div align="justify"> </div><div align="justify">இன்னும் சிலர் அநாச்சாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தையின் வயதுக் கணக்குப்படி மெழுகுவர்த்தி ஏற்றி, கேக் வெட்டி, "ஹேப்பி பர்த் டே" கொண்டாடுகின்றனர். இது முழுக்க முழுக்க ஓர் அந்நியக் கலாச்சாரம். இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை.</div><div align="justify"> </div><div align="justify"><span style="font-size:130%;"><strong>மானங்கெட்ட மஞ்சள் நீராட்டு விழா</strong></span></div><div align="justify"> </div><div align="justify">பெண்கள் பருவம் அடைந்தால், அதற்காக அழைப்பிதழ் அடித்து, உறவினர்களை அழைத்து, பூமாலை போட்டு, பூப்பு நீராட்டு விழா நடத்துவதும் அதற்காக விருந்து போடுவதும் கேட்பதற்கே கேவலமாக இல்லையா? மறைக்க வேண்டிய ஒரு செய்தியை ஊர் முழுக்கத் தம்பட்டம் அடித்து அறிவிக்க, பிள்ளையைப் பெற்றோருக்கு வெட்கமாக இல்லையா? எங்கிருந்து காப்பியடிக்கப் பட்டது இந்த மானங்கெட்ட கலாச்சாரம்?</div><div align="justify"> </div><div align="justify">பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவம் அடைகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் அதற்கும் விழா நடத்த ஆரம்பித்து விடுவார்களோ?</div><div align="justify"> </div><div align="justify">பருவம் அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இறைவன் அளித்த அருட்கொடை. இயற்கையாக ஏற்படும் இந்த மாற்றத்தை பகிரங்கப் படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.தனக்கு ஏற்படும் இயற்கை மாற்றங்களை ஒரு பெண் தன் தாயுடன் பகிர்ந்துக் கொண்டு ஆலோசனைகள் பெறலாம். அதைத் தந்தை கூட அறிய வேண்டும் என்று அவசியமில்லை.</div><div align="justify"> </div><div align="justify">"திருமணத்திற்குத் தயாராக ஒரு பெண் வீட்டில் இருப்பதைப் பலரும் அறிந்தால், பெண் கேட்டு வருவார்கள்" என்று சிலர் காரணம் சொல்வார்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் உறவினர்களுக்கும் அண்டை அயலாருக்கும் தெரியவரும். தாமாகவே பெண் கேட்டு வருவார்கள்.இனியேனும் இதுபோன்ற கேவலமான விழாக்களைத் தவிர்ப்போம். மாற்றுக் கலாச்சாரங்களை ஒதுக்கி இஸ்லாமிய வழி நடப்போம்.</div><div align="justify"> </div><div align="justify"><span style="font-size:130%;"><strong>ஜாதகமும் ஜோதிடமும்</strong></span></div><div align="justify"> </div><div align="justify">எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஏக இறைவனைத் தவிர வேறு எவருமே அறிய முடியாது என்று இறைமறை குர்ஆன் கூறுகிறது:</div><div align="justify"><strong>(இன்னும் நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வைத் தவிர்த்து வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்கள். இன்னும் (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.</strong> (அல்குர்ஆன் 27 : 65)</div><div align="justify"> </div><div align="justify">ஜாதகம் எழுதி வைப்பதும் ஜோதிடத்தை நம்புவதும் பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கும் புறம்பானவை. இஸ்லாத்திற்கு முரணான இக்கொடிய குற்றங்கள் இன்று பல்வேறு பெயர்களில் பாமரர்களிடம் மட்டுமின்றி படித்தவர்களிடமும் பரவி விட்டன.</div><div align="justify"> </div><div align="justify">பெயர் ராசி, பிறந்தநாள் ராசி, பெண் ராசி, கல் ராசி, கலர் ராசி, இட ராசி, இனிஷியல் ராசி, என்று எத்தனைப் பெயர்களில் அவதாரம் எடுத்தாலும், கைரேகை ஜோதிடம், கம்ப்யூட்டர் ஜோதிடம், கிளி ஜோதிடம், பால் கிதாபு ஜோதிடம், என்று எத்தனைப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இவை அத்தனையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம். இவை அனைத்துமே மூட நம்பிக்கை மட்டுமல்ல, மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும். இவை யாவும் அந்நியக் கலாச்சார ஊடுருவல்தான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.</div><div align="justify"> </div><div align="justify">அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்:</div><div align="justify"><strong>"எவர் குறி சொல்பவனிடம் சென்று அவன் சொல்வதை உண்மையென நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது"</strong> (அறிவிப்பவர் அபூ ஹுரைரா. ஆதாரம் முஸ்லிம்).</div><div align="justify"> </div><div align="justify">நமது எதிர் காலத்தைக் கணித்துச் சொல்வதாகக் கூறி ஏமாற்றுகிறவன், நாள் முழுவதும் வீதிக்கு வீதி காத்துக் கிடக்கிறான். வீடு வீடாக ஏறி இறங்குகிறான். அன்றைய தினத்தில் எத்தனை பேர் தன்னிடம் ஜோதிடம் பார்ப்பார்கள் என்பதைக்கூட அவனால் கணிக்க முடியவில்லை.தன்னுடைய ஒரு நாள் பொழுதைப் பற்றிக் கூட அறிந்துக் கொள்ள முடியாதவன் அடுத்தவருடைய எதிர்காலத்தை கணித்துச் சொல்வான் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்?</div><div align="justify"> </div><div align="justify">ஜோதிடம் என்றதும், பிற மத ஜோதிடக் காரர்களை மட்டும் என்று பலரும் கருதுகின்றனர். 'பால் கிதாபு' என்பதும் அரபுப் பெயர் தாங்கிய ஒரு வகை ஜோதிடமே! பால் கிதாபு பார்க்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் ஜோதிடக் காரர்களே! என்பதை மறந்து விடக்கூடாது.</div><div align="justify"> </div><div align="justify">பால் கிதாபுப் பார்த்துப் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்பவர்களின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் கவனித்தால் அவர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கும். தமக்குத் தாமே பால் கிதாபு பார்த்துப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வக்கற்றவர்கள், மற்றவர் வாழ்க்கையைச் சீர்படுத்துவார்கள் என்று எப்படி நம்புவது?</div><div align="justify"> </div><div align="justify">"ஒவ்வொருவரும் பிறக்கும்போது ஏற்படும் கோள்களின் சஞ்சாரமே நல்லதும் கெட்டதும் நடப்பதற்குக் காரணம்" என்று நம்பும் புத்தி கெட்டவர்கள், புயல் வெள்ளத்திலும், பூகம்பத்திலும் ஒட்டு மொத்தமாக ஓர் ஊரே அழியும் போது, அந்த ஊரில் வாழ்ந்த, பல்வேறு காலங்களில் பிறந்த அனைவருக்குமே எப்படி ஒரே ஜாதகம் அமைந்தது? என்பதைக்கூட சிந்திக்க வேண்டாமா?</div><div align="justify"> </div><div align="justify">ஜாதகமும் ஜோதிடமும் மூட நம்பிக்கைகளில் முதலிடம் வகிப்பவை என்பதை உணர்ந்து, முஸ்லிம் சமுதாயம் முற்றிலும் விடுபட வேண்டும். இறை நம்பிக்கையில் இன்னும் உறுதி கொள்ள வேண்டும்.</div><div align="justify"> </div><div align="justify"><span style="font-size:130%;"><strong>தாயத்தும் தகடுகளும்</strong></span></div><div align="justify"> </div><div align="justify">அல்லாஹ்வின் வசனங்களை, அரபி எண்களாக உருமாற்றி அப்படியே சுருட்டி அலுமினியக் குழாய்களில் அடைத்து, கருப்பு நூலில் கோர்த்துக் கழுத்திலும் கைகளிலும் இடுப்பிலும் கட்டிக் கொண்டால், பில்லி சூனியம் பேய் பிசாசுகளை விட்டும் பாதுகாப்புக் கிடைக்கும் என்று சில அரைக் கிறுக்குகள் சொன்னதை நம்பி, ஆயத்துகளைத் தாயத்துகளாக்கித் தொங்க விட்டுக் கொண்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்:</div><div align="justify"> </div><div align="justify"><strong>"எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ நிச்சயமாக அவர் இறைவனுக்கு இணை வைத்துவிட்டார்"</strong> (ஆதாரம்: அஹ்மத்).</div><div align="justify"> </div><div align="justify">தற்காப்புக்காகப் பலரும் கராத்தே கற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டு வெறும் தாயத்துகளில் தற்காப்புத் தேடுபவர்களின் மடமையை என்னவென்பது?</div><div align="justify"> </div><div align="justify">தாயத்துகளை நியாயப் படுத்துவோர், "அதில் குர்ஆன் வசனங்கள்தாமே எழுதப்படுகின்றன" என்று கூறுவர். அப்படியானால், குர்ஆன் ஆயத்துகளைக் கட்டிக் கொண்டு மலம் கழிக்கச் செல்லலாமா? என்று கேட்டால், "ஆயத்துகளுக்கு பதிலாக அரபி எண்கள்தாமே எழுதப்படுகின்றன?" என்று அறிவு(?)ப்பூர்வமான பதில் கேள்வி கேட்பர்.இதிலிருந்து எண்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எண்கள் எப்படி மனிதனைப் பாதுகாக்கும்? என்பதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களாக இருக்கின்றனர்.</div><div align="justify"> </div><div align="justify">சில தாயத்துகளைப் பிரித்துப் பார்த்தால், சினிமா டிக்கட்டுகளும், பஸ் டிக்கட்டுகளும் கூட இருக்கும். இவை அவசரமாகத் தயாரிக்கப்பட்ட, "அர்ஜன்ட்" தாயத்துகள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம் தான்.தங்கள் வயிற்றை நிரப்ப, கயிற்றை விற்று ஏமாற்றுகிறார்கள். இன்னுமா நீங்கள் ஏமாறப் போகிறீர்கள்? ஷிர்க்கை ஏற்படுத்தும் தாயத்துகளை அறுத்து எறியுங்கள்.</div><div align="justify"> </div><div align="justify">இன்னொரு அநாச்சாரக் கலாச்சாரம் உண்டு. அதுதான் அரபி எண்களை குறுக்கெழுத்துப் போட்டிக் கோடுகளில் அடக்கிப் பித்தளைத் தகடுகளை பிரேம் போட்டு மாட்டி வைத்தால், வீட்டுக்குப் பாதுகாப்பு என்று மூளையற்றவர்கள் சொன்னதை நம்பி மூலைக்கு மூலைத் தொங்க விடுவது. </div><div align="justify"> </div><div align="justify">இவர்கள் இறை வணக்கங்களால் தங்கள் இல்லங்களை நிரப்புவதை விட்டு, ஈயம் பித்தளைத் தகடுகளில் தங்கள் ஈமானைப் பறி கொடுத்தவர்கள்; பில்லிச் சூனியத்திலிருந்து பாதுகாக்கும் என்று நம்பிப் படிகாரக் கற்களை வீட்டுப் படிகளில் மாட்டி வைத்தவர்கள்; கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று புத்தி கெட்டுப் போய் பூசணிக்காயைக் கட்டி வைத்தவர்கள்; வீடுகளில் மட்டுமின்றி, வியாபார நிறுவனங்களிலும் இந்த 'அஸ்மா'த் தகடுகளை மாட்டி வைத்தால், வியாபாரம் பெருகும் என்று மூட நம்பிக்கைக் கொண்டவர்கள்.<br /><br />இந்தத் தகடுகளை விற்பனை செய்வோர், தாங்கள் தயாரித்தத் தகடுகள் முழுவதும் விற்றுத் தீரும்படித் தங்களுக்குத் தாங்களே தகடு செய்துக் கொள்ளாமல், கடைக் கடையாய் அலைவதைக் கண்ட பிறகாவது, இது ஏமாற்று வேலை என்பதை உணர வேண்டாமா?இனியேனும், இவைகள் யாவும் இஸ்லாத்திற்கு முரணான மூடப் பழக்கங்கள் என்பதை உணர வேண்டும்</div><div align="justify"> </div><div align="justify">.தரமானப் பொருளும், நியாயமான விலையும், கனிவானப் பேச்சும்தான் வியாபாரத்தைப் பெருக்குமே தவிர, பித்தளைத் தகடுகளும் பிரேம் போட்ட அஸ்மாக்களும் ஒரு போதும் வியாபாரத்தைப் பெருக்காது. மாறாக, பாவப் படுகுழியில் கொண்டு போய் தள்ளும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.</div><div align="justify"> </div><div align="justify"><span style="font-size:130%;"><strong>மரணித்தவர் வீடுகளிலும்</strong></span></div><div align="justify"> </div><div align="justify">அன்றாட வாழ்க்கையின் அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவல் முஸ்லிமின் மரணத்தைக் கூட விட்டுவைக்கவில்லை.</div><div align="justify"> </div><div align="justify">ஒரு மனிதன் இறந்து விட்டால் இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தி அடைய திதி என்றும் திவசம் என்றும் புரோகிதர்ளைக் கொண்டு பிறமதத்தவர் நடத்தும் காரியங்கள் அவர்களுடைய கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் இவை இஸ்லாத்தில் உள்ளவை அல்லவே!</div><div align="justify"> </div><div align="justify">அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த போதே அவர்கள் மிகவும் அன்புடன் நேசித்த அவர்களுடைய மனைவி, நமது அன்னை ஹதீஜா (ரலி) அவர்களும் இன்னும் எத்தனையோ அருமை சஹாபாக்களும் இறந்தனரே! அவர்களுக்கெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 7 ஆம் நாள், 40 ஆம் நாள் என்று எந்த பாத்திஹாவும் ஓதியதாக ஆதாரப்பூர்வமான எந்த நபி மொழியும் நமக்கு அறிவிக்க வில்லையே!</div><div align="justify"> </div><div align="justify">இஸ்லாமியப் பெயர் தாங்கிய புரோகிதர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உருவாக்கிக் கொண்ட இந்த பாத்திஹாக்கள் அனைத்தும் பிறமதக் கலாச்சார ஊடுருவல் தானே தவிர இஸ்லாமியக் கலாச்சாரம் அல்ல.</div><div align="justify"> </div><div align="justify"><span style="font-size:130%;"><strong>வணக்கம் கூறுதல்</strong></span></div><div align="justify"> </div><div align="justify">ஒருவரையொருவர் சந்திக்கும் போது அழகிய முகமன் கூறி அறிமுகம் செய்து கொள்வதற்கு இஸ்லாம், பொருள் பொதிந்த "அஸ்ஸலாமு அலைக்கும் (தங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக)" என்னும் வாக்கியத்தையும் அதனைக் கேட்டவர் மறுமொழியாக, "வஅலைக்குமுஸ்ஸலாம் (அவ்வாறே தங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக)" என்னும் அற்புத பதிலையும் சொல்லித் தருகிறது.ஆனால் சிலர் மாற்று மத நண்பர்களைக் கண்டால், "வணக்கம்" என்று சொல்வதைப் பரவலாகக் காண்கிறோம். </div><div align="justify"> </div><div align="justify">வணக்கம் என்னும் சொல்லின் பொருள், "நான் உங்களை வணங்குகிறேன்" என்பதாகும். மனிதனை மனிதன் வணங்கலாமா? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகிய லாஇலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமாவுக்கே முரணானதல்லவா?, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை" என்னும் திருக்கலிமாவை மன, மெய், மொழியால் மனதாரச் சொன்ன ஒரு முஸ்லிம் இன்னொரு மனிதனை வணங்குவதாகச் சொல்வது மிகப் பெரிய பாவம் அல்லவா?</div><div align="justify"> </div><div align="justify">நம்மில் பலர் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வணக்கம் என்னும் தமிழ்ச் சொல்லும் 'நமஸ்காரம்', 'நமஸ்தே' என்னும் வடமொழிச் சொற்களும் கூட ஓர் அந்நிய கலாச்சாரம்தான். இவை அனைத்தும் வணங்குதல் என்னும் அதே பொருளையே தருபவையாகும்.</div><div align="justify"> </div><div align="justify">இந்த அந்நிய கலாச்சாரம் நம்மில் ஊடுருவியதால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த அழகிய இஸ்லாமியக் கலாச்சாத்தைப் புறக்கணித்தவர்களாகி விடுகிறோம் என்பது ஒரு புறமிருக்க, 'வணக்கம் கூறுதல்' மனிதனை மனிதன் வணங்கும் ஷிர்க் என்னும் இணைவைத்தலுக்கே கொண்டு போய் சேர்க்கும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் நிறுத்த வேண்டும்.</div><div align="justify"> </div><div align="justify">இஸ்லாமிய சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரிந்து போனதற்கு, அந்நியக் கலாச்சார ஊடுருவல்கூட ஒரு காரணம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம். அந்நியக் கலாச்சாரச்சத்தின் ஊடுருவல் காரணமாகத்தான் நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பல்வேறு காரியங்கள் இஸ்லாத்திற்கு முரணானவையாக இருந்தும், அவற்றை இஸ்லாத்தின் பார்வையில் தவறானவை என்று ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்துச் சொல்லியும் ஏற்றுக் கொள்ள பலர் மறுக்கின்றனர்.</div><div align="justify"> </div><div align="justify">இக்கட்டுரையை முடிப்பதற்கு முன் மகத்துவமிக்க மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியை மறுபடியும் ஒரு முறை நினைவு படுத்திக் கொள்வோம்:</div><div align="justify"> </div><div align="justify"><strong>"எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்"</strong> மற்றொரு அறிவிப்பில், <strong>"அவர்களையே சார்ந்தவர்"</strong> என கூடுதலாக இன்னொரு வாசகமும் இடம் பெற்றுள்ளது.</div><div align="justify"> </div><div align="justify">இறைவன் தனது திருமறையில் இயம்பியவைகளையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் பொன்மொழிகளில் போதித்தவைகளையும் உள்ளது உள்ளபடி உணர்ந்து, நம்மில் நுழைந்து விட்ட அந்நிய கலாச்சார ஊடுருவல்களைக் கண்டு பிடித்து களையெடுத்தால், அறியாமையால் ஏற்பட்டுப் போன பிரிவுகளும் பிளவுகளும் நீங்கி ஒன்று பட்ட உயரிய சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் திகழும். இன்ஷா அல்லாஹ். </div><div align="justify"><br />ஆக்கம்: சகோதரர் <strong><span style="font-size:130%;">அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா<br /></span></strong><br />இக்கட்டுரையாசிரியரான தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தியைச் சேர்ந்த சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்கள் தமிழில் இஸ்லாமியக் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார். ஆக்கூர் ஓரியண்டல் மேனிலைப் பள்ளியிலும் பின்னர் உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியிலும் கல்வி பயின்ற இவர் தற்போது சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.<br /><br />'கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்', </div><div align="justify">'புண்ணியபூமிக்கு ஒரு பயணம்', </div><div align="justify">'மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்', </div><div align="justify">'மரணத் தொடக்கம் மறுமை வரைக்கும்' </div><div align="justify">என்ற பெயர்களில் நூல்களை எழுதியுள்ள இவர், </div><div align="justify"><a href="http://masdooka.blogspot.com/">தமிழ் இஸ்லாமியத் தாரகை</a> </div>என்ற பெயரில் வலைப்பதிவையும் நடத்தி வருகிறார்.<br /><br /><div style="text-align: justify;">2007ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! - சத்தியமார்க்கம்.காம்</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-91391851091763363662012-02-08T01:23:00.000+03:002012-02-11T00:49:06.428+03:00நான் கண்ட நீதிபதி- ஜஸ்டிஸ் ஜி.எம்.அக்பர் அலி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-0a_D8wnpGRA/TzGiPMQ1zRI/AAAAAAAAApQ/jvB8uHsvqho/s1600/akbar_ali.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/-0a_D8wnpGRA/TzGiPMQ1zRI/AAAAAAAAApQ/jvB8uHsvqho/s400/akbar_ali.jpg" width="321" /></a></div>
<div class="MsoNormal">
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 24pt; line-height: 115%;"> </span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">கல்வியும் செல்வமும் ஒன்று
சேராது என்று சிலர் சொல்வர். இக்கருத்தில் எமக்கு உடன்பாடில்லை. கல்வியும், செல்வமும்,
கனிவான பேச்சும், அழகிய பண்பாடும், இரக்க மனப்பாண்மையும்,
ஈகைகுணமும், இவை அனைத்தும் ஒரு சேர அமையப்
பெற்ற ஒருவரை நாம் வாழும் சமகாலத்தில் நான் கண்டேன். ஆம் அவர் தான் <b style="mso-bidi-font-weight: normal;">நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.எம்.அக்பர் அலி</b></span><b style="mso-bidi-font-weight: normal;"><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 24pt; line-height: 115%;">.</span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">இவர் படிக்கும் காலத்தில்,
தம் பிள்ளைகள் ‘இவரைப்போல் படிக்க வேண்டும்’ என, எங்கள் உற்றார் சொல்வர். இவர் உயர்
பதவிகளை அடைந்த காலத்தில் தம் பிள்ளைகள் ‘இவரைப் போல் உயர வேண்டும்’ என எங்கள் உறவினர்
சொல்வர். ‘வாழ்ந்தால் இவரைப் போல் வாழ வேண்டும்’
என இப்போது எல்லோரும் சொல்வர். </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">செல்வந்தர்கள் பலருக்கு செல்வச்
செருக்கு இருக்கும். பெரும் தொழில் அதிபருக்கு மகனாகப் பிறந்து செல்வச் செழிப்பில்
வாழ்ந்தும் ‘செல்வச் செருக்கு’ என்னும் வார்த்தைக்கு இவருக்கு இன்று வரை பொருள் தெரியாது.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">படித்துப் பட்டம் பெற்ற பலருக்கு
கர்வம் இருக்கும். உயர் கல்வி பயின்ற இவரிடம் கர்வத்தை கடுகளவும் எவரும் காணமுடியாது.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">உயர்பதவி வகிக்கும் பலரிடம்
ஆணவமும் அகம்பாவமும் இருக்கும். ஆனால் உயர்நீதி
மன்ற நீதிபதியாக, புகழின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் இவரிடம் அமைதியும் அடக்கமும்
தான் இருக்கும்.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">அனைவரையும் மதிக்கும் அழகிய
பண்பாடு, அனைவரும் மதிக்கும் இந்த அற்புத மனிதருக்குக் கைவந்த கலை. இது கொஞ்சம் அதிகப்
புகழ்ச்சி அல்லவா? என்று கேட்பவர்கள் இவரைப் பற்றித் தெரியாதவர்களாக இருக்கும். </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">உறவினர் இல்லங்களுக்கு வருகை
தரும்போது இவர் கேட்கும் முதல் விஷயம் குழந்தைகள் படிப்பைப் பற்றித் தானிருக்கும்.
படிக்கும் பிள்ளைகளை மிகவும் உற்சாகப் படுத்துவார். அதிலும் குறிப்பாக உயர்நிலைக் கல்வி
கற்கும் காலத்தில் தொடர்ந்து கல்லூரிப் படிப்பைத் தொடர அதிகமதிகம் வலியுறுத்துவார். </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">பொருளாதார ரீதியில் பின்
தங்கிய பல மாணவர்களுக்கு மேற்கல்வியைத் தொடர பொருளாதார உதவிகளைச் செய்துள்ளார். இன்றளவும்
தொடர்ந்து செய்து வருகின்றார். இவர் மூலம் பயனடைந்த பல மாணவ மாணவியரும் மற்றும் அவர்கள்
தம் பெற்றோரும் இவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">மார்க்க வணக்க வழிபாடுகளில்
மிகவும் பேணுதலானவர்.சில ஆண்டுகட்கு முன்னர்
புனித ஹஜ்ஜையும் நிறைவேற்றினார். </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">எந்த நேரமும் சிரித்த முகத்துடன்
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரிடமும் அன்பொழுகப் பேசுவார். தம்மைச் சார்ந்தவர்கள்
மட்டுமின்றி யார் வந்து உதவி கேட்டாலும் பிரதிபலன் எதிர்பாராமல் செய்து கொடுப்பார்.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">உயர்பதவியில் இருப்பவர்கள்
சிறப்பு விருந்தினராக ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப் பட்டால் பகட்டும் ஆடம்பரமும்
நிறைந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வருகை தருவர். ஆனால் நிகழ்ச்சியின் ஆடம்பரத்திற்காக
அல்லாமல் அவசியத்திற்கே முக்கியத்துவம் அளிப்பார்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-OMsWic2n97s/TzGjimkAtzI/AAAAAAAAApo/SmeQKaby8vA/s1600/fina_meets_justice.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="385" src="http://2.bp.blogspot.com/-OMsWic2n97s/TzGjimkAtzI/AAAAAAAAApo/SmeQKaby8vA/s640/fina_meets_justice.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">(தமிழ் நாடு கலாச்சாரப் பேரவையின்
சிறப்பு விருந்தினராக குவைத்தில்)</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-yRsBBk6-0ao/TzGljJ-PtXI/AAAAAAAAAp4/BlcQDUNZRBY/s1600/16IN_MADURAI_G_M__AK_32190f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="434" src="http://1.bp.blogspot.com/-yRsBBk6-0ao/TzGljJ-PtXI/AAAAAAAAAp4/BlcQDUNZRBY/s640/16IN_MADURAI_G_M__AK_32190f.jpg" width="640" /></a></div>
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">(திருமங்கலம் அருகே கப்பலூர்
கிராமத்தில் குழந்தைகள் விழாவில் சிறப்பு விருந்தினராக) </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">தம் உறவினர்களில் சாதாரணமானவர்கள் வீட்டுக்குக் கூட சர்வ சாதாரணமாக
வந்தமர்ந்து இயல்பாகப் பேசி அவர்கள் இதயத்தைக் குளிர வைப்பார்.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;"> தாம் வகிக்கும் பதவி காரணமாக தொலைதூர ஊர்களில் இருந்தாலும்,
தம் உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் இயன்றவரை வந்திருந்து சிறப்பித்து,
அழைத்தவரை கண்ணியப்படுத்துவார்</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">சில ஆண்டுகளுக்கு முன்னர்
அய்யம்பேட்டையில் நடைபெற்ற உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சியொன்றில், சிறப்பு விருந்தினராக
இவர் கலந்து கொண்ட போது, கூடிநின்ற பெரும் கூட்டத்திற்கு மத்தியில் என்னிடம் வந்து
‘தம்பி உங்களைத் தான் தேடிக் கொண்டிருந்தேன் எனது இரு மகன்களுக்கு ஆதில் என்றும் ஆகில்
என்றும் பெயர் சூட்டியுள்ளேன். இவற்றின் பொருள் என்ன? சரியான உச்சரிப்பென்ன?’ எனக்
கேட்டு தெளிவு படுத்திக் கொண்ட போது கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் இந்த மாபெரும் அறிஞர் ஒரு சாதாரணமானவனாகிய
என்னை கௌரவப் படுத்திய நிகழ்ச்சி, என்றென்றும் எமக்கு நினைவிருக்கும்.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 16pt; line-height: 115%;">‘உயர்நீதி மன்ற நீதிபதி’
என்னும் மிக உயர்ந்த பதவி வகித்தாலும், பரம்பரைச்
செல்வச் செழிப்பில் மிதந்தாலும், உயர் மட்டத்தில் மேன்மக்களோடு வாழ்ந்தாலும், உற்றார்
உறவினர், உற்ற நண்பர்கள், ஊர்மக்கள், ஏழை எளியோர் எல்லோரிடமும் சகஜமாகப் பேசி, அனைவரின்
சுக துக்கங்களிலும் பங்கு கொண்டு, அனைவரிடமும் நற்பெயர் எடுத்து அனைவர் இதயங்களிலும்
இடம் பிடித்து, பிடித்த இடத்தை இன்றளவும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கும் நீதிபதி
அவர்கள் எல்லா நலமும் பெற்று இறையண்புக்கு உரியவராக வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன். </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-CisW_XHpNgU/TzLzD7rYnwI/AAAAAAAAAqI/FfLu08EAlUc/s1600/GM-1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="433" src="http://3.bp.blogspot.com/-CisW_XHpNgU/TzLzD7rYnwI/AAAAAAAAAqI/FfLu08EAlUc/s640/GM-1.JPG" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-cW3zOgys4ZQ/TzWQZZ1v7II/AAAAAAAAAqY/TEvUpO_1iTg/s1600/gm-3.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="408" src="http://2.bp.blogspot.com/-cW3zOgys4ZQ/TzWQZZ1v7II/AAAAAAAAAqY/TEvUpO_1iTg/s640/gm-3.JPG" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
(மேலத்திருப்பூந்துருததி மத்ரஸா மன்பவுல் ஹிதாயா நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக) </div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-17975727232118403462012-02-08T00:08:00.000+03:002013-10-15T21:33:42.537+03:00திருப்பந்துருத்தி பாப்பு ஹஜ்ரத்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-dKBhx49fRGI/Ul2KczfCjqI/AAAAAAAAAyU/7QTclwo9asw/s1600/Bappu+hazrath.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-dKBhx49fRGI/Ul2KczfCjqI/AAAAAAAAAyU/7QTclwo9asw/s1600/Bappu+hazrath.jpg" height="320" width="264" /></a></div>
மேலத்திருப்பந்துருத்தி வாழ் முஸ்லிம்களில் கடந்த இரண்டு தலைமுறையினருக்கு
பாப்பு ஹஜ்ரத் அவர்களைத் தெரியாமலிருக்க முடியாது. பெரியப் பள்ளிவாசல்
தலைமை இமாமாகவும் மதரஸா மன்பவுல் ஹிதாயாவின் தலைமை ஆசிரியராகவும் அரை
நூற்றாண்டு காலம் அதாவது 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய இந்த
மாமேதையை யாரால் மறக்க முடியும்?<br />
<br />
பாப்பு ஹஜ்ரத் என்றும், பாப்புபாய் ஹஜ்ரத் என்றும் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்த மாமேதையின் இயற்பெயர் <b>அப்துல்லாஹ் ஹஜ்ரத். </b>ஜனாப்
அப்துல் மலிக், மௌலவி முஹம்மது மன்சூர், மெளலவி முஹம்மது அத்ஹர்
ஆகியோரின் தந்தையாகிய இப்பெரு மேதை வசித்தது பெரியப்பள்ளிவாசல் தெருவின்
57 ஆம் எண் வீட்டில். <br />
<br />
எண்ணற்ற அறிஞர் பெருமக்களைத் தன்னகத்தே கொண்ட பேறு பெற்ற நமதூர் இந்த அறிஞரையும் ஏற்றிப் போற்றியது என்பதை மறுப்பதற்கில்லை.<br />
</div>
<div style="text-align: justify;">
முஅத்தின் இகாமத் சொல்லத் தொடங்கும்போது முன் வரிசையில் ஓரமாக
அமர்ந்திருக்கும் ஹஜ்ரத் அவர்கள் எழுந்து, மிஹ்ராபை சென்றடைவதற்குள்
கண்இமைக்கும் நேரத்தில் தலைப்பாகை கட்டுவார்களே! நேரில் கண்டு
ரசித்தவர்களுக்குத்தான் அந்த நேர்த்தி தெரியும்.<br />
<br />
ராஜநடை என்று
சொல்லக் கேட்டிருப்போம் ஆனால் எந்த ராஜாவின் நடையையும் நாம் நேரில்
பார்த்ததில்லை. ஆனால் பாப்பு ஹஜ்ரத் அவர்களின் நடையழகை பார்த்தவர்களுக்குத்
தான், 'ராஜ நடை' என்னும் வார்ததையின் பொருள் புரிந்திருக்கும்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
தெருவில் அவர்கள் நடந்து வரும்போது, திறந்திருக்கும் வீட்டுக் கதவுகளும்
சன்னல் கதவுகளும் மூடிக் கொள்ளும். வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்திருக்கும்
பெரியவர்கள் கூட எழுந்து இறங்கி வந்து தெருவில் நின்று கொள்வர்.
இவ்வளவுக்கும் அவர்கள் நடக்கும் போது வலப்புறம் இடப்புறம் எங்குமே திரும்ப
மாட்டார்கள். அவர்களின் பார்வை தரையை நோக்கி மட்டுமே இருக்கும்.<br />
<br />
வெள்ளிக்கிழமைத்
தொழுகைக்கு வரும்போது அவர்கள் அணியும் நீண்ட அங்கி அழகு. மிக நேர்த்தியாக
அவர்கள் அணியும் தலைப்பாகை தனி அழகு. கம்பீரமாக பள்ளிவாசலில் அவர்கள்
நுழையும் அழகே அழகு<br />
<br />
கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஏகத்துவக் காற்றை
நாமெல்லோரும் சுவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏகத்துவ எழுச்சி
ஏற்பட்டிருக்காத அந்தக் காலகட்டத்திலேயே அவர்களால் இயன்ற அளவு
மூடப்பழக்கங்களை கண்டித்திருக்கிறார்கள். கல்யாணப் பந்தலுக்கு கால்நடுவது
போன்ற கழிசடைச் செயல்களுக்கெல்லாம் பாத்திஹா ஓதக் கூப்பிட்டால்
வரமாட்டார்கள். <br />
<br />
இமாமாக நின்று தொழுகை நடத்தும்போது, தக்பீர்
கட்டும்போதும், ருகூவின் போதும், சஜ்தாவின் போதும் சரியான ஏற்ற
இறக்கத்துடன் அல்லாஹ் அக்பர் சொல்லும் அழகை இது வரை வேறு எந்த இமாமிடமும்
நாம் கண்டிருக்க முடியாது. அதிலும் கடைசி இருப்பில் அமரும்போது சொல்லும்
அல்லாஹ் அக்பர் மூலம், தாமதமாக வருபவர் அது கடைசி இருப்பு என்பதை உணர்ந்து
கொள்ள முடியும்.<br />
<br />
புனித இரவுகளில் பள்ளியில் நடைபெறும் 'ராத்தீபு'
என்னும் திக்ரு மஜ்லிஸை பாப்பு ஹஜ்ரத் அவர்கள் வழிநடத்தும் விதமே தனி.
ராத்தீபைத் தொடங்கி வைத்து இருவரிசகளுக்கும் நடுவில் நடந்து வந்து அனைவரும்
ஒரே சீராகச் சொல்கின்றனரா? என கவனிப்பார்கள். சரியாகச் சொல்லாதவர்கள்
முன்பு நின்று அவர் சரியாகச் சொல்லும் வரை அந்த இடத்தை விட்டு நகர
மாட்டார்கள். இப்போதெல்லாம் திக்ரு மஜ்லிசில் சிறுவர்களைத் தான்
காணமுடிகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை
கூட்டத்தில் பள்ளி நிரம்பி வழியும்.</div>
<div style="text-align: justify;">
<br />
வயதில் மூத்த பெரியவர்கள் மட்டுமல்ல வசதி படைத்த செல்வந்தர்களும் கூட
ஹஜ்ரத் அவர்களின் கட்டளைக்கு, மகுடிக்கு மயங்கிய நாகம் போல் கட்டுண்டு
கிடப்பார்கள். இப்படிப்பட்ட ஹஜ்ரத்மார்களை இவர்களுக்குப்பின் இதுவரை இந்த
ஊர் கண்டதில்லை.<br />
<br />
50 ஆண்டு காலம் ஒரே பள்ளியில் இமாமாகவும் குர்ஆன்
போதிக்கும் ஆசிரியராகவும் தொடர்ந்து பணிபுரிந்த அவர்கள், மிகக்குறைந்த
வருமானத்தில் தன்மானத்துடன் காலம் கழித்திருக்கிறார்கள். 3 ஆண்கள் 7
பெண்கள் ஆக 10 குழந்தைகள் நிறைந்த அந்தக் குடும்பம் வல்ல இறைவனின் மாபெரும்
மறைமுக பரக்கத்தால் எப்போதும் களைகட்டியிருக்கும்.<br />
<br />
அந்தக்
காலகட்டத்தில் ஹஜ்ரத்மார்கள் மலேசியா, சிங்கப்பூர் என்று தங்கள் வறுமையைப்
போக்கிக் கொள்ள பயணம் புறப்படுவார்கள். ஆனால் பாப்பு ஹஜ்ரத் அவர்கள் தம்
வாழ்நாளில் ஒருபோதும் ஹஜ் பயணத்தைத் தவிர வேறெந்த வெளிநாட்டுப் பயணமும்
மேற்கொண்டதில்லை. தன்மானத்தை இழந்து எந்த செல்வந்தர் முன்பும் கைகட்டி
நின்றதில்லை. இன்னும் சொல்லப்போனால் பாப்பு ஹஜ்ரத் அவர்கள் ஒரே ஒரு முறை
மலேசியா சிங்கப்பூர் சென்றிருந்தால் அந்த நாடுகளில் வாழும்
நமதூர்க்காரர்கள் மட்டுமே இலட்சக் கணக்கில் வாரிவழங்கி ஹஜ்ரத் அவர்களைக்
குளிர வைத்திருப்பர்கள்.ஏனெனில் அனைவருமே ஹஜ்ரத் அவர்களிடம் குர்ஆன் பயின்ற
மாணவர்கள் தான். ஆனால் இந்தத் தன்மானச் சிங்கம் ஒருபோதும் யாரிடமும்
தலைவணங்கி பழக்கப்பட்டதில்லை.<br />
<br />
ஹஜ் என்பது வசதி படைத்த செல்வந்தர்கள்
மட்டுமே நிறைவேற்றக் கூடியது. சாமானிய மக்களால் நினைத்துக் கூட பார்க்க
முடியாத ஒன்று. வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து தம் வாழ்நாட்களைக் கழித்த
இந்த ஹஜ்ரத் அவர்களும் அவர் தம் துணைவியாரும் புனித ஹஜ்ஜை நிறைவேற்றும்
பெரும் பேற்றைப் பெற்றதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.ஏனெனில் வாய்ப்பை
ஏற்படுத்தித் தந்தவன் வல்ல இறைவன் அல்லவா! <br />
<br />
நமதூரின் நல்ல மனம்
படைத்த இரு தனவந்தர்கள் முறையே பாப்பு ஹஜ்ரத் அவர்களுக்கும் அவர்கள் தம்
துணைவியாருக்கும் தாங்கள் பொறுப்பேற்று ஹஜ் பயணம் மேற்கொள்ள வைத்தார்கள்.
இறையடி சேர்ந்து விட்ட அவ்விரு நல்லடியார்களின் பாவங்களை அல்லாஹ்
மன்னித்து சுவனபதியில் ஹாஜிகளின் கூட்டத்தில் அவர்களைச் சேர்த்து
வைப்பானாக. ஆமீன்.<br />
<br />
பெரியப் பள்ளிவாசலின் இமாமாக மட்டுமின்றி
நமதூரின் மத்ரஸா மன்பவுல் ஹிதாயாவில் திருக்குர்ஆனைக் பயிற்றுவிக்கும்
பேராசிரியராகவும் பாப்பு ஹஜ்ரத் அவர்கள் பணியாற்றினார்கள். <br />
<br />
சற்றொப்ப
அரை நூற்றாண்டு காலம் நமதூர் பெரியப் பள்ளிவாசல் சுற்று வட்டாரத்தில்
பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் இன்று
திருக்குர்ஆனைத் திருத்தமுற பிழையின்றி ஓதுகிறார்கள் என்றால் அந்தப்
புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர் கண்ணியமிகு பாப்பு ஹஜ்ரத் அவர்கள்
தான் என்றால் அது மிகையாகாது.<br />
<br />
அல்லாஹ்வின் திருமறையை அழகுற ஓதும்
அனைத்து உள்ளங்களும் அந்த மாமேதையை நினைக்காமலிருக்க முடியாது. நமதூரில்
இன்றளவும் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் புண்ணியர்களின் நன்மையில் ஒரு
பகுதி இந்த கண்ணியத்திற்குரியவருக்கு இறைவனிடம் கிடைத்துக் கொண்டே
இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.<br />
<br />
மாணவ மாணவியருக்கு
திருக்குர்ஆனைப் பயிற்று வித்த இந்த மாமேதை அத்தோடு றிறுத்திக் கொள்ள
வில்லை. தமது குழந்தைப் பருவத்தைக் குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ளாமல்
வீணாக்கி கைசேதப் பட்ட இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் பக்கம் தம் கவனத்தை
திருப்பினார்கள். </div>
<div style="text-align: justify;">
<br />
ஆம் தமிழகத்தின் எந்த ஊரிலும் இல்லாத ஒரு நடைமுறையை நமதூரில் ஏற்படுத்தினார்கள், ஆம். அது தான் <b>'தர்த்தீலுல் குர்ஆன்'</b> என்னும் ஓர் அதிஅற்புதத் திட்டம். <br />
<br />
ஒவ்வொரு
ஆண்டும் ரஜப் மாதம் முதல் பிறையில் தொடங்கி சுமார் இரண்டு மாத காலம் இரவு
இஷாத் தொழுகைக்குப் பின்னர் பள்ளியில் வைத்து ஆர்வமுள்ள பெரியவர்கள்
மற்றும் இளைஞர்களுக்கு திருக்குர்ஆனை பிழையின்றி ஓதப் பயிற்சி
அளித்தார்கள். அதன் மூலம் பயன் பெற்ற பெரியவர்களும் இளைஞர்களும் ஏராளம்.<br />
<br />
இந்த
மாமேதையின் நன்முயற்சியில் உருவான இந்த நல்லத் திட்டத்தை இன்றளவும்
தொடர்ந்து கடைப்பிடித்து வருவது இந்தப் பேரறிஞரை ஒருபோதும் நமதூர்
ஜமாஅத்தினர் மறக்கவில்லை என்பதற்கு ஓர் அத்தாட்சி.<br />
<br />
திருக்குர்ஆனை
ஓதக் கற்கும் ஆரம்ப மாணவ மாணவியருக்குப் பயன்படும் விதத்தில் அரபி
மொழிப்பாடத்தை மிக அழகாகவும் எளிமையாகவும் கற்பிக்க பாப்பு ஹஜ்ரத் அவர்கள்
உருவாக்கிய <b>'தஃலீமுல் கவாயித்'</b> என்னும் சின்னஞ்சிறு கையேடு அரபி
மொழி போதனையில் ஓர் அரிய சாதனை எனலாம். நமதூரில் மட்டுமின்றி தமிழகத்தின்
பல்வேறு ஊர்களிலும் இன்றளவும் அரபி ஆரம்பப் பாடசாலை மாணவ மாணவியருக்குப்
பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. <br />
<br />
தமது சொந்த அனுபவத்தின் மூலம்
உருவாக்கிய இந்த அற்புத நூலின் வெளியீட்டு உரிமையை, தாம் வாழும்போதே நமதூர்
முஸ்லிம் ஜமாஅத்துக்கு மனமுவந்து அர்ப்பணித்த இந்த மாமேதை பெருமைக்கும்
புகழுக்கும் அப்பாற்பட்டவர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br />
சின்னஞ்சிறு குழந்தைகள் எடுத்துச் செல்ல எளிதாக <b>அலிஃ பே</b> அட்டையை வடிவமைத்த பெருமையும் இந்த அறிஞரையே ச்சாரும்.<br />
<br />
<b>ஸிம்துஸ்ஸிப்யான், ஃபராயிலுல் முஃமினீன், துஹ்ஃபத்துல் அத்ஃபால், </b> போன்ற அரபுத் தமிழ் நூல்களை வாசிக்க ஆரம்பப் பாடத்தைக் கற்றுத்தரும் <b>'அரபுத்தமிழ் பாடம்'</b>
என்னும் நூலையும் இவர்கள் தான் உருவாக்கினார்கள். இந்த நூல்கள் எல்லாம்
இவர்கள் மறைவுக்குப் பின் மறுபதிப்புச் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.<br />
<br />
ரமளானில் தராவீஹ் தொழுகைக்குப் பின் நமதூரில் வழக்கமாக ஓதப்படும் துஆக்களைத் தொகுத்து <b>'தராவீஹ் தொழுகை'</b> என்னும் சிறு நூலை வெளியிட்டிருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br />
முஸ்லிம் குடும்பத்தினர் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளை <b>'முஸ்லிம் வீட்டார்'</b> என்னும் பெயரில், சுவரொட்டி போல பெரிய பிரசுரமாக வெளியிட்டிருக்கிறார்கள்.<br />
<br />
மத்ரஸாவில்
மாணவர்களிடம் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்கள். தவறு செய்த
மாணவர்களுக்குத் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். இருந்தாலும் எந்தப்
பெற்றோரும் அது குறித்துக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஏனெனில், பாப்பு
ஹஜ்ரத் அவர்களின் கண்டிப்பும், தண்டணையும், நியாயமானதாகத் தானிருக்கும்
என்பது அனைத்துப் பெற்றோருக்கும் தெரியும்.ஊரையே நடுங்கவைத்த நிர்வாகிகள்
கூட பாப்பு ஹ்ரத் அவர்களிடம் கனிவோடும் பரிவோடும் தான் நடந்து கொள்வர். <br />
<br />
ஐவேளைத்
தொழுகை நடத்தும் இமாமாகவும், மத்ரஸாவின் ஆசிரியராகவும் நீண்ட நெடுங்காலம்
அவர்கள் பணிபுரிந்த போதும், உடல்நிலை காரணமாகவோ சொந்த அலுவல் காரணமாகவோ
இவர்கள் விடுப்பு எடுத்து யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது.<br />
<br />
மேலத்திருப்பந்துருத்தி
வரலாற்றில் எத்தனையோ ஆலிம்கள் இடம் பெற்றிருக்கலாம் ஆனால் அப்பழுக்கற்ற
வாழ்க்கை வாழ்ந்து, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்து, ஆயிரமாயிரம்
அறிஞர் பெருமக்களை உருவாக்கி விட்டு, அமைதியாய் நமதூர் கப்ருஸ்தானில்
மீளாத்துயில் கொண்டுள்ள இந்த மார்க்க அறிஞருக்காக நமதூர் மக்களாகிய நாம்
செய்ய வேண்டிய நன்றிக்கடன் ஒன்று ஒண்டு.<br />
<br />
மேலத்திருப்பந்துருத்தி
வாழ் மக்களே! மேன்மைமிகு முஸ்லிம்களே! வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
உங்களுக்கு மிக அருகாமையில் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த அறிஞரின்
மண்ணறைக்குச் சென்று அன்னாரின் மறுமைப் பேற்றுக்காக அல்லாஹ்விடம்
பிரார்த்தியுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br />
அரபுநாடுகளில் வாழும் அனபர்களே! விடுப்பில் நீங்கள் தாயகம் வரும்
போதெல்லாம் ஒரு முறையேனும் இவர்களின் கப்ரை சியாரத் செய்து இவர்களுக்காக
வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.<br />
<br />
இறைவா! உனது இன்பத் திருமறையை
திருத்தமுடன் ஓத எங்களுக்குப் பயிற்சி அளித்த எங்கள் மேன்மை மிகு ஆசான்
பாப்பு ஹஜ்ரத் அவர்களின் மண்ணறை வாழ்வை மகிழ்வாக்கி வைத்து, மறுமை வாழ்வை
சிறப்பாக்கி வைத்து, அவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் கூட்டத்தில் எங்கள்
உஸ்தாத் அவர்களையும் சேர்த்து வைப்பாயாக ஆமீன்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
கட்டுரை ஆக்கம்: சங்கைக்குரிய பாப்பு ஹஜ்ரத் அவர்களின் பணிவுள்ள மாணவன்<b><span style="font-size: medium;"> 'திருப்பந்துருத்தி மஸ்தூக்கா'</span></b><br />
<br />
<a href="http://www.mylivesignature.com/" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;" target="_blank"><img src="http://signatures.mylivesignature.com/54488/89/9A3EC1FCAE4FB6C67B9C20ACA56AB442.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /></a></div>
மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-53767647919875735312012-02-08T00:02:00.000+03:002012-02-08T00:05:35.949+03:00ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும், தீர்வு என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://www.satyamargam.com/1162">சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு</a><br />
<div align="justify">
---------------------------------------------------------------------<br />
<b>ஊடகங்களின் நன்மையும் தீமையும்</b></div>
<div align="justify">
<br />
பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு
சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின்
ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன்
அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி,
தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது.
ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.</div>
<div align="justify">
<br />
மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர
பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை
ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை
மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை
தரும் உண்மை.</div>
<div align="justify">
<br />
அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம்
பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு
நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன.
ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில்
ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன.
சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.</div>
<div align="justify">
<br />
<b>மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்</b><br />
<br />
உலகம் முழுவதும் <a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1059&Itemid=278">இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக</a>ப்
பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்
குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள்
குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன. </div>
<div align="justify">
நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் <a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=45&Itemid=278">ஊறிப்போன மேற்குலகு</a>ம்
அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட
முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக
ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல்
இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து
இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம்
காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து
நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில்
வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். </div>
<div align="justify">
<br />
இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின்
மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான <a href="http://palanibaba.blogspot.com/2008/12/blog-post_2304.html">காரணம்</a> வேறுவிதமானது. </div>
<div align="justify">
<br />
ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு
கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில்
வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும்
வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி,
சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு
அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து
நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள்
மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும்
திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம்
அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின்
எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.</div>
<div align="justify">
<br />
வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி
காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார
சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி
இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப்
பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது <a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=135&Itemid=189">கொள்கையாகவே</a> கொண்டுள்ளன.</div>
<div align="justify">
<br />
<b>ஊடகங்களின் பாரபட்சமான போக்கு</b><br />
<br />
தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை.
தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்
கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின்
பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால்
அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் <a href="http://www.islamkalvi.com/portal/?p=1151&cpage=1">அடைமொழி</a>யுடன்
அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால்
'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன்
வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.</div>
<div align="justify">
<br />
எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள்
முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக
வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு
மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில்
முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில
நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும்
தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி
தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை
மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.</div>
<div align="justify">
<br />
முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப்
பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்';
ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும்
வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த
காவல்துறையும் படம் காட்டாது. </div>
<div align="justify">
<br />
பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும்
திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.</div>
<div align="justify">
<br />
<b>இதற்கான தீர்வு என்ன?</b><br />
<br />
"<a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=989&Itemid=221">நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை</a>"
இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான்
என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி
ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித்
தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.</div>
<div align="justify">
<br />
இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு
வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும்
வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான்
அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.</div>
<div align="justify">
<br />
<b>1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்</b></div>
<div align="justify">
<br />
முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித்
தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும்
தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள்
இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். </div>
<div align="justify">
<br />
நாளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில்
தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து
வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி
வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு
வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக்
கொள்ளலாம்.</div>
<div align="justify">
<br />
<b>2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு</b></div>
<div align="justify">
<br />
தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச்
செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக
வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.</div>
<div align="justify">
<br />
நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு
வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய
கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.</div>
<div align="justify">
<br />
சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு <a href="http://christianpaarvai.blogspot.com/2008/11/blog-post_25.html">கிறிஸ்தவ சகோதரர்</a>
இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது
மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே
இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது. </div>
<div align="justify">
<br />
நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள்
உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும்,
இன்ஷா அல்லாஹ்.</div>
<div align="justify">
<br />
இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?</div>
<div align="justify">
<br />
<b>3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்</b></div>
<div align="justify">
<br />
சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும்
நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில்
அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை
நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும்
அதிக கவனம் செலுத்த வேண்டும்.</div>
<div align="justify">
<br />
<b>4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்</b></div>
<div align="justify">
<br />
இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும்
உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி
வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக
அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை
எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில
ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.</div>
<div align="justify">
<br />
உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல்
பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை
இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் <a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1001&Itemid=278">ஊடகவியாலளர்கள்</a>
அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம்
ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.</div>
<div align="justify">
<br />
ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு
கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை
வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை.
நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை
உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.</div>
<div align="justify">
<b>5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்</b></div>
<div align="justify">
<br />
நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள்,
பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக்
கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன்
மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள
ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக
உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது
தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில்
சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.</div>
<div align="justify">
<br />
<b>6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்</b></div>
<div align="justify">
<br />
நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும்
எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான
தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம்
எழுத வேண்டும். </div>
<div align="justify">
<br />
எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை
நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு
தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை
நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?</div>
<div align="justify">
<br />
நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும்
(பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல்
தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம்
தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு
சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும்
எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே
வாசிப்பார்கள்.</div>
<div align="justify">
<br />
<b>7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்</b></div>
<div align="justify">
<br />
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி
மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும்
தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட
அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள்
துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு
கொள்வார்கள் அல்லவா?</div>
<div align="justify">
<br />
<b>8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்</b></div>
<div align="justify">
<br />
சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும்
ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம்
வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட
வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல
வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள்
பெறலாம்.</div>
<div align="justify">
<br />
<b>9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்</b></div>
<div align="justify">
<br />
அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும்
பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம்.
அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்
கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.</div>
<div align="justify">
<br />
<b>10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்</b> </div>
<div align="justify">
<br />
கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும்
உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது
கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள்
குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின்
உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம்
நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத
நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் <a href="http://nitharsanam.net/favicon.ico">இலவச எஸ்எம்எஸ்</a> சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.</div>
<div align="justify">
<br />
<b>11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்</b></div>
<div align="justify">
<br />
ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.</div>
<div align="justify">
<br />
ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக்
கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும்,
நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட
மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம்
சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும்
ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.</div>
<div align="justify">
<br />
ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள்
குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது
பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத்
தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.</div>
<div align="justify">
<br />
செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத்
கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய
உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன்
மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர்.</div>
<div align="justify">
பெரும்பாலான
பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு
வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள்
சென்றடையும்.</div>
<div align="justify">
<br />
<b>12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்</b></div>
<div align="justify">
<br />
டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு
ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு
கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக
டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய
கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின்
பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி
நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க
வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை
முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற
பத்திரிகைகளை முற்றிலுமாகப் <a href="http://masdooka.wordpress.com/feed">புறக்கணிக்க வேண்டும்</a>.</div>
<div align="justify">
<br />
<b>13.மக்கள் சக்திப் போராட்டம்</b></div>
<div align="justify">
<br />
நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள
ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும்.
இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை
அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய
ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.</div>
<div align="justify">
<br />
சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க்
பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த
தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு
அஞ்சி அவர்கள் <a href="http://masdooka.wordpress.com/feed">பகிரங்க மன்னிப்புக் கேட்டது</a>ம் நினைவிருக்கலாம்.</div>
<div align="justify">
<br />
<b>14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்</b></div>
<div align="justify">
<br />
ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு
வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த
வேண்டும்.</div>
<div align="justify">
<br />
இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை,
தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும்
மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.</div>
<div align="justify">
<br />
நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில்
குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல்
இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில
கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற
தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல்
இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம்,
பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத்
தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை
இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.</div>
<div align="justify">
<br />
இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன்
இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய
எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.</div>
<div align="justify">
<br />
சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க <a href="https://www.blogger.com/start">வழிவகை</a> செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் <a href="http://www.islamkalvi.com/general/muslims_and_media.htm">முறியடிக்க வேண்டும்</a>.</div>
<div align="justify">
<br />
நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப்
படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும்
பதிவுகளைத் திரட்டும் <a href="http://www.tamilmanam.net/user_blog_submission.php">தமிழ்மணம்</a>, <a href="http://www.tamilveli.com/submit-agr.php">தமிழ்வெளி</a>, <a href="http://www.thiratti.com/reg.php">திரட்டி</a>,
போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது
பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும்
சென்றடையும்.</div>
<div align="justify">
<br />
வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால்
உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும்.
பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.</div>
<div align="justify">
<br />
பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம்
குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன்
குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.</div>
<div align="justify">
<br />
இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான <a href="http://abumuhai.blogspot.com/">அபூமுஹை</a>, <a href="http://nalladiyar.blogspot.com/">நல்லடியார்</a>, <a href="http://copymannan.blogspot.com/">இறைநேசன்</a>, <a href="http://wahhabipage.blogspot.com/">வஹ்ஹாபி</a>, <a href="http://tamilislam-qa.blogspot.com/">ஜீஎன்</a>, <a href="http://ibnubasheer.blogsome.com/">இப்னுபஷீர்</a>, <a href="http://maricair.blogspot.com/">மரைக்காயர்</a>, <a href="http://islamicdress.blogspot.com/">அபூசாலிஹா</a>
போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர்.
இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும்
அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா
வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான
தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.</div>
<div align="justify">
<br />
<b>15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்</b> </div>
<div align="justify">
<br />
மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில்
ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான
விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள்
எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும்
திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.</div>
<div align="justify">
<br />
இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே
இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே
சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும்
அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை
இத்தகைய <a href="http://majinnah.blogspot.com/2008/11/blog-post_20.html">வலைப்பதிவர்</a>களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.</div>
<div align="justify">
<br />
எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப்
பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும்
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே
உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள்
உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம்
இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு
அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப்
பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.</div>
<div align="justify">
<br />
<b>16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு</b></div>
<div align="justify">
<br />
பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு
எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும்
நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து
அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய
தளங்களைப் பாராட்ட வேண்டும்.</div>
<div align="justify">
<br />
இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும்
எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம்
எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய
தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை
பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.</div>
<div align="justify">
<br />
சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும்
ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென
ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக்
கவனித்து வருகிறது.</div>
<div align="justify">
<br />
நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக '<a href="freecall.lnkhttp://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1022&Itemid=221">சத்தியமார்க்கம்</a>'
போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும்
வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க
மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர்.
எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம்
சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.</div>
<div align="justify">
<br />
<b>17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்</b></div>
<div align="justify">
<br />
பல்வேறு <a href="http://ilakkiyan-pakkam.blogspot.com/2007/10/blog-post_5455.html">இலவச மின்னஞ்சல்</a>
சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட
திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள்
அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு
வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க
வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு
உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம்
கொண்டு சேர்க்க வேண்டும்.</div>
<div align="justify">
<br />
<b>முடிவுரை</b></div>
<div align="justify">
<br />
<b>"உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம்
கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்)
இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின்
பலவீனமான (இறுதி) நிலையாகும்"</b> என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.</div>
<div align="justify">
<br />
மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும்
திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி
நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக்
கெதிராகக் களம் இறங்க வேண்டும்.</div>
<div align="justify">
<br />
நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.<br />
இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.<br />
***<br />
கட்டுரை ஆக்கத்திற்குத் துணை நின்ற நன்றிக்குரிய தளங்கள் மற்றும் பதிவுகள்<br />
<a href="http://www.satyamargam.com/">சத்தியமார்க்கம்.காம்</a><br />
<a href="http://www.idhuthanislam.com/">இதுதான்இஸ்லாம்.காம்</a><br />
<a href="http://www.islamkalvi.com/">இஸ்லாம்கல்வி.காம்</a><br />
<a href="http://palanibaba.blogspot.com/">http://palanibaba.blogspot.com</a><br />
<a href="http://a1realisam.blogspot.com/">http://a1realisam.blogspot.com</a><br />
<a href="http://masdooka.blogspot.com/">http://masdooka.blogspot.com</a><br />
<a href="http://majinnah.blogspot.com/">http://majinnah.blogspot.com</a><br />
ஆக்கம்: சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா.</div>
<div align="justify">
---------------------------------------------</div>
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-84013081568123978172012-02-07T23:52:00.000+03:002012-02-07T23:55:48.401+03:00வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">உலக
வரைபடம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து மற்ற எல்லா நாடுகளையும் போல் வளைகுடா
நாடுகளும் அந்த வரைபடத்தில் இருக்கத்தான் செய்தன. ஆனால் எத்துனை பேருக்கு இந்த வளை
குடா நாடுகளைப்பற்றி அப்போது தெரியும்? மக்காவும் மதீனாவும் உலக முஸ்லிம்களின்
புனித நகரங்களாக இருப்பதால் இவ்விரு நகரங்களைப் பற்றி வேண்டு மானால் முஸ்லிம்கள்
தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் இவ்விரு நகரங்களையும் உள்ளடக்கிய சவூதி அரேபியா
என்ற நாட்டைப் பற்றிக் கூட முழுமையாக அறிந்தவர் மிகச் சிலரே. </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">எண்ணெய்
வளம் என்னும் மாபெரும் பொக்கிஷம் இந்த பாலைவன மணலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட
போது அகில உலகமும் தன் பார்வையை அரபு நாடுகளின் மீது பதித்தது. அகில உலகமும்
எண்ணெய் உபயோகத்திற்கு ஆட்பட்டபோது அதன் வளத்தை வறண்ட அரபுப் பாலைவனத்தின் அடியில்
உருவாக்கி உலகின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர்களாக
முஸ்லிம்களை ஆக்கிவைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">1970
களில் வெளி உலகத்துக்குத் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்ட வளைகுடா
நாடுகள், வெகு வேகமாக முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தன. கடந்த
ஒரு நூற்றாண்டு காலத்தில் மேற்கத்திய நாடுகள் அடைந்த முன்னேற்றத்தை விட அதிக
முன்னேற்றத்தை ஒரு பத்தாhண்டு காலத்தில் வளைகுடா நாடுகள் அடைந்தன என்றால் அது
மிகையாகாது. </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">வளைகுடா
நாடுகள் தங்களின் எதிர்காலத் திட்டங்களை செயல் படுத்து வதற்குத் தேவையான பொருளாதார
ஆற்றல் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கப் பெற்றாலும், மனித வள ஆற்றலுக்கு
கைகொடுத்த பெருமை மிக்கவர்களில் இந்தியர்களாகிய நம் பங்கு முக்கியமானது என்று
சொல்லலாம். </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">துவக்கத்தில்
பர்;மா ரங்கூன் போன்ற நாடுகளையும், அதன் பின்னர் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளையும்
வளப்படுத்திய பெருமைக்குரியவர்களாகிய நம்மைச் சென்ற நூற்றாண்டில் வளைகுடா நாடுகள்
தம் வாசற்கதவுகளைத் திறந்து வைத்து ஆரத்தழுவி வரவேற்றதையும், இன்றளவும் தொடர்ந்து
நம்மை வாழவைத்துக் கொண்டிருப்பதையும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டும். </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">இன்று
நாம் வாழும் செழிப்பான வாழ்வும், நமது பொருளாதார வளமும், வளைகுடா வாழ்க்கையின்
மூலம் நாம் அடைந்த பயன்களே. ஏழ்மையிலும் வறுமையிலும் உழன்ற எத்தனையோ சகோதரர்கள்
கற்பனையிலும் கண்டிராத வளமான வாழ்க்கை வாழ்வது இறைவன் நமக்களித்த இந்த வளைகுடா
வாழ்க்கை என்னும் வரத்தினால் தான் என்றால் அது மிகையல்ல. </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">வறுமை,
வேலையில்லாத் திண்டாட்டம், போன்றவற்றால் விழி பிதுங்கி நின்ற நமக்கு வளை குடா
நாடுகள் தம் வாசற்கதவைத் திறந்து வைத்து வரவேற்ற போது இன் முகத்தோடு ஏற்றுக்
கொண்டோம். வளை குடா நாட்டில் அடியெடுத்து வைத்த பின்னர் தான் நம்மில் பெரும்பாலானோரின்
பொருளாதார வளம் மேம்பாடு அடைந்தது.கற்பனையில் கூட நாம் நினைத்துப் பார்த்திராத
எண்ணற்ற வசதிகளை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணமாகிய
வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரமே. </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">பெற்றோரை,
உற்றாரைப் பிரிந்தோம், மனைவியுடன் வாழவேண்டிய இல்லற வாழ்க்கையை மறந்தோம். கொஞ்சிக்
குலாவ வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளின் பாசம் நமக்குக் கிடைக்காமற் போனது.
இவையெல்லாம் உண்மை தான். பல சுகங்களைப் பெறுவதற்காக சில இழப்புகளை சந்திக்கத்தான்
வேண்டும். அனைத்து சுகங்களையும் ஒருங்கே பெற்ற யார் தான் இந்த அவனியில்
இருக்கின்றார்? </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">பொதுவாகவே
வறுமை தான் மனிதனை சில சமயம் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது. மற்றவை அனைத்தும்
இரண்டாம் பட்சமே. பொருளாதாரத்தில் ஒருவன் ஏற்றம் பெற்றால் மற்றவைகளை ஒரு
பொருட்டாகவே நினைப்பதில்லை. பொருளாதாரத் தேவை நூறு சதவிகிதம் நிறைவு பெற்றதாக
திருப்தி அடைந்த மனிதன் உலகில் யாரும் இல்லை என்றாலும், தமது அத்தியாவசித் தேவைகள்
பூர்த்தியடைந்தவர்கள் பலருக்கும் இந்த வளை குடா வாழ்க்கை ஒரு வரமே. </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">மண்
குடிசைகள் மாளிகைகளாக உருவெடுத்தன. மண் வீட்டில் கழித்த நாட்கள் நமக்கு இப்போதும்
மறந்து விடவில்லை. ஆனாலும் இறைவனின் பெரும் கிருபையால் வசதிமிக்க மாடி வீடுகளில்
இப்போது வசிக்கிறோமே. இதற்குக் காரணம் வளைகுடா வாழ்க்கை அல்லவா? வளைகுடாவில் வந்து
மண் சுமந்தோம் என்றாலும் நமது எதிர்காலச் சந்ததியினர் மண் சுமக்கத் தேவையில்லாத
அளவுக்கு அவர்களை மாடி வீடுகளில் வாழச் செய்து அவர்களின் துயர் துடைத்தோமே. </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">உடுத்த
ஒரு துணிக்கு மாற்றுத் துணி இல்லாமல் சிரமப்பட்ட காலமெல்லாம் இப்போது போய்விட்டது.
புத்தாடை என்றால் நோன்புப் பெருநாளைக்கு மட்டும் தான் அதுவும் மிகுந்த
சிரமத்திற்கு மத்தியில் நமது பெற்றோர் வாங்கிக் கொடுத்த விலை குறைந்த ஆடைகளை
வேண்டா வெறுப்பாக அணிந்தோம். சக நண்பர்கள் அணிந்த சட்டைகளை ஏக்கத்துடன்
பார்த்தோம். இன்று விதவிதமான ஆடைகளை அணிகிறோம். </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">கட்டிய
மனைவிக்கு ஒரு நல்ல புடவை வாங்கிக் கொடுக்க இதயம் முழுக்க ஆசை இருந்தும்
இருக்கின்ற பணம் போதாத நிலையில் இதயத்தை கல்லாக்கி சாதாரணப்புடவை வாங்கிக்
கொடுத்தோம். இன்று அவள் விரும்பியபடி விலையுயர்ந்த புடவைகளை வாங்கிக் கொடுத்து
அந்த முகத்தில் மகிழ்ச்சியைக் காண்கிறோம். நம் அன்புக் கண்மணிகளுக்கு வகை வகையான
உடைகளை வாங்கிக் கொடுக்கிறோம். </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">குளிர்
சாதனப் பெட்டியும், வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டியும், ஒரு காலத்தில் பெரும்
செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்துபவை என்ற நிலை மாறி இன்று நம் அனைவரின்
வீடுகளையும் இந்த ஆடம்பரப் பொருட்கள் அலங்கரிக்கின்றன. பாழாய்ப் போன சீரியல்களில்
மயங்கிப் போனவர்களை விடுங்கள், பயன்மிக்க இஸ்லாமிய நிகழ்ச்சிகளைப் பார்த்து
தங்களைப் பக்குவப் படுத்திக் கொள்ள வழிவகுத்த பயனுள்ள தொலைக் காட்சிப் பெட்டிகள்
நமக்கு எப்படி வந்தன? இதற்கெல்லாம் தேவையான பொருளாதார வளம் நமக்கு எப்படி வந்தது?
வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம் அல்லவா? </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">மேற்கல்வி
கற்க வசதி இல்லாமல் ஆரம்பக் கல்வி கற்றதோடு நமது வாழ்வு அஸ்தமித்து விட்டாலும் நம்
அன்புக் குழந்தைகளை இன்று மேற்கல்வி வரை தொடர வைத்தோமே! கல்வி வியாபாரமாகிவிட்ட
இக்காலத்தில் நம் குழந்தைகளளை இலட்சக் கணக்கில் செலவு செய்து மருத்துவக்
கல்லூரிகளிலும் பொறியில் கல்லூரிகளிலும் பட்டம் பெற வைத்தோமே இதற்கெல்லாம்
பொருளாதாரம் நமக்கு எப்படி வந்தது? வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம்
அல்லவா? </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">முஸ்லிம்கள்
நலனுக்காகப் பாடுபடும் எத்தனையோ இயக்கங்கள் அவர்களின் செயல்பாடுகளைச் சீரிய
முறையில் செயல்படுத்தத் தேவையான மிகப் பெரும் பொருளாதார உதவிகளை வளைகுடா நாடுகளில்
வசிக்கும் நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் வாரி வாரி வழங்கி வருகின்றோமே.
தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உள்ள மக்கள் இதனைக் கொண்டு பயன் பெறுகிறர்hகளே
பயன் பெற்ற நெஞ்சங்கள் வளைகுடாவில் பணிபுரியும் நமக்காக இறைவனிடம்
இறைஞ்சுகிறார்களே இதற்காகவாவது நாம் சில தியாகங்களைச் செய்தால் தான் என்ன? </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">புனித
ரமளான் மாதம் வந்து விட்டால் போதும் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு இயக்கங்களும்
கடமையான ஃபித்ராத் தொகையை வசூலித்து பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள் மகிழ்ச்சியாகப்
பெருநாள் கொண்டாடி மகிழ்வதற்காக அனுப்பி வைக்கிறார்களே. நமது சமுதாயம் அடையும்
இந்த மகிழ்ச்சிக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை செலுத்துகிறோமே. இதற்குக் காரணமாகிய
வளைகுடா வாழ்க்கை இறைவன் நமக்கு அளித்த வரம் அல்லவா? </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">இஸ்லாம்
என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்த எத்தனையோ முஸ்லிம் சகோதரர்கள் வளைகுடா
நாடுகளுக்கு வந்த பின்னர் தான் இங்கு நடைபெறும் பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டு மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டனர். அவரவர் தம் தாயகத்துக்கு
விடுமுறையில் செல்லும் போது தத்தம் குடும்பத்தினருக்கும் உண்மையாண இஸ்லாத்தை
எடுத்துச் சொல்லி தம் குடும்பத்தினரையும் திருத்தினர். அதற்கான அத்துனை
வாய்ப்புகளையும் நமக்கு இந்த வளைகுடா வாழ்க்கை தானே ஏற்படுத்தித் தந்தது. </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">தமிழகத்தின்
சில ஊர்களைச் சேர்ந்த மக்கள் ஒரு காலத்தில் குடும்பத்துடன் வேறு ஊர்களுக்குக் குடி
பெயர்ந்து கூலி வேலை பார்த்து மிகவும் சிரமத்துடன் தங்கள் வாழ்நாட்களைக்
கழித்தவர்கள் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்புகள் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே
வந்து தமது கடின உழைப்பால் அபரிமிதமான பொருளீட்டி இன்று இறைவனின் பேரருளால்
வாழ்வாங்கு வாழ்கின்றனர் இதற்குக் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை இவர்களுக் கிடைத்த
வரமல்லவா? </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">தமிழகத்தின்
பல்வேறு ஊர்களிலும் இயங்கி வரும் எத்தனையோ இஸ்லாமியக் கல்வி கூடங்கள் ஒரு
காலத்தில் மிகவும் சிரமத்துடன் நாட்களை நகர்த்தின. அந்தக் கல்விக் கூடங்களில்
கல்வி பயின்று பின்னர் வளைகுடா நாடுகளுக்கு வந்த, முன்னாள் மாணவர்களில்
கொடைத்தன்மை மிக்க எண்;ணற்றோர் செய்த உதவிகள் மூலம் இன்று அந்தக் கல்விக்
கூடங்களில் பல மிக நல்ல நிலையில் இயங்குவதுடன் ஏராளமான மாணவர்களை உருவாக்கிக்
கொண்டிருக்கின்றனவே இதுவும் இறைவன் நமக்களித்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரம்
தானே. </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">பல்வேறு
குண நலன் கொண்டவர்களுடன் பழகும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. நமது மாறுபட்ட
குணங்களை மாற்றிக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும், இந்த வளைகுடா வாழ்க்கை நமக்கு
பயிற்சியைத் தந்தது. பக்குவத்தை அளித்தது. பெற்றோருக்கு அடங்காமல் தான்தோன்றித்
தனமாக தம் வாழ்க்கையைக் கழித்த எத்தனையோ இளைஞர்கள் வளைகுடா நாடுகளுக்கு வந்த
பின்னர் தங்கள் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொண்டனர். கட்டுப்பாடான இந்த
வாழ்க்கை அவர்களின் எதிர் காலத்தைச் சீர்படுத்திக் கொள்ள வழி வகுத்தது. </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">நமக்குத்
தேவையான உணவை நாமே சமைத்துக் கொள்ளும் போதும், நமது துணிகளை நாமே துவைத்துக்
கொள்ளும் போதும் நம் வீடுகளில் நம் தாயோ மனைவியோ உணவு சமைக்கவும் துணி துவைக்கவும்
படும் சிரமங்களை நம்மால் உணர்ந்துக் கொள்ளவும், புரிந்துக் கொள்ளவும் முடிந்தது.
அதன் மூலம் அவர்கள் மீது நமக்கிருக்கும் அன்பும் பாசமும் அதிகரித்தது. </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">தத்தம்
இல்லங்களில் தமது துணிகளை மட்டுமின்றி தமது மனைவியின் துணிகளையும் துவைத்துக்
கொடுத்து மனைவியிடம் நற்சான்று வாங்கிய நல்ல கணவன்மார்களை விட்டு விடுவோம்.
அப்பாடா! இப்போது நமது துணியை மட்டும் துவைத்தால் போதும் என்று மகிழ்ச்சியில்
திளைப்பவர்களும் இருக்கிறார்கள். ('அனுபவம் பேசுகிறது' என்று தயவு செய்து நினைத்து
விடாதீர்கள்) அப்படிப் பட்டவர்களுக்கும் வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே. </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">தம்
வாழ்க்கையில் ஏற்பட்ட சில குறைகளை காரணம் காட்டி வளை குடா வாழ்க்கை ஒரு சாபம்
என்று சொல்லக் கூடிய பலரும் இன்னமும் வளைகுடாவில் வாழ்ந்துக் கொண்டு தான்
நாக்கூசாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்படிச் சொல்பவர்களை யாரும்
நிர்ப்பந்தப் படுத்தி வளைகுடாவில் வாழச் சொல்ல வில்லையே. இதனைச் சாபம் என
நினைப்பவர்கள் தாராளமாக அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் செல்லட்டும். அவர்களை யார்
தடுத்தது? அவர்கள் தாங்கள் இந்த வரத்தை அனுபவித்துக் கொண்டே சாபம் என்று கூப்பாடு
போடுகின்றனர். </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">இதனைச்
சாபம் என்று நினைப்பவர்களே தயவு செய்து உங்கள் தாயகங்களுக்குச் சென்று விடுங்கள்.
வளைகுடா வாழ்க்கை என்னும் வரத்தை அனுபவிக்க இன்னும் இலட்சக் கணக்கானோர் தாயகத்தில்
காத்திருக்கின்றனர். தயவு செய்து அவர்களுக்கு வழி விடுங்கள். </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">இன்னும்
ஏராளனமான சமுதாயப் பணிகள் போதிய பொருளாதாரமின்றித் தேங்கிக் கிடக்கின்றன. நாமும்
வளைகுடா நாடுகளுக்குச் சென்று ஈட்டும் பொருளாதாரத்தில் எண்;ணற்ற ஏழைகளை வாழவைப்
போம் என்ற நல்ல நோக்கத்துடன் காத்திருக்கும் இளைஞர்கள் இங்கு வருவார்கள்.
அவர்களின் பொருளாதாரா உதவியால் அந்தந்த நாடுகளில் வாழும் அனைத்து சமுதாயத்தினரும்
அளப் பெரும் நன்மைகளை அடையட்டும். </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">சில
வருடங்கள் வளைகுடா நாடுகளில் தங்கள் வாழ்க்கையைக் கழித்து விட்டு தாங்கள் மனம்
திருந்தி (?) விட்டதாகச் சொல்லி பயணத்தை முடித்துக் கொண்டுச் சென்றவர்கள் தாங்கள்
கொண்டு சென்ற பணம் முழுவதையும் செலவழித்து முடித்த பின் மேற் கொண்டு கடன்
வாங்கிவிட்டு, வாங்கிய கடனை அடைப்பதற்காக தம் முன்னாள் நண்பர்களைத் தொடர்பு கொண்டு
மறுபடியும் ஒரு விசாவுக்காக ஏற்பாடு செய்யச் சொல்வதைக் கண்கூடாகக் காண்கிறோம். </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">இவ்விதம்
சாபம் என்ற கட்சியிலிருந்து வரம் என்ற கட்சிக்கு இடம் மாறியவர்கள் எத்தனையோ. வரம்
என்ற கட்சிக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை இந்த வகை மூலம் இன்னும் கூடிக்
கொண்டுதான் போகின்றது. இவர்களைக் கேளுங்கள் தாங்கள் அறியாமல் சாபம் என்று சொன்னதற்காக
கைசேதப் படுவது மட்டுமின்றி வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்று குன்றின் மீது ஏறி
நின்று குரலை உயர்த்திச் சொல்வார்கள். </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">குஜராத்தில்
நம் இனத்தவர் வீடு வாசல்களை இழந்து, சொத்துக்கள் சூரையாடப்பட்டு வன் கொடுமையை
அனுபவித்துத் திக்கற்றவர்களாக திசை தெரியாமல் தத்தளித்தபோது கோடிக் கணக்கில் வாரி
வழங்கி அவர்களின் துயர் துடைத்த பெருமை வளைகுடா வாழ் சகோதரர்ளைச் சாரும். சாதி மத
வித்தியாசமின்றி வாரிக் கொடுத்த வளைகுடா வாழ் நெஞ்சங்களை வாழ்த்திய அந்த குஜராத்
நெஞ்சங்களைக் கேட்டுப் பாருங்கள், இந்த வளை குடா வாழ்க்கை நம்மவருக்குக் கிடைத்த
வரம் தான் என்று வாயாரச் சொல்வார்கள். </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">கோவையில்
ஒரு இனவெறிக் கும்பல் கோரத்தாண்டவம் ஆடி அப்பாவி மக்களின் கோடிக் கணக்கான
சொத்துக்களை நாசப்படுத்தியும், சூரையாடியும் நிர்மூலமாக்கிய போது, பொருளாதாரா
ரீதியாக அந்நகர மக்களுக்குப் பேருதவி புரிந்தவர்களில் அதிக பங்களிப்பை
நல்கியவர்கள் வளைகுடா வாழ் சகோதரர்கள் அல்லவா? வழங்கியவர்களும்,இந்து முஸ்லிம்
என்று பேதம் பார்க்காமல் வழங்கினார்கள். அதைப் பங்கிட்டுக் கொடுத்தவர்களும்
அவ்விதம் பேதம் பார்க்காமல் கொடுத்தார்கள். அந்தக் கோவை வாழ் மக்களைக் கேட்டுப் பாருங்கள்,
இந்த வளை குடா வாழ்க்கை நம்மவருக்குக் கிடைத்த வரம் தான் என்று மனமாரச்
சொல்வார்கள்.</span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">இந்த
நூற்றாண்டில் இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் ஒன்று தான் இணைய தளம் என்னும்
அற்புதமான அருட்கொடை. இஸ்லாத்தைப் பற்றி முழுமையான விபரங்களைத் தெரிந்துக்
கொள்ளவும், தெரிந்துக் கொண்ட கருத்துக்களைப் பலருக்கும் எடுத்துரைக்கவும் மிக
அருமையான ஊடகமான இஸ்லாமிய இணைய தளங்களும், மற்றும் வலைப்பதிவுகளும், </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">இஸ்லாத்திற்கும்
முஸ்லிம்களுக்கும் எதிராக அவ்வப்போது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கும்
அவதூறுகளுக்கும் உடனுக்குடன் பதில் கொடுத்தும், உண்மையான இஸ்லாத்தை உலகறிய உரத்த
குரலில் முழங்கும் இணைய தளங்களும், மற்றும் வலைப் பதிவுகளும்,</span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">அவரவர்
தனிப்பட்ட முறையில் தத்தம் கருத்துக்களையும் ஆக்கங்களையும் பிறருடன் பகிர்ந்துக்
கொள்ளும் இஸ்லாமிய வலைப்பதிவுகளும் இண்டர் நெட்டில் மலிந்துக் கிடக்கின்றன.
இவைகளில் பெரும்பாலானவை வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களால் உருவாக்கப்பட்டு
நடத்தப்படுபவை என்பதை இணைய தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளுடன் அதிகத் தொடர்புடைய
பலரும் அறிவர்.</span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">தூய
இஸ்லாத்தை தரணியெங்கும் வாழும் முஸ்லிம்கள் அறிந்துக் கொள்ளும் விதத்தில் இந்த
அற்புத ஊடகத்தை பயன்படுத்தவும், பலரையும் பயன்பெறச் செய்யவும் காரணமாக அமைந்தது
கூட நமக்குக் கிடைத்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரம் தானே.</span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">வளைகுடா
வாழ்க்கை ஒரு வரமே என்பதற்கு அடுக்கடுக்காக இன்னும் பல காரணங்களை எடுத்து வைக்க
முடியும். ஆனால் சாபம் என்பதற்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் ஒரே காரணம் இல்லற
வாழ்க்கையின் இளமை இங்கேயே பாழாகி விட்டது என்பது தான். மீதமுள்ள அனைத்துக்
காரணங்களையும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வார்கள். </span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">எதிர்காலத்
திட்டங்கள் சரியான முறையில் தீட்டப்படாமல் காலமெல்லாம் வளைகுடாவிலேயே கழிக்காமல்
அநாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பொருளாதாரச் சேமிப்பை அதிகப்படுத்தி
வருமானத்துக்கு ஒருவழியை ஏற்படுத்திக் கொண்டு தத்தமது நாய் நாடுகளுக்குச் சென்று
நிரந்தரமாகத் தங்கலாமே. கட்டுரையின் தலைப்பு வளைகுடா வாழ்க்கை வரமா சாபமா என்பது
தான். தலைப்பு நிரந்தர வளைகுடா வாழ்க்கை வரமா சாபமா என்பதல்ல. அப்படிப்
பார்த்தாலும் சாபம் எனக் கூறுபவர்கள் கூட தங்களின் எதிர்கால வருமானத்துக்கு ஒரு
வழியைத் தேடிக் கொள்ளவும், சேமிப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், கிடைத்துள்ள இந்த
அரிய வாய்ப்பாகிய வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்பதை மனமார ஒப்புக் கொள்வார்கள்</span><br />
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">.நம்மில்
பலர் வறுமை நீங்கி வளவாழ்வு வாழ்வதற்கும், நம் எதிர்காலச் சமுதாயம் சிறந்து
விளங்கிட நம்மால் இயன்றவரை நம் பங்களிப்பை நல்கியதற்கும், நமது மார்க்க அறிவை
வளர்த்துக் கொண்டதற்கும், நமது பழக்க வழக்கங்களைப் பண்படுத்திக் கொண்டதற்கும், நம்
சமுதாய இயக்கங்கள் நல்லமுறையில் செயல்படுவதற்கு பொருளாதார ரீதியில் நாம் பேருதவி
புரிவதற்கும், இப்படி எத்தனை எத்தனையோ நற்காரியங்கள் நடைபெறுவதற்குக் காரணமாகிய
நமது வளைகுடா வாழ்க்கை இறைவன் நமக்களித்த வரம் தான்.</span><br />
<br />
<span style="font-family: "aAvarangal","sans-serif";"> </span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif";">வறுமைக்
கோட்டுக் கீழ் வாழுகின்ற எண்ணற்றோர் தாயகத்தில் வேலை வாய்ப்பின்றி
அவதிப்படுகின்றனர். தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளவும் வளமான எதிர்காலக்
கற்பனைகளோடும் வாடுகின்ற ஏராளமானோர் வளைகுடா வாழ்க்கை என்னும் கொழுக் கொம்பு
நமக்குக் கிடைக்காதா? பற்றிப் பிடித்துக் கொண்டு முன்னேறி வர மாட்டோமா என்று
ஏங்கிக் கிடக்கின்றனர். சாபம் என நினைப்பவர்களே சற்று ஒதுங்கி வழிவிடுங்கள். வரம்
என நினைப்பவர்கள் வந்து அனுபவிக்கட்டும்.</span><br />
</div>
<div style="text-align: justify;">
<b><span style="font-family: "aAvarangal","sans-serif";">கட்டுரை
ஆக்கம்: மஸ்தூக்கா </span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-78676410150508944922012-02-07T00:25:00.000+03:002012-02-07T00:48:04.273+03:00புகழ்வதற்கு அதிகத் தகுதி உடையவர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
உறவினர் இல்லத் திருமண விழா ஒன்றில் சிலர் ஒன்றாக
அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். பேச்சு தவ்ஹீதின் பக்கம் சென்றது.
பொதுவாகவே ஏகத்துவக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் 'யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்' என்னும் உயரிய எண்ணத்தில், எப்போது வாய்ப்பு கிடைக்கும்
ஏகத்துவக் கொள்கையை எல்லோருக்கும் எடுத்தியம்புவோம் எனக் காத்திருப்பார்கள்
அல்லவா? அவ்வகையில் இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி
அடைந்தேன். </div>
<div style="text-align: justify;">
<br />
எங்கள் உறவினர் மத்தியில் நற்குணத்திலும் நல்லொழுக்கத்திலும் மிகவும்
நற்பெயர் பெற்ற எனது நெருங்கிய உறவினர் தமது நண்பர் ஒருவரிடம் என்னைப்
பற்றி புகழ்ந்து அறிமுகம் செய்து செய்துக் கொண்டிருந்தார். என்னைப் பற்றி
உயர்வான அபிப்பிராயங்களைச் சொல்லி இறுதியில் 'ஆனால் இவர் நஜாத்' என்று
முடித்தார். என்னைப்பற்றி உயர்வாகச் சொன்ன அனைத்துக்கும் நான் தகுதியானவனா?
என்பது எனக்குத் தெரியாது, ஆனால் என்னை (இவர்கள் மொழியில் நஜாத் நமது
மொழியில்) தவ்ஹீத் என்று அறிமுகம் செய்தது மட்டும் எனக்குப் பெருமையாக
இருந்தது. ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை தவ்ஹீத் என்று சொல்வதில் தான் பெருமை
அடைய முடியும் அல்லவா! </div>
<div style="text-align: justify;">
<br />
பேச்சு களைகட்டத் தொடங்கியது. எனது உறவினராகிய அவர் தொடர்ந்தார். தனது
மைத்துனர் துபாயில் ஒரு பெரிய ஷெய்கிடம் 'நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது
தவறா? எனக் கேட்டாராம், அதற்கு அந்த ஷெய்க் 'நபி (ஸல்) அவர்களைப் புகழாமல்
வேறு யாரைப் புகழ்வது?' என பதில் சொன்னாராம். அதற்கு இவர் எங்கள் தமிழ்
நாட்டில் ஒரு கூட்டம் 'நபி (ஸல்) அவர்களைப் புகழக்கூடாது' எனச்
சொல்கிறார்கள் என்று சொன்னாராம். </div>
<div style="text-align: justify;">
<br />
இப்படி ஒரு செய்தியைச் சொன்ன இவரும், துபாயில் ஷெய்கிடம் பத்வா கேட்ட இவர்
மைத்துனரும் பாமரர்களல்ல. நன்றாகப் படித்தவர்கள், நாலும் தெரிந்தவர்கள்,
வணக்க வழிபாடுகளில் பேணுதலானவர்கள், இறையச்சம் உடையவர்கள். எனக்கு
ஆச்சரியமாக இருக்கிறது இவர்கள் கூட இன்னும் தவ்ஹீத் என்றால் என்ன வென்று
புரிந்துக் கொள்ளவில்லையே! அப்படியிருக்க பாமர மக்களை நாம் குறைபட்டுக்
கொள்வதில் அர்த்தமில்லை. </div>
<div style="text-align: justify;">
<br />
எனக்கு ஒரு உதாரணம் சொல்லத் தோன்றுகிறது. 'குழந்தைக்கு பால் கொடுக்கலாமா
என்று பண்டிதர் அல்ல பாமரரிடம் கேட்டாலும் 'பாலை குழந்தைக்குக் கொடுக்காமல்
வேறு யாருக்குக் கொடுப்பது?' என்று தான் பதில் சொல்வர். கையில்
வைத்திருக்கும் பாலைக் காண்பித்து 'இந்தப் பாலை குழந்தைக்கு கொடுக்கலாமா?'
எனக் கேட்டால் அந்தப் பாலை பரிசோதனை செய்து நல்ல பால் தானா அல்லது கெட்டுப்
போனதா? பசும் பாலா, கள்ளிப்பாலா, விஷம் கலந்த பாலா நல்ல பாலா என்பதை
யெல்லாம் உறுதி செய்த பின்னர் தானே இந்தப் பாலை குழந்தைக்குக் கொடுக்கலாமா
கூடாதா என முடிவு செய்ய இயலும். </div>
<div style="text-align: justify;">
<br />
அது போல நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது தவறா? என்று அவர் கேட்டதை விட,
எங்கள் தமிழ் நாட்டில் ரபீவுல் அவ்வல் மாதம் 12 நாளும் பள்ளிவாசலிலும்
வீடுகளிலும் சுப்ஹான மௌலிது என்று ஓதுகிறோம். அந்த மௌலிதுப் புத்தகம் இது
தான் என்று சுப்ஹான மௌலிது கிதாபையும் காண்பித்து அதை ஓதுவதற்காக கூலிக்கு
ஆள்பிடித்து, கும்மாளம் அடிக்கிறோம் என்று விலா வாரியாக விளக்கிச்
சொல்லியிருந்தால் அந்த ஷெய்க் சுப்ஹான மௌலிது கிதாபைப் படித்துப் பார்த்து
விட்டு கிழித்து வீசியிருப்பார். </div>
<div style="text-align: justify;">
<br />
இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? நபி (ஸல்) அவர்களைப் புகழாமல் வேறு
யாரைப் புகழ்வது? என்று துபாய் ஷெய்க் சொன்ன வார்த்தைகளை அப்படியே
ஒப்புவித்த அந்த எனது உறவினர் அவர்கள், அன்று நாங்கள் அமர்ந்து உரையாடிய
அதே ஊரைச் சேர்ந்தவர். சரி இந்த ஊரில் நபி (ஸல்) அவர்கள் எப்படி
புகழப்படுகிறார்கள் எனப் பார்ப்போமா? </div>
<div style="text-align: justify;">
<br />
தஞ்சையை அடுத்துள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர் அது.
இவ்வூரில் எனக்குத் தெரிந்து பல வருடங்களாக ரபீவுல் அவ்வல் 12 நாட்களும்
பள்ளிவாசலில் மௌலிது ஓதி இரவில் தினமும் தப்ருக் என்ற பெயரில் சாதாரண
இனிப்புப் பண்டங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் ரபீவுல் ஆகிர் 12
நாட்களும் முஹ்யித்தீன் ஆண்டவர்(?) மௌலிது ஓதி தினமும் இரவில் அனைத்து
மக்களுக்கும் கமகமக்கும் நெய்ச்சோறு நிறையவே வழங்கப்படும். </div>
<div style="text-align: justify;">
<br />
<b>இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று? </b></div>
<div style="text-align: justify;">
<br />
ரபீவுல் அவ்வல் மௌலிது விழா வெறும் பாத்திஹாவுடன் சிம்பிளாக முடிந்து
விடும். ரபீவுல் ஆகிர் முஹ்யித்தீன் மௌலிது விழா ஊர் முழுக்க தோரணம் கட்டி,
பல்லாயிரம் படி சோறாக்கி பள்ளிவாசலில் வைத்து விநியோகித்து, நான்கு கொடி
தூக்கி நகர் முழுதும் வலம் வந்து, இந்த ஊர்க்காரர்கள் கொண்டாடுகிற அழகே
அழகு? </div>
<div style="text-align: justify;">
<br />
<b>இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று? </b></div>
<div style="text-align: justify;">
<br />
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளாகிய மீலாதுன்னபிக்கு அரசாங்கம்
விடுமுறை அளித்ததனால் தான் இவர்கள் ஊரில் உள்ள பள்ளிக் கூடம் விடுமுறை
விடப்படுகிறது. அதற்கு முன்பெல்லாம் மீலாது தினத்தன்று இவர்கள் ஊர் பள்ளிக்
கூடம் விடுமுறை விட்டதிi;லை. ஆனால் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள்
பிறந்த நாள் அன்று அந்தக் காலத்திலிந்தே பள்ளிக் கூடம் எல்லாம் விடுமுறை
நாளாகும். </div>
<div style="text-align: justify;">
<br />
<b>இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று? </b></div>
<div style="text-align: justify;">
<br />
அயல் நாடுகளில் வாழும் இந்த ஊர்க்காரர்கள் பலரும் தங்கள் விடுமுறை காலத்தை
கொடிச் சீலை? என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திரு விழாவில் கலந்து
கொள்வதற்கேற்ப மாற்றி வைத்துக் கொள்வாhகள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின்
பிறந்த நாளாகிய மீலாது நபிக்கு தங்கள் விடுமுறை காலத்தை மாற்றி வைத்து இந்த
ஊர்க்காரர்கள் யாரும் அரபு நாடுகளிலிலிருந்து வந்ததாகத் தெரிய வில்லை. </div>
<div style="text-align: justify;">
<br />
<b>இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று? </b></div>
<div style="text-align: justify;">
<br />
இதையெல்லாம் படிப்பவர்கள் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களின்
மெளிலிதுக்குப் பதிலாக நபி (ஸல்) அவர்களின் மௌலிதை சிறப்பாக நாம் ஓதச்
சொல்வதாகவோ, அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பிறந்த நாளுக்குப்
பதிலாக நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கோலாகலமாக கொண்டாடுங்கள் என்று
நாம் சொல்வதாகவோ தயவு செய்து நினைத்து விட வேண்டாம். இரண்டையுமே மிகவும்
வன்மையாக நாம் கண்டிக்கிறோம். இவை எதுவுமே இஸ்லாத்தில் உள்;ளவை அல்ல
என்றும், மிகப் பெரும் பாவங்கள் என்றும் சொல்கிறோம். அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் அவர்கள் காட்டித் தராத அனைத்து விழாக்களும் வழி கேடுகள். அனைத்து
வழிகேடுகளும் நரகப் படுகுழிக்கு நம்மை இழுத்துச் செல்லும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆக்கம் : மஸ்தூக்கா</div>
<br />
<br />
<div style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;">
</div>
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-9998955789273992562012-02-07T00:02:00.000+03:002012-02-07T00:02:29.519+03:00இணையத்தில் இஸ்லாம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த உலகம் ஒரு
மாபெரும் புரட்சியைக் கண்டது. ஆம் அது தான் இணையப் புரட்சி. உலகின் ஒவ்வொரு
மூலை முடுக்குகளிலும் இப்புரட்சி பரவியது. அனைத்து வகை மக்களிடமும் இப்
புரட்சி தன் முத்திரையைப் பதித்தது.<div align="justify">
</div>
<div align="justify">
<br />இணையப்
புரட்சி தோன்றிய பின்னர் தான் கணிணியின் உபயோகம் வெகுவாக வளர்ந்தது.
அதற்கு முன் வரை அரசு அலுவலகங்களிலும் பெரும் நிறுவனங்களிலும் மட்டுமே
பயன்படுத்தப்பட்டு வந்த கணிணிகள் சாதாரண மனிதர்களும் பயன்படுத்தும்
அளவுக்கு பரவலான பயன்பாட்டுக்கு வந்தது இணையப் புரட்சிக்குப் பின்னர் தான்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />உலகளாவிய
அளவில் தேசங்கள், இயக்கங்கள்;, மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றின்
வளர்ச்சிக்குப் பயன்பட்ட இந்த ஊடகம் தனி மனிதனுக்கும் பயன்பட ஆரம்பித்தபோது
இதற்காகவே காத்திருந்தது போல் முஸ்லிம்களும் தமது ஏகத்துவக் கொள்கையை
இகமெங்கும் பரப்ப இந்த அற்புத ஊடகத்தை பயன்படுத்தத் தொடங்கினர்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />இஸ்லாம்
மற்றும் முஸ்லிம் வார்த்தைகளை இணைய தேடுதலில் இட்டு தட்டினால் எண்ணற்ற
இணைய தளங்கள் நம் பார்வையில் வந்து நம்மைத் திகைக்க வைக்கின்றன.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />கணிணியைப்
பயன்படுத்தவும் இணைய தளங்களில் உலா வரவும் ஆங்கிலம் தெரிந்திருக்க
வேண்டும் என்பதெல்லாம் அந்தக் காலம். இனிய தமிழில் இஸ்லாத்தைப் பரப்பவும்,
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இணைய உலகில் எடுத்து
வைக்கப்படும் குற்;றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கவும் ஏராளமான
இணைய தளங்கள் தம் பணியை இனிய தமிழில் செவ்வனே செய்துக் கொண்டிருக்கின்றன.
அல்ஹம்து லில்லாஹ்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />தமிழ்
இணைய உலகில் மார்க்கச் சேவை புரியும் இணைய தளங்களில் விரல் விட்டு எண்ணக்
கூடிய ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலானவை ஏகத்துவக் கொள்கையை எடுத்துவைக்கும்
சிறந்த இணைய தளங்களாகத் திகழ்வதும், ஒரு சில விஷயங்களில் கருத்து
வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஏகத்துவக் கொள்கைளை
எடுத்துரைப்பதில் தமது பங்களிப்பை நல்கி வருவதும் மகிழ்ச்சிக்குரிய
செய்திகளாகும்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />பத்திரிகைகளும்
மற்றும் தொலை ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்ற இஸ்லாமிய உலகச் செய்திகளை
உடனுக்குடன் தருகின்ற பல்வேறு இணைய தளங்கள் ஒரு வகையில் சமுதாயத்துக்கு
தொண்டு செய்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />இளைய
சமுதாயத்தின் இதயங்களில் வக்கிர எண்ணங்களைத் தோற்றுவிக்கும் தரம் கெட்ட
இணைய தளங்களுக்கு மத்தியில் நாகரீகத்துடன் நல்ல பண்பாட்டை வளர்க்கும்
இஸ்லாமிய இணைய தளங்கள் நல்ல இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொன்னால்
அது மிகையாகாது.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />இஸ்லாத்தைப்
பற்றி அறிந்துக் கொள்ள இஸ்லாமிய இணைய தளங்களைத் தேடுபவர்கள் மிகவும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் களங்கம்
கற்பிக்கக் களம் இறங்கிய சில கயவர்கள் பல நூற்றாண்டுகளாக பல்வேறு
முயற்சிகள் செய்து தங்கள் முயற்சிகளில் படுதோல்வியைச் சந்தித்த பின்னர்
இப்போது இணைய தளம் என்னும் இந்த நவீன ஊடகத்திலும் தங்கள் கைவரிசையைக்
காட்டி வருகின்றனர். இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இஸ்லாமிய
கருத்துக்களை தலைப்புகளாகத் தந்து திருமறை வசனங்களையும் திருநபியின்
மணிமொழிகளையும் தங்கள் விருப்பத்திற்கு வளைத்தும் திரித்தும் எழுதி ஆலகால
விஷத்தை சுவையான இனிப்புப் பண்டங்களைப் போல் தயாரித்து வியாபாரம் செய்து
வருகின்றனர்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />இந்தக்
கயவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்து இணைய உலகில் இவர்களை அடையாளம்
காட்டும் சிறந்த பணியை சில நல்லோர்கள் செய்து வருகின்றனர். இருந்தாலும்
உண்மை வீட்டை விட்டுப் புறப்படுவதற்குள் பொய் ஊரைச் சுற்றி விட்டு வந்து
விடும் என்று சொல்வதைப் போல் இந்தக் கயவர்களின் கைவரிசையில் உருவான கள்ள
இணைய தளங்கள் அழகான பொய்களுடன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்பதை இணைய
தளங்களைப் பார்வையிடும் ஒவ்வொரு முஸ்லிம் சகோதரனும் உணர்ந்து
அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />எவ்வளவு
தான் தங்களை மறைத்துக் கொண்டாலும் பத்திரிக்கைள் மற்றுத் தொலைக் காட்சி
ஊடகங்களில் வெகு விரைவில் இவர்களின் முகத்திகை; கிழிந்து விடும், ஆனால்
இந்த இணைய தளம் என்னும் ஊடகத்தில் தங்களை மறைத்துக் கொண்டு கபட நாடகம்
ஆடும் கயவர்களைக் கண்டறிவது சற்று சிரமம். எனவே தான் நேருக்கு நேர் மோதத்
திராணியற்றவர்கள் இணையத்தின் மூலம் புறமுதுகில் குத்தும் கோழைத்தனமான
செயவ்களில் ஈடுபட்டுவருகின்றனர். </div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />எனவே
இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் இணைய தளங்கள் உண்மையிலேயே இஸ்லாமிய இணைய
தளங்கள் தானா? என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அத்தளங்களைப்
பார்வையிட வேண்டும். இல்லையேல் நமது பொன்னான நேரமும் பொருளும் விரயம் ஆவது
மட்டுமின்றி இருக்கின்ற ஈமானையும் இழக்க நேரிடும்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />பொதுவாகவே
இணைய தளங்களை உருவாக்குவதும் அதனைத் தொடர்ந்து நடத்துவதும் அனைவராலும்
இயலாத ஒன்று. சமுதாய இயக்கங்கள் அல்லது சேவை மனப்பான்மைக் கொண்ட சிலர்
குழுக்களாகச் சேர்ந்து இணைய தளங்களை நடத்தி வருகின்றனர். அத்தகைய புகழ்
பெற்ற இணைய தளங்கள் மட்டுமே சரியான தகவல்களை தந்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றில் மட்டுமே நமது கவனம் இருக்க வேண்டும்.இஸ்லாமியத் தமிழ் இணைய
தளங்கள்; சில சமயம் தங்களுக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகளையும்
மனமாச்சரியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது வருந்தத்தக்க
விஷயமாகும். அப்படிப்பட்ட இணைய தளங்களைப் பார்வையிடும்போது அதில் உள்ள
நல்லவற்றை எடுத்தக் கொண்டு அல்லவற்தை; தள்ளிவிடலாம்.<br />புகழ் பெற்ற அந்த
இணைய தளங்களை நடத்துவோருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தயவு செய்து தனிமனித
விமரிசனங்களையும் தரம் கெட்ட தாக்குதல்களையும் சற்று ஒதுக்கிவைத்து விட்டு
சமுதாயத்திற்குப் பயனுள்ள செய்திகளை, மார்க்க விஷயங்களை, இறை வேத வரிகளை,
இறைத்தூதர் மொழிகளை இஸ்லாமிய சமுதாயத்திற்கு மத்தியில் இன்னும் அதிகமாகக்
கொண்டு செல்லுங்கள். ஏகத்துவக் கொள்கையை இன்னும் உரத்த குரலில்
முழங்குங்கள். எதிர்கால சமுதாயம் இதன் மூலம் பயனடையும். பயனைடந்த உள்ளங்கள்
உங்களை மனமார வாழ்த்தும்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />இணைய
தளங்கள் என்னும் வலைத் தளங்களின் ஓர் அங்கம் தான் வலைப் பதிவுகள் எனப்பும்
வலைப்பூக்கள். பல நிறுவனங்கள் இந்த வலைப்பதிவு சேவையை இலவசமாகவே
வழங்குவதாலும், கையாள்வது எளிது என்பதாலும் இணைய உலகில் தொடர்புடைய
ஏராளமானேர் வலைப்பதிவுகனை உருவாக்கி தங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும்
பதிந்து வருகின்றனர். </div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />வலைத்
தளங்களை விட அதிகமாகவே இந்த வலைப்பதிவுகள் எனப்படும் வலைப்பூக்கள் இணைய
உலகில் உலாவந்துக் கொண்டிருக்கின்றனவோ எனக் கருதும் அளவுக்கு நாளுக்கு நாள்
புத்தம் புதிய வலைப்பூக்கள் பூத்துக் கொண்டிருக்கின்றன.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />வலைத்தளங்களை
நல்லவையும் தீயவையும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது போல் அதை விடவும்
சற்று அதிகமாகவே வலைப்பூக்களையும் நல்லவையும் தீயவையும் ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கின்றன எனலாம். வலைத்தளங்களைப் பற்றிக் குறிப்பிட்ட அனைத்துமே
இந்த வலைப்பூக்களுக்கும் பொருந்தும்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />முறையாகப்
பதியப்பட்டு நெறிமுறையுடன் நடத்தப்படும் இணைய தளங்களில் தங்கள் மூக்கை
நுழைக்க முடியாத முகவரியற்றவர்கள் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தி தங்கள்
வக்கிர எண்ணங்களையும் தரம் கெட்ட தகவல்களையும் பதிந்து வருகின்றனர். </div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />வலைப்பதிவுகளை
பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்ட இஸ்லாமிய ஆர்வலர்கள் இதிலும் மிகவும்
கவனமாக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் பெயரால் இல்லாததையம் பொல்லாததையும்
பதிக்கின்ற வலைப்பதிவுகளை அடையாளம் கண்டு அவற்றை அடியோடு புறக்கணிக்க
வேண்டும்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />இந்திய
மொழிகளிலேயே அதிக அளவில் பதியப்படும் வலைப்பதிவுகள் நம் தாய் மொழியாம்
தமிழ் மொழியில் தானோ என நினைக்கும் அளவுக்கு தமிழ் வலைப்பதிவுகள் இணைய
உலகில் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. புகழ் பெற்ற வலைத் திரட்டிகளில்
சென்று பார்வையிட்டால் நாள் தோறும் புத்தம் புதிய வலைப்பூக்கள் பூத்துக்
கொண்டிருப்பதைக் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை ஒன்றுக்கும் உதவாதவை
என்பது வேறு விஷயம். பூக்களை நேசிப்பவர்களே நறுமணம் கமழும் நல்ல பூக்களை
மட்டுமே நேசியுங்கள். ஆம் நல்ல வலைப் பதிவுகளைத் தேடிப் பிடித்து பயன்
பெறுங்கள்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />இணைய
உலகில் உலா வந்துக் கொண்டிருக்கும் தமிழ் நேய நெஞ்சங்களே! மிகவும் கவனமாக
இருங்கள். நமது எதிரிகள் நம் மீது பன் முனைத் தாக்குதலை
மேற்கொண்டிருக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள். 'இஸ்லாம்' 'முஸ்லிம்'
என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி வலைப் பதிவுகளை உருவாக்கி இஸ்லாத்துக்கும்
முஸ்லிம்களுக்கும் எதிராக எழுதும் எழுத்துக்கள் ஒரு புறம், மறுமொழி
இடுகின்ற வசதியைப் பயன்படுத்தி இஸ்லாமிய வலைப்பதிவுகளில் முஸ்லிம்
பெயர்களில் நச்சுக் கருத்துக்களைப் புகுத்தும் சதி வேலைகள் மறுபுறம்,
இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் நம்மைத் தாக்க எதிரிகள் திட்டம் வகுத்து
செயல்படுகின்றனர். எனவே வலைப் பதிவுகளை உருவாக்கி பதிப்பவர்கள் உங்கள்
பதிவுகளில் பதியப்படும் மறுமொழிகளை ஆய்வு செய்து வெளியிடும் வசதியைப்
பயன்படுத்துங்கள் இல்லையேல் தறுதலைகள் தவறான கருத்துக்களை உங்கள்
பதிவுகளில் பதிந்து விடுவர் எச்சரிக்கை.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />தமிழறிந்த
முஸ்லிம்களில் பலர் பல்வேறு பெயர்களில் வலைப்பதிவுகளை பதிக்கின்றனர்.
இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், இவர்களில் சிலர் தமக்கு வேண்டாத,
தமக்குப் பிடிக்காத, கொள்கையில் கருத்து வேறுபாடு கொண்ட, தனி நபர்களையும்,
இயக்கங்களையும் விமர்சித்தும் புழுதி வாரித்தூற்றியும் பதிவுகள்
பதிக்கின்றனர். </div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />இவர்களில்
சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று நாலாந்தர நரகல் நடையில், படிப்பவர்கள்
வெறுப்படையும் விதத்தில் பதிக்கின்ற பதிவுகளைக் காணும் போது உண்மையிலேயே
மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. உண்மையில் இவர்கள் முஸ்லிம்கள் தானா?
என்று சந்தேகம் வருகின்றது. மார்க்க ஞானத்தை வளர்த்துக் கொள்ளவும்,
அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ளவும் வலைப்பதிவுகளை நோக்கி நாம் பயணித்தால்
நம்மை நரகப் படு குழி நோக்கி கொண்டு சேர்க்கும் வேலையை சில வலைப்பதிவர்கள்
செய்து வருகின்றனர். இத்தகைய வலைப் பதிவுகள் நல்லவர்களை முகம் சுளிக்க
வைக்கின்றன. தனி மனிதத் தாக்குதல் நடத்தும் முஸ்லிம் பெயர் தாங்கிகளாகிய
இந்த முனாபிக்குகள் உண்மையான மூமின்களாக மாற இறைவனிடம் பிரார்த்திப்போம்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />வலைப்பதிவுகளை
உருவாக்கி பதிந்து வரும் சகோதார்களே! உங்கள் இறையச்சம் எங்கே போனது?
உங்கள் இஸ்லாமியப் பண்பாடும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த நற்குணங்களும்
எங்கே போயின? பித்னாக்களைப் பரப்பும் உங்கள் முயற்சிகளை ஓரங்கட்டி விட்டு
இனியாவது இஸ்லாத்தைப் பரப்பும் வேலையில் உங்கள் பொன்னான நேரத்தைச்
செலவிடுங்கள். இஸ்லாம் சென்றடையாத இதயங்களில் இஸ்லாத்தைக் கொண்டு சேர்க்க
உங்கள் பதிவுகள் பயன்படட்டும். உண்மை இஸ்லாத்தை உணராத முஸ்லிம்களுக்கு
உங்கள் பதிவுகள் வழிகாட்டட்டும்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br /><strong>மூமின்களே!
(சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில்
நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்.(பிறர் குறைகளைத்) துருவித்
துருவி ஆராய்ந்துக் கொண்டிராதீர்கள். அன்றியும் உங்களில் சிலர் சிலரைப்
பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின்
மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்.
இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை
அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன்.</strong> (அல்குர்ஆன் 49:12) </div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />உங்கள்
சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க நீங்கள் வீரும்புவீர்களா, தினந்தோறும்
உங்கள் சொந்த சகோதரனின் மாமிசத்தைப் புசித்துக் கொண்டிருக்கிறீர்களே இந்த
இறைவசனம் எப்படி உங்களுக்குத் தெரியாமற் போனது? </div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />நீங்கள்
பதியும் தனிமனிதக் குறைகள் உண்மையிலேயே உங்களால் விமர்சிக்கப்படும்
நபர்களிடம் இருந்தால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தெரியப்படுத்தி
அவர்களைத் திருத்துங்கள். அதற்கு மேலும் அவர்கள் திருந்தவில்லையென்றால் இனி
அவர்களாகட்டும் இறைவனாகட்டும். அதைவிட்டு விட்டு, நீங்கள் மென்மேலும்
பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டும், சமுதாயத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிக்
கொண்டும்; இருக்காதீர்கள். <strong>அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரை விரும்பமாட்டான்</strong> (அல்குர்ஆன் 5:64)</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />இணையத்தின்
இன்னொரு சிறப்பம்சம் மின்னஞ்சல் வசதி. தொலைபேசி உபயோகம் பரவலாக வந்துவிட்ட
பின்னர் பொதுவாகவே கடிதம் எழுதும் வழக்கம் வெகுவாக குறைந்து விட்டாலும்
மின்னஞ்சல் உபயோகம் வெகுவாக வளர்ந்து விட்டது. தகவல்களைப் பரிமாறிக் கொள்ள
இணைய உபயோகிப்பாளர்கள் மின்னஞ்சல் வசதியை மிக அதிகமாகப்
பயன்படுத்துகின்றனர்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />பொதுவான
மற்றும் சமுதாயச் செய்திகளையும் திருமறை வசனங்களையும் நபி மொழிகளையும்
பயனுள்ள கட்டுரைகளையும் ஒருவருக் கொருவர் அனுப்பியும் பெற்றும்
பயனடைகின்றனர். பயனுள்ள பல செய்திகளுக்காக இந்த மின்னஞ்சல் வசதி
பயன்படுத்தப்பட்டாலும் சில சமயம் சில வழிகேடர்களால் இது தவறான
நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுபவது வேதனைக்குரியது.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />முகம்
காணா நண்பர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் பெரும்பாலும் பயனுள்ள பல
செய்திகளைத் தாங்கி வந்தாலும் சில மின்னஞ்சல்கள் ஒன்றுக்கும் உதவாத
உதவாக்கரைச் செய்திகளையும் தாங்கி வந்து கொண்டிருக்கின்றன. வலைத்தளங்கள்
மூலமாகவும் வலைப்பதிவுகள் மூலமாகவும் பரப்பிய அவதூறுகளும் அசிங்கங்களும்
போதாதென்று சில முனாபிக்குகள் மின்னஞ்சல் மூலமாகவும் பித்னாக்களை பரப்புவதை
தமது முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்குத் தான் வேறு வேலை
எதுவும் இல்லை என்றால் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே
பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை உபயோகிப்பாளர்கள் பலரின், நேரத்தை
வீணடித்து, மனதைப் புண்படுத்தி பொருளாதாரத்தைப் பாழ்படுத்தி வெறுப்புக்கும்
ஆளாகின்றனர்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />முழுக்க
முழுக்க புறம் பேசுவதையும், அவதூறுகளை அள்ளி இறைப்பதையும் தமது முழுநேரத்
தொழிலாகக் கொண்ட சிலர் அனுப்பும் மின்னஞ்சல்களில் தப்பித்தவறி கூட நல்ல
செய்திகள் இடம் பெறாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றனர். தன்
சொந்த சகோதரனின் மாமிசத்தை தான் புசித்தது போதாதென்று மற்றவர்களும் புசிக்க
பங்கு வைக்கின்றனர்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />சர்வசாதாரணமாகப்
புறம் பேசித்திரியும் சகோதரர்களே கீழ்க்காணும் நபி மொழியை கொஞ்சம் நினைவு
படுத்திக் கொள்ளுங்கள்.நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு
தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது கப்ரில் வேதனை செய்யப்படும்
இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது <strong>'இவர்கள்
இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள் ஒரு பெரிய விஷயத்திற்காக
(பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை' என்று சொல்லி
விட்டு, இருப்பினும் (அது பெரிய விஷயம் தான்) அவ்விருவரில் ஒருவர் தாம்
சிறு நீர் கழிக்கும் போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம் பேசித்
திரிந்தார்'</strong> என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையக் கொண்டு வரச்
சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை
வைத்தார்கள். அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு
செய்தீர்கள்? என்று கேட்கப்பட்டதற்கு 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும்
காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக்
கூடும்' என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்
(ரலி) அறிவித்தார். (ஆதாரம் :புகாரி பாகம் 1 எண் 218)</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />இப்போதும்
கப்ருகளில் பச்சை மட்டையை வைப்பதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்துக்
கொள்ளாமல், கப்ரில் வேதனை நடப்பதற்கு அண்ணல் நபி (ஸல்) கூறிய இரண்டு
காரணங்களில் ஒன்றாகிய புறம் பேசித்திரிபவருக்குக் கிடைக்கும் தண்டணைக்கு
ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்துங்கள்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />இணைய
தளங்களில் அதிகம் உலாவரும் வாய்ப்பும் வசதியும் கொண்டவர்களே! உங்கள்
பொன்னான நேரத்தை வீணாகக் கழிக்காமல், நித்திய வாழ்க்கைக்கு சரியான
வழிகாட்டி உங்களை நேர்வழியில் நடத்திச் செல்லும் இஸ்லாமிய இணைய தளங்களை
பார்வையிடுங்கள். </div>
<div align="justify">
</div>
<div align="justify">
இஸ்லாமிய
அழைப்புப் பணியில் ஆர்வமிக்க எழுத்தாளர்களே! சொந்தமாக வலைப் பதிவுகளை
உருவாக்கி சமுதாயம் பயன் பெறத்தக்க உங்கள் ஆக்கங்களைப் பதியுங்கள்.
உங்களைக் கொண்டு ஒருவர் நேர்வழி பெற்றாலும் அதற்கான உயர்ந்த கூலி இறைவனிடம்
கிடைக்கும் இன்ஷா அல்லாஹ். </div>
<div align="justify">
</div>
<div align="justify">
உருவாக்கும்
இலவச சேவையை பல்வேறு நிறுவனங்கள் செய்து வருகின்றன. நீங்கள் வழக்கமாகப்
பார்வையிடும் வலைப்பதிவுகளின் மேற்பகுதியில் (கிரியேட் பிளாக்) என்னும்
பகுதியை சொடுக்கினால் மிகச் சுலபமாக உங்கள் பெயரில் சொந்த வலைப்பதிவை
உருவாக்கலாம். வலைப்பதிவுகளை எளிதாக உருவாக்கும் வழிமுறைகளை மேற்கண்ட இணைய
தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புகள் மூலம் அறியலாம்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
உங்கள் வலைப்பதிவுகளை புகழ் பெற்ற வலைப்பதிவுத் திரட்டிகளில் பதிந்துக்
கொள்ளுங்கள், இலகுவாக எவ்லோரையும் உங்கள் பதிவுகள் சென்றடையும். பதிவுகளில்
எழுதும் போது பலருக்கும் உபயோகமான நல்ல கருத்துக்களை மட்டுமே எழுதுங்கள். </div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />பல்வேறு
வலைப் பதிவுகளைப் பார்வையிட நேரிட்டால் அவற்றில் இஸ்லாத்திற்கும்
முஸ்லிம்களுக்கும் எதிரான விஷமக் கருத்துக்களைக் காணும்போது உடனுக்குடன்
அதற்குப் பின்னூட்டம் இடுங்கள். பின்னூட்டம் இடும்போது நாகரீகத்தையும்
நளினத்தையும் கடைப்பிடியுங்கள். அறியாமையாலும் இஸ்லாத்தைப் பற்றிச்
சரியாகப் புரிந்துக் கொள்ளாததாலும் சிலர் தவறாக எழுதக்கூடும். மென்மையான
அணுகுமுறை அவர்கள் திருந்துவதற்கு வழி ஏற்படுத்தும்.</div>
<div align="justify">
</div>
<div align="justify">
<br />முஸ்லிம்
சமுதாயத்தினரிடையே அறியாமை இருளகற்றி அல்லாஹ்வின் திருமறையையும் அவனது
திருத்தூதரின் வழிமுறைகளையும் தெளிவாகப் புரியவைப்போம். அழைப்புப் பணிக்கு
இந்த இணையம் என்னும் ஊடகத்தைப் பயன்படுத்தி இனிய இஸ்லாத்தை இகமெங்கும்
எடுத்துச் செல்வோம். சகோதர சமுதாயத்தினரின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள தவறான
புரிதல்களைக் களைந்து உண்மை இஸ்லாத்தை உலகறிய எடுத்துரைப்போம். அஞ்ஞானம்
என்னும் இருள் கவ்விக் கிடக்கும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இணையம்
என்னும் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி இஸ்லாம் என்னும் ஒளி
விளக்கை ஏற்றி வைப்போம். சத்திய மார்க்கம் இஸ்லாம் சகல உலகையும் சரியான
வழி நடத்தும் இன்ஷா அல்லாஹ். </div>
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-30153634370795477512012-02-06T23:57:00.000+03:002012-02-06T23:57:20.066+03:00எனது பள்ளி வாழ்க்கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
எல்லையில்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால<br />புகழ்
அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும். ஸலவாத்தும் ஸலாமும் அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் அடியொற்றி வாழ்ந்த நல்லோர் அனைவர்
மீதும் உண்டாகட்டுமாக ஆமீன்.<br />உலகில் வாழ்ந்த பல்வேறு அறிஞர்கள் தங்கள்
சுய சரிதையை எழுதியிருக்கின்றனர். அவர்கள் தம் இறுதிக் காலத்தில் தங்கள்
மலரும் நினைவுகளை மனதில் அசை போட்டவர்களாக, தங்கள் வாழ்வில் தாங்கள்
சந்தித்த இன்ப துன்பங்களையும், தாங்கள் பெற்ற படிப்பினைகளையும், எழுத்தில்
வடித்திருக்கின்றனர். அடுத்தத் தலைமுறையினருக்கு அதில் பல்வேறு
படிப்பினைகள் இருக்கின்றன. அது போல் நானும் எனது சுய சரிதையை
எழுதியிருக்கிறேன். <strong>அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா</strong><br /><strong></strong><br />எனது சுய சரிதையிலிருந்து ஒரு பகுதி<br /><br /><strong><span style="font-size: 130%;">பிறந்த மண்ணைப் பிரிந்து...</span></strong><br /><br />எனது
வெளி உலக வாழ்க்கை முதன் முதலில் ஆக்கூரில் ஆரம்பமாகின்றது. 1970 ஆம்
ஆண்டு ஜூன் திங்கள் முதல் வாரம் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர்நிலைப்
பள்ளியில் சேர்ந்தேன்.<br />ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் 5 ஆம் வகுப்பு வரை
என்னுடன் பயின்ற நண்பர்களின் வாழ்க்கை அதே சந்தோஷத்துடனும்
மகிழ்ச்சியுடனும் அவர்களின் உயர் நிலைப்பள்ளியின் காலகட்டத்திலும்
கழிந்திருக்கலாம். ஆனால் அது போல் சுதந்திரமும் மகிழ்ச்சியும் எனக்குக்
கிடைக்க வில்லை என்பது தான் உண்மை.<br /><br />அந்தப் பள்ளிக்கூட நாட்களில்
அப்படி ஒரு சுதந்திரம் எனக்குக் கிடைக்க வில்லை என்று நான்
ஏங்கியிருக்கிறேன். ஆனால் கட்டுப்பாடான அந்த ஆக்கூர் வாழ்க்கை எனக்கு
அறிவைத் தந்தது, அனுபவங்களைத் தந்தது, அநேக நண்பர்களைத் தந்தது, மனப்
பக்குவத்தைத் தந்தது, மார்க்க ஞானத்தைத் தந்தது. இவையெல்லாம் எனது ஆரம்பப்
பள்ளித் தோழர்கள் அனைவருக்கும் கிடைத்ததா என்பது எனக்குத் தெரியாது.<br /><br />மார்க்க
விஷயங்களில் ஓரளவேனும் ஞானம் பெறுவதற்கு அந்த ஆக்கூர் வாழ்க்கை தான்
எனக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. தமிழில் கட்டுரைகளும் கவிதைகளும்
எழுதும் அளவுக்கு எனக்கு தமிழ் அறிவை ஊட்டியதும், நான் ஒரு எழுத்தாளன்
ஆவதற்கு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதும் இந்த ஆக்கூர் வாழ்க்கை தான்
என்றால் அது மிகையாகாது.<br /><br />ஆக்கூரில் பயின்ற 6 ஆண்டுகளும் எனது
வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அங்கு பயின்றுக் கொண்டிருந்த
காலத்தில் அது ஒரு சிறை வாழ்க்கையாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது
நினைத்துப் பார்த்தால் அது ஒரு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும்.
மறுபடியும் அந்த வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டோமா? என்று தான் ஏக்கம்
வருகின்றது.<br /><br />மிகவும் கண்டிப்பு நிறைந்த நிர்வாகம், கடுமையான
சட்டதிட்டங்கள், மனிதாபிமானம் கொண்ட ஆசிரியர்கள், சிறந்த கல்வி, சிறப்பான
நல்லொழுக்கப் பயிற்சி இவற்றின் ஒட்டு மொத்தக் கலவை தான் ஆக்கூர் ஓரியண்டல்
அரபி உயர் நிலைப் பள்ளி. 'கற்க வாரீர்! சேவை செய்யத் திரும்புவீர்!'
என்னும் அற்புதக் கொள்கையை குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஓர் அற்புத
நிறுவனம்.<br /><br />ஆக்கூர் ஓரியண்டலைப் பற்றி நினைத்துப் பார்க்கும் மாணவர்
எவருக்கும் மறக்க முடியாத ஒரு ஆசிரியர் என்றால் சங்கைக் குரிய இக்பால் சார்
அவர்கள் தான். மிகச் சில நாட்கள் மட்டுமே இருந்து விட்டுச் சென்ற மாணவனும்
நினைவில் வைத்திருக்கும் ஒரு ஆசிரியர் உண்டென்றால் அது இந்த
நல்லாசிரியரைத் தான். எங்கள் மீது பரிவும் பாசமும் காட்டிய, நற்கல்வியையும்
நல்லொழுக்கத்தையும் போதித்த நல்லாசிரியர் பலர் இருந்தனர். ஒவ்வொருவரைப்
பற்றியும் ஓராயிரம் வரிகள் எழுதலாம். ஆனாலும் இக்பால் சார் அவர்களைப்
பற்றிக் குறிப்பிடாவிட்டால் ஓரியண்டல் பள்ளி வாழ்க்கையே அர்த்தமற்றதாகி
விடும்.<br /><br />தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிலிருந்தும் நண்பர்கள்
கிடைத்தார்கள். 6 ஆம் வகுப்பு என்னும் வண்டி புறப்படும் போது பயணத்தைத்
தொடங்கியவர்கள் 90 பேர். வழி நெடுகிலும் பல ஊர்களில் (வகுப்புகளில்) சிலர்
தம் பயணத்தை நிறுத்திக் கொண்டனர். சிலர் புதிதாக வண்டியில் ஏறிக் கொண்டனர்.
போக வேண்டிய ஊராகிய பள்ளி இறுதி வகுப்பை அடையும் போது முதலில் ஏறிய 90
பேர்களில் வெறும் 16 பேர் மட்டுமே எஞ்சினர். இடையில் ஏறிக் கொண்ட 8
பேரையும் சேர்த்து 24 பேர் மட்டுமே 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதினோம். அனைவருமே வெற்றி அடைந்து நூறு சதவிகித தேர்ச்சியைப் பெற்று
பள்ளிக்கு பெருமை சேர்த்தோம்.<br /><br />மற்ற மாணவர்கள் இடையில் எங்களை
விட்டுச் சென்றதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அதிகமான கட்டுப் பாடுகள்,
கடுமையான தண்டனை ஆகிய காரணங்கள் இருந்தாலும், மாணவர்கள் சீர் கெட்டுப்
போய்விடக் கூடாது என்பதற்காக இவற்றைக் குறை கூற முடியாது. ஆனால்
இதையெல்லாம் விட முக்கிய காரணம் உணவு என்பதில் சந்தேகமில்லை.<br /><br />ஆக்கூர்
ஓரியண்டலின் மகிமையைப் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதாது. அங்கு
நாங்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் குறிப்பிட்டாக வேண்டும். குறை
சொல்வது எனது நோக்கமல்ல வெனினும் எனது வாழ்க்கையில் நான் பட்ட பாடுகள்,
சந்தித்த இன்ப துன்பங்கள் அனைத்தையும் எழுத்தில் வடிக்க வேண்டும்
என்பதற்காக எல்லாவற்றையும் எழுதுகிறேன்.<br /><br />பொதுவாக 10 வயது முதல் 20
வயது வரை உள்ள பருவம் தான் நன்றாக சாப்பிடவேண்டிய பருவம். ஆனால் அந்தக் கால
கட்டத்தில் 6 ஆண்டுகள் வயிற்றுக்குப் போதுமான உணவோ, சத்துள்ள உணவோ
எனக்குக் கிடைக்கவில்லை.<br /><br />ஆரம்பக் காலத்தில் காலை உணவாகக் கஞ்சி
கொடுப்பார்கள். அதுவாவது கொஞ்சம் வயிறு நிரம்பும் அளவுக்கு இருந்தது. ஆனால்
அதற்குப் பிறகு கஞ்சியை நிறுத்தி விட்டு பழைய சோறு (நீராகாரம்) கொடுக்க
ஆரம்பித்து விட்டார்கள். ஒரு அகப்பை சோறும் ஒரு அகப்பை தண்ணீரும்
கிடைக்கும். தொட்டுக் கொள்ள பொட்டுக் கடலை சட்னி தருவார்கள்.தட்டில்
நீராகாரத்தை வாங்கிக் கொண்டு நடந்தபடியே குடித்துக் கொண்டு போனால், சட்னி
கொடுக்கும் இடம் வரும் போது தட்டில் சோறு தீர்ந்து விடும். சட்னியை கையில்
வாங்கி, ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வருவது போல், 'நான் அப்படியே
சாப்பிடுவேனே' என்று அப்படியே சாப்பிட்டு விட வேண்டியது தான். 'சட்னி இங்கே
சோறு எங்கே?' என்றெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க முடியாது.<br /><br />மதிய
உணவு சாப்பிடும்போது எந்த மாணவனுக்கும் வீட்டு நினைவு வராமல் இருக்காது.
அரை வயிற்றுக்குத் தான் உணவு. 'அரை வயிறு உணவு கால் வயிறு தண்ணீர் கால்
வயிறு காலி, இது தான் ஆரோக்கியம்' என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதைச்
சரியாகக் கடைப் பிடித்தது நாங்கள் தான்.<br /><br />கட்டி கட்டியாக சோற்றை
வெட்டி எடுத்து வைப்பார் எங்கள் சமையல் காரர் கலிய மூர்த்தி. கட்டியை
உடைத்துப் பார்த்தால் உள்ளே வேகாத அரிசி இருக்கும். இப்படி ஒரு நூதனமான
முறையில் அவரைத் தவிர வேறு யாருக்கும் சமைக்கத் தெரியாது.உலையில்
போடுவதற்கு முன் அரிசியல் கல்லைப் பொறுக்க அவருக்கு நேரம் இருக்காது.
சாப்பிடும் போது நாங்கள் தான் சாப்பாட்டில் இருக்கும் கல்லை மிகவும்
லாவகமாக நாக்கால் எடுத்து விடுவோம். ஆக்கூர் மாணவர்களுக்கு இந்தக் கலை
அத்துப்படி.<br /><br />வருடம் முழுவதும் பருப்புக் குழம்பு தான். அந்த கலர்
தண்ணீருக்கு பருப்புக் குழம்பு என்று நாங்கள் தான் பெயர் வைத்துக்
கொண்டோம். விஞ்ஞானப் பாடத்தில் படித்த 'வடித்தெடுத்தல்' முறையை எங்கள்
விடுதி பருப்புக் குழம்பில் சோதனை செய்து பார்த்தால் இறுதியில் எதுவும்
மிஞ்சாது.<br /><br />தட்டில் சோற்றை வாங்கிக் கொண்டு அடுத்த கவுண்டருக்குச்
சென்றால் அங்கே குழம்பு என்று நாங்கள் பெயர் வைத்த கலர் தண்ணீர்
ஊற்றுவார்கள். நமக்கு ஒரு துண்டு உருளைக் கிழங்கு விழாதா? என்று துஆச்
செய்துக் கொண்டே தட்டை நீட்டினால், துஆ கபூலானவர்களின் தட்டில் ஒரு துண்டு
உருளைக் கிழங்கு வந்து விழும். ஒரு துண்டு உருளைக் கிழங்கு கிடைக்கப்
பெற்றவன் பெரிய அதிர்ஷ்டசாலி. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவன் நடக்க,
பின்னால் வருபவர்களுக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.<br /><br />அது சரி,
தொட்டுக் கொள்ள என்ன என்று தானே கேட்கிறீர்கள்? பக்கத்தில் உள்ளவரைத் தான்
தொட்டுக் கொள்ள வேண்டும். பொரியல், கூட்டு என்றெல்லாம் கேள்விப்
பட்டிருக்கிறோம். நாங்கள் பார்த்தது கூடக் கிடையாது. கறி, மீன்
என்பதெல்லாம் கனவில் கூடக் கண்டது கிடையாது.<br /><br />இரவு சாப்பாட்டுக்கு
வருடம் முழுவதும் ரசம் தான். எங்கள் விடுதி ரசம் வெள்ளையாக இருக்கும். அது
தேங்காய்ப்பால் ரசம் என்று எங்கள் சமையல் காரர் சொல்வார். ஒரு நாள் மாலை
நேரத்தில் சோறு சமைக்க அரிசி களையும் போது சமையல்காரர் தன் உதவி ஆளிடம்
'தேங்காய்ப்பால் எடுத்து வைக்க ஒரு பாத்திரம் கொண்டு வா' என்று சொன்ன போது
தான், தேங்காய்ப்பால் எதிலிருந்து எடுக்கப்படுகிறது என்னும் உண்மையைப்
புரிந்துக் கொண்டோம்.<br /><br />பல்வேறு சுக துக்கங்களுடன் ஆக்கூர் வாழ்க்கை
மெது வாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இடையிடையே மகிழ்ச்சியான நாட்கள்
என்றால் ஆக்கூரின் பணக்கார வீடுகளில் நடக்கும் திருமணம் நடக்கும் நாட்கள்
தான். பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருத்தளிப்பார்கள். மிகப் பிரமாதமான 5
கறிச் சோறு. இன்றும் அதன் ருசி மறக்கவில்லை. வாழ்க அந்தப் பேருள்ளங்கள்.<br /><br />இறந்தவர்களின்
வீடுகளில் குர்ஆன் மௌலூது ஓதக் கூப்பிடுவார்கள். நன்றாக ஓதும் சில
மாணவர்களுக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும். வகைவகையான திண்பண்டங்களும்
வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். இடையிடையே கிடைக்கும் இது போன்ற
விருந்துகள் தான் அந்தப் பாலைவன வாழ்க்கையில் வசந்தமாக வீசும்<br /><br />ரபீவுல்
அவ்வல் மாதம் வந்து விட்டால் எங்களுக்குக் கொண்டாட்டம் தான். தினமும்
இரவில் பெரியப் பள்ளிவாசலிலிருந்து அனைவருக்கும் நெய்ச்சோறு வந்து விடும்.
களி போன்ற சோற்றுக்கும் கண்ணீரை வரவழைக்கும் ரசத்துக்கும் 12 நாட்கள்
விடுதலை. நபி (ஸல்) அவர்களுக்காக வருடமெல்லாம் மௌலூது ஓத மாட்டார்களா? எனத்
தோன்றும். இது மார்க்கத்திலேயே இல்லாத செயல் என்றும் மாபெரும் பாவம்
என்றும் அப்போது தெரியாதல்லவா?<br /><br />ஆறு ஆண்டுக் காலம் உணவுக்காக நாங்கள்
பட்ட பாட்டை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்
இதையெல்லாம் எழுதியிருக்கிறேன தவிற எங்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல ஆறு
ஆண்டுகள் இலவசமாக சோறு போட்டு வளர்த்த ஒரு நிறுவனத்தைக் குறை கூறுவது எனது
நோக்கமல்ல.<br /><br />ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு உணவளிக்கவே பல பெற்றோர்கள்
படாத பாடு படும்போது, கிட்டதட்ட 400க்கும் அதிகமான மாணவர்களுக்கு தினமும்
மூன்று வேளை காலமெல்லாம் சோறு போடுவதற்கு அந்த நிர்வாகம் தான் என்ன
செய்யும். அவர்களைச் சொல்லிக் குறற்மில்லை.<br /><br />இப்போதாவது மதிய உணவை
அரசாங்கம் தருகிறது. அப்போது அதுவும் இல்லை. முழுக்க முழுக்க நிர்வாகம்
தான் பொறுப்பு. ஒரு நாள் கூட எங்களைப் பட்டினி போடாமல் ஒவ்வொரு வேளையும்
உணவளிக்க அதன் நிர்வாகிகள் என்ன பாடுபட்டிருப்பர்கள்! ஓரியண்டலின்
தாளாளர்களாக தன்னலம் கருதாது பாடுபட்ட கண்ணியத்திற்குரிய ஜனாப், ஓஜே
முஹம்மது காசிம், மற்றும் சங்கைக்குரிய ஜனாப் அப்துல் ஹமீத் போன்றவர்களின்
சேவைக்கு அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுமையில் நற்கூலி தருவானாக
என்று அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக துஆச் செய்வார்கள்.<br /><br />சமுதாயத்தின்
பெரும் செல்வந்தர்கள் எவரேனும் இக்கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் தயவு
செய்து இது போன்ற தரமான மார்க்கக் கல்வி ஸ்தாபனங்களுக்கு உங்கள் ஜகாத் ஸதகா
போன்ற தருமங்களைச் செய்யுங்கள். ஏழை மாணவர்களின் துஆ எப்போதும்
உங்களுக்குக் கிடைக்கும்.'<br /><br />ஆக்கூரில் ஆறு வருடங்கள் பயின்ற மாணவன்
உலகின் எந்தத் தீவுக்குப் போனாலும் பிழைத்துக் கொள்வான்' என்று தலைமை
ஆசிரியர் முருகேசன் அய்யா அவர்கள் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு
உண்மை. அதன் பிறகு சென்ற எந்த இடத்திலும் நாங்கள் உணவை ஒரு பொருட்டாகவே
நினைத்ததில்லை. எங்களை இப்படி ஒரு பக்குவத்துக்கு ஆளாக்கியது ஆக்கூர்
வாழ்க்கை.<br /><br />சாப்பிடுவதற்காக வாழ்பவர்கள் இந்த உணவை காரணம் காட்டி
வெளியேறி விட்டனர். வாழ்வதற்காக சாப்பிடும் கொள்கையைக் கொண்டவர்கள் இந்த
உணவுப் பிரச்சினையை ஒரு பொருட்டாக நினைக்காமல் தாங்கள் வந்த நோக்கமாகிய
கல்வியைக் கற்பதில் கவனம் செலுத்தினார்கள். ஏனெனில் அவ்வளவு தரமாக கல்வி
அந்த ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியில் எங்களுக்குக்
கிடைத்தது. ஆக்கூரில் கற்று வெளியேறியவர்கள் பெரும் பாலும் நல்ல நிலையியே
இருக்கின்றனர் என்பதைப் பிற்காலத்தில் காண நேர்ந்தது.<br /><br />சமீபத்தில்
சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துக் கொள்ள ஆக்கூர்
சென்றிருந்தேன். இப்போதைய தாளாளர் சங்கைக்குரிய ஜனாப் அல்ஹாஜ் முஹம்மது
இக்பால் அவர்களின் நிர்வாகத்தின கீழ் மிகச் சிறந்த முன்னேற்றத்தை
அடைந்திருக்கிறது. மிகவும் தரமான உணவு. சகல வசதிகளுடன் கூடிய விடுதி.
சிறப்பான கவனிப்பு. பல்வேறு புதிய கட்டடங்கள். பள்ளியின் முன்னேற்றத்தைக்
கண்டு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.<br /><br />'மன்பவுல் பயான்
மாணவர் மன்றம்' என்ற பெயரில் இயங்கி வந்த மன்றத்தின் வாரந்திரக் கூட்டம்
வெள்ளிக்கிழமை இரவுகளில் நடக்கும். ஒவ்வொரு வாரமும் பேச வேண்டிய
மாணவர்களின் பட்டியல் அறிவிப்புப் பலகையில் எழுதி ஒட்டப்படும். பல
மாணவர்கள் பெயர் வரும் போது லீவு போட்டு விடுவார்கள். 8 ஆம் வகுப்பு வரை
நானும் அப்படித்தான்.<br /><br />9 ஆம் வகுப்பு படிக்கும் போது, முதல் வாரமே
மன்றத் தலைவரிடம் சென்று நானாகவே என் பெயரைப் போடும்படிச் சொன்னேன்.
'நபிகள் நாயகம்' என்ற தலைப்பைத் தேர்வு செய்திருந்தேன். பேச வேண்டிய நாள்
வந்தது. என் பெயர் கூப்பிடப்பட்டது. மேடையில் ஏறினேன். கை கால்கள் தந்தி
அடிக்க ஆரம்பித்தன. நாக்கு உலர்ந்து போனது. ஒரு வாறு சமாளித்துக் கொண்டு
என் உரையைத் தொடங்கினேன்.<br /><br />'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில்
பிறந்தார்கள். அவர்களது தாயார் பெயர் ஆமினா. தந்தை பெயர் அப்துல்லா. 25 ஆம்
வயதில் திருமணம் செய்தார்கள். 40 ஆம் வயதில் நபிப்பட்டம் பெற்றார்கள். 53
ஆம் வயதில் ஹிஜ்ரத் சென்றார்கள். 63 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். இத்துடன் என் உரையை முடித்துக்
கொள்கிறேன்'<br /><br />என்று சொல்லி விட்டு ஓடிப் போய் உட்கார்ந்துக்
கொண்டேன்.எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்தார்கள். ஒவ்வொரு மாணவரும்
பேசிய பிறகு தலைவர் விமரிசனம் செய்வது வழக்கம். நான் பேசிய பின்னர் தலைவர்
எழுந்தார், அவர் செய்த விமரிசனம் அற்புதமானது. 'நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பலர் பேச நான் கேட்டிருக்கிறேன், ஆனால்
இதைவிடச் சுருக்கமாக வேறு யாரும் பேச முடியாது' விமரிசனத்தைக் கேட்டு
எனக்கே சிரிப்பு வந்து விட்டது. அன்று முதல் ஒரு வைராக்கியம் பிறந்தது.
நானும் ஒரு பேச்சாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.<br /><br />வாரம்
தவறாமல் பெயர் கொடுத்து பேசினேன். அதன் பின்னர் 3 ஆண்டுகள் தொடர்ந்து
பேசினேன். நான் எப்போது பேசுவேன் என்று சக மாணவர்கள் எதிர்பார்க்கும்
அளவுக்கு என் பேச்சின் தரம் உயர்ந்தது. இலக்கிய மன்றக் கூட்டங்களிலும்
பேசத் தொடங்கினேன். பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றேன்.<br /><br />பள்ளிக்கூடம்
விடுமுறை விடும் போது ஊருக்கு வருவதற்கு ஆக்கூரை விட்டு பஸ்
புறப்படும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். கனத்த இதயம் இலேசானது போல்
தோன்றும். அது போல் விடுமுறை முடிந்து மறுபடியும் ஆக்கூர் திரும்பும் போது
பஸ் ஆக்கூரை நெருங்க நெருங்க உலகத்து வேதனையும் ஒன்றாக மனதில் வந்து
சேரும். இது வெல்லாம் அங்கு படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தான்.<br /><br />ஆக்கூரில்
நாங்கள் கற்ற கல்வியால் அளப்பெரும் நன்மைகளை பிற்காலத்தில அடையப்
பெற்றோம். உயர் கல்வி கற்க அடுத்தடுத்து பல்வேறு கல்வி நிலையங்களுக்கு
நாங்கள் சென்ற போது, மற்ற கல்வி நிறுவனங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களை
விட உயர்ந்த அந்தஸ்தில் மதிக்கப்பட்டோம்.ஆக்கூர் ஓரியண்டலில் கற்ற
கல்வியின் மகிமையை அப்போது தான் நாங்கள் புரிந்துக் கொண்டோம். நாங்கள் பட்ட
கஷ்டங்கள் எல்லாம் நொடிப் பொழுதில் எங்களுக்கு மறந்து போனது.<br /><br />உலகக்
கல்வியையும், மார்;க்கக் கல்வியையும் ஒரு சேரப் பயிலும் அரிய வாய்ப்பு
எங்களுக்குக் கிடைத்தது போல் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. 11 ஆம்
வகுப்பை முடித்து நாங்கள் வெளியேறிய போது கிட்டத்தட்ட அரபிக் கல்லூரியில்
படித்து பட்டம் பெற்ற ஒரு மௌலவியின் தரத்தில் பாதியாவது எங்களிடம் இருந்தது
என்று சொல்லாம்.<br /><br />தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் வந்து
ஆக்கூரில் சங்கமித்த நாங்கள், ஒருவருக் கொருவர் உறுதுணையாய், உற்ற
நண்பர்களாய், அண்ணன் தம்பிகளாய், காலம் கழித்தோம். நட்பின் உண்மையான பொருள்
புரிந்து நண்பர்கனைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் இந்த வயதில் தானே
வரும்.எத்தனையோ நண்பர்களுடன் பழகும் வாய்;ப்பு கிடைத்தது. அந்த நண்பர்கள்
அனைவரைப் பற்றியும் எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. பள்ளி வாழ்க்கை
முடிந்த பின்னர் அவரவரும் தம் எதிர் காலக் கனவுகளுடன் வாழ்க்கை எனும்
வானத்தில் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விட்டனர்.<br /><br />சிலர் மனதில்
நின்றனர். சிலர் மறந்து போயினர். சிலரைப் பார்த்தால் ஞாபகம் வரும், சிலரின்
பெயர்கள் மட்டும் நினைவில் நின்றன, நிகழ்வுகள் மறந்து போயின. பிரிந்து
சென்று 30 ஆண்டுகள் ஆனபின்பும் இன்றளவும் தொடர்;ந்து தொடர்பு
வைத்திருக்கும் அற்புத நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.<br /><br />என்
வாழ்க்கையில் முதன் முதல் நட்பு என்ற வார்த்தைக்குப் பொருள் சொன்ன
வித்தகன், இன்றளவும் என்னால் மறக்க முடியாத நண்பன்,என்றென்றும் என்
நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ஏற்காட்டுச் செம்மல் எஸ்ஸென்கே என்று நான்
அன்புடன் அழைக்கும் காஜா மைதீன்,வகுப்பில் தொடர்ந்து முதல் ரேங்கைக்
குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்த, தற்சமயம் பிரான்ஸில் குடும்பத்துடன்
வசிக்கும் கோட்டைக்குப்பம் நூஹ், மறக்காமல் அடிக்கடி கடிதம் எழுதும் சேலம்
உஸ்மான், ஜமால் முஹம்மது கல்லூரில் பெருமைப் படத்தக்க விதத்தில்
பேராசிரியராகப் பணிபுரியும் நல்லொழுக்கத்திற்குப் பேர் போன முஹ்யித்தீன்
அப்துல் காதர், எழுத்துத் துறையில் எனக்கு ஆர்;வமூட்டிய கோட்டைக்குப்பம்
அக்பர் அலி, ரியாதில் ஒரு பெரும் நிறுவனத்தில் உயர்ந்த பதவி வகித்துக்
கொண்டு இன்றளவும் என் மீது உயர்வான அபிப்பிராயம் வைத்திருக்கும்
திண்டுக்கல் சுகர்னோ என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீத், குடும்பத்தில் ஒருவனாக
என்னை ஏற்றுக் கொண்டு விட்ட அப்துல் ஹாதி, பள்ளப்பட்டி
உபைதுர்ரஹ்மான்.உயர்ந்த நிலையை அடைந்தும் உள்ளத்தால் மறக்காத முத்துப்
பேட்டை ஷாஹ-_ல் ஹமீத், மாபெரும் தொழில் அதிபராக வளர்;ந்த பின்னும் நட்பை
மறக்காத திருமுல்லைவாசல் அலி ஹூஸைன் என இந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே
போகும்.<br />சம காலத்தில் பயிலாவிட்டாலும் சநதிக்கும் நேரமெல்லாம் தாமும்
ஆக்கூரில் பயின்ற இன்ப நினைவுகளை எமக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கும்
அன்பு நண்பர் திண்டுக்கல் சேக் அலி போன்றவர்களையும் மறக்க முடியாது.<br /><br />ஏகப்பட்ட
சோகங்களுடனும் இடையிடையே சில சந்தோஷங் களுடனும் ஒரு வாராகப் பள்ளி இறுதி
வகுப்பாகிய 11 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாகிவிட்டது. இது தான் இறுதி
ஆண்டு எங்கள் படிப்புக்கும் சரி நாங்கள் பட்;ட சிரமங்களுக்கும் சரி.
அதிலும் அரசாங்கப் பொதுத் தேர்வல்லவா? வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர்
அனைவரும் பாடம் மட்டும் எடுக்க வில்லை. எங்களைப் பிழிந்தும் எடுத்தார்கள்
என்று தான் சொல்ல வேண்டும். அது எங்கள் நன்மைக்குத் தானே என்று இப்போது
எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அப்போது எங்களுக்குப் புரியவில்லை.<br /><br />ஒவ்வொரு
பாட நேரமும் மாற மாற வௌ;வேறு ஆசிரியர்கள் வருவார்கள். வருபவர்கள் அனைவருமே
ஒருவருக் கொருவர் சளைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். படிப்பில் கொஞ்சம்
மந்தமாக இருக்கும் மாணவர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும்.தமிழ் ஆசிரியர்
வரும் போது மட்டும் கொஞ்சம் எங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வோம். அந்த
வருடம் எங்கள் தமிழாசிரியர் சிவசங்கரன் அய்யா அவர்கள் டாக்டர் பட்டம் பெற
சென்று விட்டதால் புதிதாக ஆபிரகாம் லிங்கன் அய்யா அவர்கள் வந்தார்கள்.
என்னமோ தெரிய வில்லை தமிழாசிரியர் அனைவருமே மென்மையாகத் தான் இருப்பார்களோ!
இவரும் எங்களை அன்புடன் நடத்தினார். தமிழ் வகுப்பைத் தவிர மற்ற வகுப்புகள்
அனைத்தும் போர்க்களத்தைத் தான் நினைவு படுத்தும்.<br /><br />அந்த ஒரு வருடம்
நாங்கள் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னர்
பொதுத் தேர்வு வரும் வரை நாங்கள் நிம்மதியாக உண்டதும் இல்லை, உறங்கியதும்
இல்லை. இரவும் பகலும் படித்தோம். எதிர் காலத்தை நினைத்துப் படித்தோம்.
எங்களைக் கசக்கிப் பிழிந்த ஆசிரியர்கள் மீது எங்களுக்கு கோபம் வரவில்லை.
நாங்கள் நல்ல மதிப்பெண் பெற்று எங்கள் எதிர் காலம் சிறப்பாக அமைய எல்லா
வகையிலும் பாடுபட்ட அந்த ஆசான்களை இன்றளவும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.<br /><br />ஒரு
வழியாக பொதுத் தேர்வு எழுதி முடித்து நிம்மதிப் பெரு மூச்சு விட்டோம்.
நாங்கள் பட்ட சிரமங்களிலிருந்தும், ஆறு ஆண்டுக் காலம் உடலாலும்
உள்ளத்தாலும் நாங்கள் பட்ட வேதனை களிலிருந்தும், விடுதலைக் கிடைத்து
விட்டது. அன்றை தினம் நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போல் ஒரு மகிழ்ச்சயை
அது வரை எங்கள் வாழ் நாளில் நாங்கள் அனுபவித்ததே கிடையாது.<br /><br />சிரமங்களிலிருந்து
விடுதலைப் பெற்ற மகிழ்ச்சி ஒரு புறம் என்றால் நண்பர்கள் அனைவரும் பிரியப்
போகிறோம் என்னும் வேதனை மறுபுறம். ஆறு ஆண்டுக் காலம் ஒன்றாக உண்டோம்,
உறங்கினோம், கூடிக் களித்தோம், சுக துக்கங்களைப் பகிர்ந்துக் கொண்டோம்,
இன்று இதோ இன்னும் சிறிது நேரத்தில் பிரியப் போகிறோம். இனி எந்த ஊரில் எந்த
நாட்டில் என்று காண்போமோ?<br /><br />பசுமை நிறைந்த நினைவுகளே<br />பாடித் திரிந்த பறவைகளே<br />பறந்து செல்கின்றோம்- நாமே<br />பிரிந்து செல்கின்றோம்<br />இவை எங்களுக்காகவே எழுதப்பட்;ட வரிகளோ!<br /><br />பிரியா
விடை பெற்றோம். ஒருவரையொருவர் ஆரத்தழுவியபடி அழுதோம். அவ்வப்போது ஏற்பட்ட
மனக்கசப்புகளுக்காக மன்னிப்புக் கேட்டோம். மாலைக் கதிரவன் மறைந்துக்
கொண்டிருக்கிறான். எவரும் புறப்பட்டதாகத் தெரியவில்லை. எங்களுக்கு
அறிவமுதூட்டிய அன்னையைப் போன்ற எங்கள் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப்
பள்ளியை விட்டு, நாங்கள் ஓடி விளையாடிய திடலை விட்டு, உட்கார்ந்து படித்த
இடத்தை விட்டு, உறங்கிய அறையை விட்டு, தொழுத பள்ளியை விட்டு, பேசப்பழகிய
மாணவர் மன்றத்தை விட்டு, அறிவுக் குருடர்களாக வந்த எங்களின் அகக் கண்களைத்
திறந்து வைத்த ஆசிரியப் பெருந்தகைகளை விட்டு, ஆயிரமாயிரம் கனவுகளுடன் இதோ
புறப்பட்டு விட்டோம்.<br />கற்க வந்தோம் சேவை செய்யத் திரும்புகிறோம்<br /><br /><strong><span style="font-size: 130%;">அபுல் கலாம் ஆஸாத் கிராமம்</span></strong><br /><strong><span style="font-size: 130%;">ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி</span></strong><br /><strong><span style="font-size: 130%;">ஆக்கூர்</span></strong><br />என்னும் கண்ணைப் பறிக்கும் அழகிய தோரண வாயில் வளைவு எங்கள் கண்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. எங்கள் இதயத்திலிருந்து அல்ல.<br />பின்
குறிப்பு:1976 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவு வெளியானபோது தேர்வு எழுதிய
அனைவருமே வெற்றி அடைந்து நூறு சதவிகித தேர்ச்சி பெற்று எங்கள் பள்ளிக்குப்
பெருமை சேர்த்தோம். அல்ஹம்து லில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனுக்கே.</div>
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-10141904710965268192012-02-06T23:45:00.000+03:002012-02-06T23:45:53.960+03:00எழுத்துக் கடலில் என் பயணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
எழுத்து' என்னும் பரந்து விரிந்த பெருங்கடலில் பலரும் பயணம் செய்கின்றனர்.
பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரும் கப்பல்கள் நீலத் திரை கடலை நீந்நி
வரும்போது நானும் என் பங்காக ஒரு சின்னஞ் சிறு படகினை மிதக்க
விட்டிருக்கிறேன். மாபெரும் கப்பல்கள் மிதக்கும் கடலில் சிறு படகுகளும் கூட
தம் பணியை செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கின்றன.<br /><br />எழுத்துக்கலை
என்பது ஓர் அற்புதமான கலை. அதிலும் பத்திரிக்கைத் துறை பல அறிஞர்களை
இவ்வுலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறது, பல இயக்கங்களின் வளர்ச்சிக்குப்
பக்க பலமாக இருந்திருக்கிறது. இந்த எழுத்துலகில் சாதித்தவர்கள் பலர்.
சாதித்துக் கொண்டிருப்பவர்கள் அநேகம்.நான் சாதித்தவனும் அல்ல, சாதித்துக்
கொண்டிருப்பவனும் அல்ல. சாதிக்கத் துடிப்பவன். எனது எழுத்துப் பசிக்குத்
தீணி போட்டவர்களுக்கு நன்றிக் கடனாக இந்தக் கட்டுரை.<br /><br />அதிகமதிகம்
நூல்களைப் படிக்கும் போது நாமும் ஒரு நூல் எழுத வேண்டும் என்னும் ஆவல்
பிறந்தது. அதிகமதிகம் பத்திரிக்கைகள் படிக்கும் போது இந்தப்
பத்திரிக்கைகளில் நமது பெயரும் வராதா? என்று ஏங்கியது
உண்டு.பத்திரிக்கைகளில் நமது பெயர் வரும் போது கிடைக்கும் இன்பம்
அலாதியானது. நமது பெயரில் உள்ள யாரோ ஒருவர் எழுதியிருந்தால் அதுவே நமக்கு
மகிழ்ச்சியாக இருக்கும். அது நாமாகவே இருந்தால் நமக்கு எவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்கும்? புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்கு இது சாதாரணமாக
இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற சாதாரண மான(ண)வர்களுக்கு இது சந்தோஷமானது.<br /><br />1977
ஆம் ஆண்டு நான் பி.யு.சி படித்துக் கொண்டிருந்த போது, தான் எனக்கும்
எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது திருச்சியிலிருந்து
வெளிவந்துக் கொண்டிருந்த முபாரக் என்னும் வார இதழுக்கு 'ரமளானின் சிறப்பு'
என்னும் தலைப்பில் சிறு கட்டுரை ஒன்று எழுதி அனுப்பினேன். அது ரமளான் மாதம்
என்பதால் அந்த ரமளான் முதல் வாரத்தில் எனது கட்டுரையை அந்த வார இதழ்
பிரசுரித்து என்னை கௌரவித்தது. இது தான் பத்திரிக்கையில் நான் எழுதிய முதல்
கட்டுரை.அதே முபாரக் வார இதழில் அடுத்தடுத்து 'ஆஷூரா தினத்தின் சிறப்பு'
என்னும் கட்டுரையும் 'உலகில் மிகப் பெரியவர்கள்' என்னும் கட்டுரையும்
எழுதினேன்.<br /><br />1978 ஆம் ஆண்டு உமராபாத்தில் பயின்றுக் கொண்டிருந்தபோது,
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு வெளியிடும் omiet
journal மாத இதழின் தமிழ்ப் பிரிவு எனது 'அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய
முன்மாதிரி' என்னும் எனது நீண்ட கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அதற்குப்
பரிசும் வழங்கியது.<br /><br />உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில்
பயின்றுக் கொண்டிருந்த போது தமிழ் மாணவர் அமைப்பின் சார்பாக முதன் முதலாக
'அந்நஸீம்' (தென்றல்) என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிக்கை வெளியிட்டோம்.
இந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிடும் முழுப் பொறுப்பும் எனக்குத்
தரப்பட்டிருந்தது. நானும் ஒரு பத்திரிக்கையாளன் ஆக வேண்டும் என்னும் எனது
தீராத தாகத்தை இதன் மூலம் தணித்துக் கொண்டேன்..<br /><br />கல்லூரியில்
அவ்வப்போது நடைபெறும் மாபெரும் விழாக்கள் பற்றிய செய்திகளை, அப்போது
சென்னையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த அறமுரசு நாளிதழுக்கு எழுதி
அனுப்புவேன். நான் அனுப்பிவைக்கும் செய்திகளை உடனுக்குடன் அந்த நாளிதழ்
வெளியிடும்<br /><br />இது வரை நான் பத்திரிக்கைளுக்கு அனுப்பிய கட்டுரைகள்
செய்திகள் அனைத்தும் எனது இயற் பெயரிலேயே எழுதி வந்தேன். 1980 ஆம் ஆண்டு
குமுதம் வார இதழுக்கு 'திருப்பந்துருத்தி மஸ்தூக்கா' என்ற புணைப் பெயரில்
ஒரு துணுக்கு அனுப்பினேன். சவூதி அரேபியாவில் தொழுகைக்கு அழைப்பதற்கென்றே
ஒரு தனித் துறை இருப்பதைப் பற்றி நான் எழுதிய அந்தத் துணுக்குச் செய்தியை
குமுதம் வார இதழ் வெளியிட்டிருந்தது. புணைப் பெயரில் எழுதிய முதல் ஆக்கம்
இது தான்<br /><br />1981 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து வெளியிடப்பட்ட 'புரட்சி
மின்னல்' மாத இதழ் எனது எழுத்துப் பசிக்குச் சரியாகத் தீணி போட்டது என்று
சொன்னால் அது மிகையாகாது. மாதந்தோறும் பல் வேறு கட்டுரைகள், கவிதைகள்,
துணுக்குகள், எழுதுவேன். எழுத்துத் துறையில் என்னை ஊக்கப்படுத்திய பெருமை
'புரட்சி மின்னல்' மாத இதழையே சாரும். தமிழகத்தில் ஏகத்துவக் கொள்கை
வேரூன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்த புரட்சி மின்னல் இதழ் தான் பின்னர்
அல் முபீன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஏகத்துவக் கொள்கையை ஓங்கி
ஒலித்தது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.<br /><br />தமிழ் முஸ்லிம்
பத்திரிக்கை உலகில் மிகச் சிறப்பாக இடம் பிடித்த மாதம் இருமுறை இதழான
சமரசம் இதழில் எனது கட்டுரைகள் இடம் பெற்று சிறந்த வரவேற்பைப் பெற்றன.<br /><br />1984
ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல ஆண்டுகள் மறுமலர்ச்சி வார இதழில் அடிக்கடி
கட்டுரைகள் எழுதினேன். ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பற்றிய செய்திகளையும்,
மற்றும் சவூதியில் வெளிவரும் பல்வேறு அரபி ஆங்கில நாளிதழ்களில் வெளிவரும்
செய்திகளையும் தமிழில் மொழி பெயர்த்து அனுப்பிவைப்பேன். 'சவூதியிலிருந்து
எமது சிறப்பு நிருபர்' என்று போட்டு எனது செய்திகளுக்கு அதிக
முக்கியத்துவம் தந்து மறுமலர்ச்சி வார இதழ் என்னை கௌரவித்தது.<br /><br />மாத்யமம்
மலையாள நாளிதழ் பிரபோதனம் மலையாள மாத இதழ் ஆகியவற்றில் வெளிவரும் மிக
முக்கியமான பயனுள்ள கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து மறுமலர்ச்சி வார
இதழுக்கு அனுப்பி வைப்பேன். எனது கட்டுரைகளை எந்த மாற்றமும் செய்யாமல்
வெளியிடும் மறுமலர்ச்சி வார இதழ் அந்தக் காலகட்டத்தில் தமிழக
முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரே முஸ்லிம் வார இதழ்
என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />தமிழக முஸ்லிம் மத்தியில் காணப்படும்
மூடப் பழக்கங்களைக் கண்டித்து 'கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் போகட்டும்'
என்னும் தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிட்டேன். 1986 ஆம் ஆண்டு
திருச்சியில் நடைபெற்ற முதல் 'அந்நஜாத்' மாநாட்டில் இது விநியோகிக்கப்பட்டு
பரவலாக தமிழகம் முழுவதும் சென்றடைந்தது. கூத்தாநல்லூர் இஸ்லாமியப்
பிரச்சார அமைப்பும் மற்றும் சில ஊர்களில் இயங்கும் அமைப்புகளும் இதனை
மறுபிரசுரம் செய்தன.<br /><br />இறையருளால் புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் பெரும்
பாக்கியம் கிடைக்கப் பெற்று புனித ஹஜ் செய்து வந்த இனிய அனுபவங்களை
'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' என்னும் தலைப்பில் 1987 ஆம் ஆண்டு
ஒரு பயணக் கட்டுரை நூலாக எழுதி வெளியிட்டேன். நான் எழுதிய முதல் நூல் இது
தான்.எனது திருமணத்தின் போது இது விநியோகிக்கப்பட்டது. எனது வாழ்க்கையில்
நானும் ஒரு நூலாசிரியர் ஆக வேண்டும் என்னும் எனது கனவு இறையருளால்
நிறைவேறியது. அல்ஹம்து லில்லாஹ்.<br /><br />பிரசித்தி பெற்ற உணர்வு வார
இதழிலும் கட்டுரைகள் புனித ஹஜ் பற்றிய செய்தித் தொகுப்புகள் அடிக்கடி
எழுதியிருக்கிறேன். ஆசிரியர்க் குழு தவிர மற்றவர்கள் எழுதும் எதையும்
பிரசுரிக்காத உணர்வு இதழ் கூட சில இதழ்களில் எமது ஆக்கங்களைப்
பிரசுரித்திருக்கின்றது.<br /><br />மதுரையிலிருந்து வெளிவந்துக்
கொண்டிருக்கும் முஸ்லிம் டைம்ஸ் மாத இதழ் மார்க்கம் சார்ந்த எமது பல்வேறு
கட்டுரைகளுக்கு முக்கித்துவம் தந்து பிரசுரித்துள்ளது.<br /><br />சென்னையிலிருந்து
வெளிவந்துக் கொண்டிருந்த சாந்தி வளாகம் மாத இதழ் தொடர்ந்து மாதந்தோறும்
எமது கட்டுரைகளைப் பிரசுரித்து எமது சொந்த ஊர்க்காரர்கள் பலரும் எமது
ஆக்கங்களைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி மகிமைப் படுத்தியதை மறக்க
முடியாது.<br /><br />ஏற்கனவே எழுதிய 'கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப்
மண்மூடிப் போகட்டும்' என்னும் பிரசுரத்தைப் பார்வையிட்ட பல்வேறு அன்பர்கள்
அதை இன்னும் விரிவு படுத்தி தனியொரு நூலாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக்
கொண்டதற்கிணங்க 2002 ஆம் ஆண்டு அதே தலைப்பில் 80 பக்கங்கள் கொண்ட நூலாக
வெளியிடப் பட்டது. தமிழகத்தின் பல ஊர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய
இந்நூல் இரண்டே மாதங்களில் 2000 பிரதிகள் தீர்ந்து போயின.<br /><br />2003 ஆம்
ஆண்டு இரண்டாம் பதிப்பும், 2004 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பும் வெளிவந்து
சாதனை படைத்தது.மிகக் குறுகிய காலத்தில் 3 பதிப்புகள் கண்ட இந்நூல் இன்ஷா
அல்லாஹ் வெகு விரைவில் 4 ஆம் பதிப்பு வெளிவர உள்ளது. எல்லாப் புகழும்
இறைவன் ஒருவனுக்கே உரித்தாகட்டும்.<br /><br />1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
எமது முதல் நூல் 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' புனித ஹஜ்ஜின்
நேர்முக வர்ணனையாக 2004 ஆம் ஆண்டு சில மாற்றங்களுடனும் புதுப் பொலிவுடனும்
வெளியிடப்பட்டது.இந்நூல் புனித ஹஜ்ஜின் சிறந்த வழிகாட்டியாக பல்வேறு இணைய
தளங்களில் வெளியிடப்பட்டு இணைய தள உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
புகழும் பெருமையும் இறைவனுக்கே சொந்தம்.<br /><br />ஊடகத் துறையில் இப்போது
உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் இணைய தளம் மூலம் எமது ஆக்கங்களை உலகத்
தமிழர்களுக்கு மத்தியில் கொண்டு சேர்த்த பெருமை இதுதான் இஸ்லாம் டாட் கம்
இணைய தளத்தையே சாரும். இஸ்லாமிய தமிழ் இணைய தளங்களிலேயே உலகெங்கும் மிகவும்
பிரபல்யமான இந்த இணைய தளம் எமது ஆக்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு எம்மை
கௌரவிப்பதை இங்கு நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும்.<br /><br />எமது ஆக்கங்கள் இடம் பெறும் பிற இணைய தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளின்முகவரிகள்<br /><br /><a href="http://www.idhuthanislam.com/">www.idhuthanislam.com</a><br /><a href="http://www.tamilmuslim.com/">www.tamilmuslim.com</a><br /><a href="http://www.otrumai.com/">www.otrumai.com</a><br /><a href="http://www.abumuhai.blogspot.com/">www.abumuhai.blogspot.com</a><br /><a href="http://www.amtc-france.blogspot.com/">www.amtc-france.blogspot.com</a></div>
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-14754637025113073152012-02-04T01:11:00.000+03:002012-02-04T01:11:16.365+03:00கடன் கிடைக்கும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
என்னும் தலைப்பைப் பார்த்தவுடன் மிகவும் ஆர்வமாகப்
படிக்க ஆரம்பிப்பவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் அவசியம் இந்தக்
கட்டுரையை படிக்கத்தான் வேண்டும்.<br />-------------------------------------------------<br />உலகில்
பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் பிறருக்குக் கடன்
பட்டிருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாலும் தீராத கடன், பத்து
மாதம் சுமந்து, படாத பாடுபட்டு நம்மைப் பெற்றெடுத்த நம் தாயிடம் நாம் பட்ட
கடன். கண்ணை இமை காப்பது போல் மழலைப் பருவத்தில் காத்து வளர்த்து நம்மை
அவர் ஆளாக்கிய கடன். குடும்பத்தைக் காப்பாற்ற, குழந்தைகளை வளர்க்கப்
பாடுபட்டு உழைத்த தந்தையின் கடன்.இது போக அறிவைப் புகட்டிய ஆசிரியர் கடன்,
உள்ளத்தில் இடம் பெற்ற உடன் பிறந்தோர் கடன், நம்மையே நாடி வந்து நமக்காகத்
தம்மையே அர்ப்பணித்த மனைவியின் கடன், நல்லொழுக்கத்தாலும், நன்னடத்தையாலும்,
நானிலம் போற்ற வாழ்ந்து பெற்றோருக்குப் பெருமை சேர்த்த பிள்ளைகள் கடன்,
ஆபத்து சமயங்களில் உதவி அனைத்து நேரங்களிலும் ஆறுதலாக இருந்த நண்பர்கள்
கடன், இப்படி இந்தக் கடன் பட்டியல் நீண்டுக் கொண்டே போனாலும், இங்கே நாம்
குறிப்பிடுவது ஒருவருக் கொருவர் உதவும் பொருளாதாரக் கொடுக்கல் வாங்கலின்
போது ஏற்படும் கடனைப் பற்றி.</div>
<div style="text-align: justify;">
நாட்டை
வளப்படுத்த அரசாங்கமே கடன் வாங்குகிறது. பெரும் தொழிலதிபர்களான
செல்வந்தர்கள் கூடத் தம் தொழிலை விரிவு படுத்தக் கடன் வாங்குகின்றனர்.
அப்படியிருக்க தனி மனிதன் தம் தேவைகளுக்காகக் கடன் வாங்குவது
தவறில்லை.வட்டியை அடிப்படையாகக் கொண்ட கடனை இஸ்லாம் வன்மையாகக்
கண்டிக்கிறது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் ஒருவருக் கொருவர் கடன்
பெறுவதையும் தருவதையும் இஸ்லாம் தடை செய்ய வில்லை. கடன் கொடுக்கல்
வாங்கலின் போது முறையாக எழுதி வைத்துக் கொள்ளும்படியும், தகுந்த சாட்சிகளை
ஏற்படுத்திக் கொள்ளும்படியும் திருமறை குர்ஆனின் 2:282 வசனம்
எடுத்தியம்புகிறது.</div>
<div style="text-align: justify;">
நபிகள் பெருமானார் (ஸல்)
அவர்கள் ஒரு யூதரிடம் தம் கேடயத்தை அடமானம் வைத்துக் கோதுமையைக் கடனாகப்
பெற்றதாக ஆதாரப்பூர்வமான நபி மொழி நமக்கு அறிவிக்கிறது.</div>
<div style="text-align: justify;">
பரஸ்பரம்
ஒருவருக் கொருவர் கடன் கொடுத்து உதவுவது அன்பை அதிகப் படுத்தும். கடன்
வாங்குவது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் அடுத்தவருக்குத் தேவைப் படும்போது
கொடுத்து உதவவும் மனம் வரவேண்டும். அப்போது தான் நமக்குத் தேவை ஏற்படும்
போது பிறரிடம் கேட்கவும் முடியும்.</div>
<div style="text-align: justify;">
'கடன்
கிடைக்கிறது என்பதற்காக வாங்காதே! 'தேவைப்படுகிறது' என்பதற்காக வாங்கு'
என்பது ஓர் அறிஞரின் கூற்று. ஆம்! ஒருவர் நம்மிடம் 'பணம் தேவைப்பட்டால்
கேளுங்கள்' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உடனேயே அவரிடம் 'சரி
தாருங்கள்' எனக் கேட்கக் கூடாது. உண்மையிலேயே நமக்கு அவசியம் ஏற்பட்டால்
மட்டுமே வாங்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
நமக்குக்
கடன் கொடுத்து உதவ பலர் தயாராக இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் நாம்
நற்பெயர் எடுத்திருக்கிறோம் என்று பொருள்.அந்த நற்பெயரை முடிந்த வரைக்
கட்டிக் காப்பாற்ற வேண்டும். இது வரை வாங்கிய கடன்களை ஒழுங்காக நாம்
திருப்பிச் செலுத்தியிருந்தால் மட்டுமே இப்படி ஒரு நற்பெயர் நமக்குக்
கிடைக்கும். இந்த நற்சான்றிதழுக்கு நாம் தகுதியானவர் தானா என்பதை, கடந்த
காலங்களில் நாம் வாங்கிய கடனை முறையாக உரிய நேரத்தில் ஒழுங்காக நாம்
திருப்பிக் கொடுத்திருக்கிறோமா என்பதை வைத்து நாம் தான் முடிவு செய்துக்
கொள்ள வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
'இவர்
மிகவும் நல்லவர், ஆனால் கடன் வாங்கினால் மட்டும் சீக்கிரம் தரமாட்டார்'
என்று ஒருவரைப் பற்றி சிலர் கூறுவதுண்டு. இந்த விமர்சனம் அர்த்தமற்றது. இது
அவரைப் பற்றிய புகழ்ச்சியா? அல்லது இகழ்ச்சியா? என்பது புரியவில்லை.
வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பித் தராதவர் எப்படி நல்லவராக இருக்க
முடியும்?</div>
<div style="text-align: justify;">
கடன்
வாங்கிய ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருப்பித் தர இயலாமற் போவதுண்டு.
ஆனால் அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட நபர் இப்படி விமர்சிக்கப்
படுவதில்லை. வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பித் தருவதில்லை என்பதை
வாடிக்கையாகக் கொண்டவர் தான் இப்படி விமர்சிக்கப் படுகிறார் என்பதை
கவனத்தில் கொள்ள வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<strong>'ஒருவரை
நல்லவர் என்று சொல்ல வேண்டுமானால், அவர் அண்டை வீட்டுக் காரராக இருக்க
வேண்டும், அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும், அல்லது
அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்க வேண்டும்'</strong> என்னும் ஒரு
பேரறிஞரின் கூற்று மிகவும் சிந்திக்கத் தக்கதாகும். இந்த மூன்று
நிலைகளிலும் ஒருவரின் சுயரூபம் ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம்
வெளிப்பட்டு விடும்.</div>
<div style="text-align: justify;">
எதிர்பாராத
ஒரு செலவு ஏற்படுகிறது. கையில் அறவே பணம் இல்லை. யாரிடமாவது கடன்
வாங்கலாம். ஆனால் கடன் வாங்கி இதைச் செலவை செய்யத்தான் வேண்டுமா? என்று
ஒன்றுக்குப் பலமுறை நன்றாகச் சிந்திக்க வேண்டும். தவிர்க்கவே முடியாது
என்கிற சூழ்நிலை ஏற்படும் போது மட்டுமே கடைசி ஆயுதமாகக் கடனைப்
பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை.</div>
<div style="text-align: justify;">
பொதுவாகவே
சிக்கனமாகச் செலவு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை ஏற்படுவதில்லை.
ஊதாரித்தனமான செலவுகளால் தான் பெரும்பாலானோர் கடனாளி ஆகின்றனர். தேவையற்ற
செலவுகளைக் குறைத்தாலே கடன் இல்லாமல் வாழலாம். அபூர்வமாகத் தான் அவசிய
செலவுகளுக்கு கடன் வாங்க நேரிடும். கடன் வாங்கி பிரியானி சாப்பிடுவதை விட
கடன் வாங்காமல் கஞ்சி குடித்தாலும் அந்தப் பொழுது போய்விடும். கஞ்சி
குடிப்பதற்கும் வழியில்லாத போது கடன் வாங்குவது குற்றமில்லை.</div>
<div style="text-align: justify;">
ஒருவரிடம்
கடன் கேட்கும் நிர்ப்பந்தம் ஏற்படும் போது நமது தேவையையும் நிலையையும்
சொல்லி கடன் கேட்க வேண்டும். திருப்பித் தரும் காலக் கெடுவையும் சொல்ல
வேண்டும். சொன்ன காலக் கெடுவுக்குள் கடனை திருப்பிக் கொடுக்கவும் வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
நமக்குக்
கடன் கொடுத்தவருக்கு எதிர்பாராத அவசரத் தேவை ஏற்பட்டு அவர் சிரமப்
படுகிறார் என்பது நமக்குத் தெரிய வந்தால், எந்த வகையிலாவது ஒரு மாற்று
ஏற்பாடு செய்து, அவர் கேட்பதற்கு முன்பே, அவரிடம் நாம் வாங்கிய கடனை
தவணைக்கு முன்னரே கொடுக்க முயற்சிக்க வேண்டும். நாம் சொன்ன கெடு தான்
இன்னும் இருக்கிறதே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. அவர் நிலைமையை
உணர்ந்து கெடுவுக்கு முன்னரே திருப்பிக் கொடுப்பது, நமக்கு உதவி
செய்தவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்.</div>
<div style="text-align: justify;">
வாங்கிய
கடனை சந்தர்ப்ப சூழ்நிலையால் குறிப்பிட்ட காலத் தவணையில் கொடுக்க இயலாத
நிலை ஏற்பட்டு விடுமானால், கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து நமது இயலாமையை
எடுத்துச் சொல்லி இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கேட்கலாம். எக்காரணம்
கொண்டும் சம்பந்தப் பட்டவரை சந்திப்பதைத் தவிர்த்து ஓடி ஒளியக்கூடாது. அது
கடன் கொடுத்தவருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும். நேரில் சந்தித்து
ஆறுதலான வார்த்தைகள் சொன்னால் அவர் மனம் குளிரும். இன்னும் கொஞ்சம் கால
அவகாசம் கிடைக்கும். இடைப்பட்ட காலத்திலாவது எப்படியும் கடனைத் திருப்பிக்
கொடுக்க முயற்சிக்க வேண்டும்.மனம் குளிரப் பேசி மேலும் மேலும் தவணை
கேட்பதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
சிலர்
கடன் வாங்கும் போது இனிக்க இனிக்கப் பேசுவார்கள். கொடுத்த கடனைத்
திருப்பிக் கேட்டால் கோபம் பொத்துக் கொண்டு வரும். கொடுத்த கடனைக் கேட்டால்
கோபப்படுகிறவர்கள் மனித இனத்தின் நச்சுப் பாம்புகள். <em>'கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை' </em>என்று முன்னோர்கள் சரியாகத் தான் சொன்னார்கள்.</div>
<div style="text-align: justify;">
ஒருவர்
பணம் வைத்திருப்பது நமக்குத் தெரியும், நமக்குத் தெரியும் என்பது
அவருக்குத் தெரியும் என்றால் அப்படிப்பட்ட சூழ் நிலையில் அவரிடம் கடன்
கேட்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் அவரிடம்
கேட்டு அவர் 'இல்லை' என்று சொன்னால் அதற்காக அவர் மீது வருத்தப்படக்
கூடாது. அவருக்கு வேறு ஏதேனும் செலவுகள் இருக்கலாம் அல்லது நமக்கு கடன்
கொடுத்தால் ஒழுங்காகத் திருப்பிக் கிடைக்காது என அவர் கருதியிருக்கலாம்.
அவருடன் ஏற்கனவே நாம் கொடுக்கல் வாங்கல் செய்த போது நாம் நாணயத்துடன்
நடந்துக் கொண்டோமா என்பதை நினைவு படுத்திப் பார்க்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
சிலரிடம்
கொடுத்த கடனைக் கேட்டால், கேட்கும் போதெல்லாம் 'ஆம்! நான் உங்களுக்குத்
தரவேண்டும் என்பது உண்மை தான், இல்லை என்று சொல்ல வில்லை, ஆனால் இப்போது
என்னிடம் பணம் இல்லையே! கிடைக்கட்டும் தருகிறேன்' என்று வாரக் கணக்கில்
மாதக் கணக்கில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். 'தரமுடியாது' என்று
சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. மாதக் கணக்கில்
அவர்களிடம் பணம் வராமலா இருக்கிறது? அவர்கள் செலவு செய்யாமலா
இருக்கிறார்கள்? அவர்களுடைய வழக்கமான ஆடம்பரச் செலவுகள் படு ஜோராய்
நடந்துக் கொண்டு தானிருக்கும். வாங்கிய கடனைக் கொடுக்க வேண்டும் என்ற
எண்ணம் மட்டும் அவர்கள் இதயத்தில் தோன்றுவதே இல்லை.</div>
<div style="text-align: justify;">
கை
நீட்டிக் கடன் வாங்கி விட்டால் திருப்பிக் கொடுக்கும் வரை, கடன்
கொடுத்தவரைக் கண்டால் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போகிறவர்களும் உண்டு.
இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் வாங்குகிறார்களே தவிர விரும்பி
வாங்குகிறவர்கள் அல்ல. இப்படிப் பட்டவர்களை பேச்சிலும் நடத்தையிலும்
அடையாளம் காண முடியும். இப்படிப் பட்டவர்களுக்குக் கடன் கொடுக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
மாதச்
சம்பளம் பெறுவோர் சிலர் சம்பளம் வாங்கிய மறு நாளிலிருந்தே கடன் வாங்க
ஆரம்பித்து விடுவார்கள். கடைக் காரர்களுக்கு வாடிக்கை யாளர்களைப் போல்,
கடன் வாங்குவதில் இவர்கள் வாடிக்கையாளர்கள். சம்பளம் வாங்கும் போது
சரியாகத் திருப்பிக் கொடுத்தாலும், மறுபடியும் மறுபடியும் மாதாமாதம் கடன்
வாங்கிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒரு மாதம் மட்டும் தங்கள் செலவினங்களை
மட்டுப்படுத்திக் கொண்டால் அடுத்த மாதம் முதல் கடன் வாங்காமல் தங்கள்
சம்பளத்திலேயே காலம் கழிக்கலாம். அந்த அளவுக் கெல்லாம் இவர்கள்
சிந்திப்பதில்லை. வாங்கும் சம்பளத்திற்கேற்ப இவர்களிடம் சரியானத்
திட்டமிடுதல் இல்லை. வருமானத்தில் ஒரு பகுதியை அடுத்த மாத சம்பளம் வரை
அன்றாடச் செலவினங்களுக்கு ஒதுக்கிக் கொண்டால், அநாவசியமாக அடுத்தவரிடம்
கடன் கேட்டுக் கையேந்த வேண்டிய அவசியம் ஏற்படாது. எதிர்பாராமல் ஏற்படும்
அவசரத் தேவைகளுக்கு மட்டும் கடன் வாங்கிக் கொள்ளலாம். இப்படித் திட்டமிட்டு
செயல்படுபவர்களுக்கு அப்படிப்பட்ட 'எதிர்பாராதச்' செலவுகள் அபூர்வமாகவே
ஏற்படும்.</div>
<div style="text-align: justify;">
கடைகளில்
கணக்கு வைத்து காலமெல்லாம் கடன் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் பல வகைகளிலும்
நஷ்டப்படுகிறார்கள் என்பதை அவர்கள் பெரும்பாலும் உணருவதில்லை. பணம்
கொடுத்துப் பொருள் வாங்கும் போது பல இடங்களிலும் விசாரித்து, குறைந்த
விலையில் பொருட்களை வாங்க முடியும். கடனுக்கு வாங்கும்போது விலை எல்லாம்
விசாரித்துக் கொண்டிருக்க முடியாது.பணம் கொடுத்து பொருள் வாங்கும்போது
தரமான பொருளைத் தேடிப்பார்த்து வாங்கலாம். கடனுக்கு வாங்கும்போது
கிடைப்பதைத் தான் வாங்க வேண்டும். பணம் கொடுத்து பொருள்
வாங்குபவர்களுக்குத் தான் முன்னுரிமை கிடைக்கும். </div>
<div style="text-align: justify;">
கடனுக்கு
வாங்குபவர்கள் தன்மானத்தைக் கூட சில சமயம் இழக்க வேண்டிவரும்.கடன்
வாங்கிவிட்டு உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்காத போது கடன் கொடுத்தவர்
சில சமயம் கோபத்தில் ஏதாவது பேசி விடக் கூடும். இச்சமயத்தில் கடன்
வாங்கியவர் பொறுமையைத் தான் கடைப் பிடிக்க வேண்டும். உரிய நேரத்தில்
திருப்பிக் கொடுத்திருந்தால் அவர் தவறாகப் பேசியிருக்கமாட்டார் என்பதை உணர
வேண்டும். நமது தேவைக்குக் கடன் கொடுத்து ஆபத்தான நேரத்தில் உதவிய அவரது
நல்ல குணத்தை மட்டுமே நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
நாம்
ஒருவருக்குக் கடன் கொடுத்து, உண்மையிலேயே அவரால் உரிய நேரத்தில்
திருப்பித் தரஇயலாத சூழ்நிலை இருப்பது நமக்குத் தெரியவந்தால், இயன்றவரை
தவணையை நீட்டிப்பதும், அவர் தரும் வரை பொறுமை காப்பதும், மிகவும் நன்மையான
காரியங்களாகும்.</div>
<div style="text-align: justify;">
கடன்
வாங்குவதை இயன்றவரைத் தவிர்க்க வேண்டும். இயலாதபோது மட்டுமே கடன் வாங்க
வேண்டும். இயன்றவரைக் குறைவாக வாங்க வேண்டும். அதையும் தவிர்க்க
முடியுமானால் அதுவே சிறந்தது. </div>
<div style="text-align: justify;">
<strong>கடன் பட்டோனாய்க் காலையிலே </strong></div>
<div style="text-align: justify;">
<strong>கண் விழிப்பதினும் மேலாகும் </strong></div>
<div style="text-align: justify;">
<strong>உடன் பட்டிரவுப் பசியுடனே </strong></div>
<div style="text-align: justify;">
<strong>உறங்கச் செல்லல் பொன் மொழியாம்</strong></div>
<div style="text-align: justify;">
என்று கவிஞர் அப்துல் கபூர் அழகாகச் சொல்வார்.</div>
<div style="text-align: justify;">
கடனாளியாக
ஒருவர் மரணித்தால் அவருடைய சொத்துக்களிலிருந்து முதலில் அவருடைய கடன்களை
அடைத்த பிறகு தான் எஞ்சிய சொத்துக்களை வாரிசுகள் பங்கிட்டுக் கொள்ள
வேண்டும் என்று இறைவனின் திருமறை எடுத்தியம்புகிறது.</div>
<div style="text-align: justify;">
அண்ணல்
நபி (ஸல்) அவர்களிடம் இறந்தவர்களின் உடல் ஜனாஸா தொழவைப்பதற்காகக் கொண்டு
வரப்படும் போது 'இறந்த இவருக்கு கடன்கள் இருக்கின்றனவா? என்றும் அப்படி
கடன்கள் இருந்தால் கடன்களை அடைக்கும் அளவுக்கு சொத்துக்கள் எதுவும் இவர்
விட்டுச் சென்றுள்ளாரா? என்றும் விசாரித்து அப்படி இருந்தால் தான் அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் அந்த ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்துவார்கள், இல்லை
யென்றால் 'உங்கள் சகோதரருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றும்
கூறிவிடுவார்கள்.</div>
<div style="text-align: justify;">
மரணம்
எந்த நேரமும் யாருக்கும் ஏற்படலாம். வாங்கிய கடனைப் பற்றி வாரிசு
தாரர்களிடம் 'வஸிய்யத்' (மரண உபதேசம்) செய்து வைக்க வேண்டும். வாங்கிய
கடன்களையும், கொடுத்த கடன்களையும் எழுதி வைத்துக் கொள்வதை வழக்காகக் கொள்ள
வேண்டும். கடனாளியாக இறப்பதை விட்டும் பாதுகாக்கும்படி அடிக்கடி இறைவனிடம்
பிரார்த்திக் வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
இயன்றவரை
கடன் வாங்காதவர்களாக, இயலாத சூழ்நிiயில் வாங்க நேர்ந்து விட்டால்
முறையாகத் திருப்பிக் கொடுப்பவர்களாக, அடுத்தவர்களுக்கு அவசரத் தேவைகள்
ஏற்படும்போது கொடுத்து உதவுபவர்களாக, கடன் பெற்றவர் திருப்பித்தர இயலாத
சிரமத்தில் இருப்பது தெரியவந்தால் இயன்றவரை பொறுமை காப்பவர்களாக, கடன்
வாங்கியவர் இறந்து போய்விட்டால், அவரின் வாரிசுதாரர்கள் தரமுடியாத
வறுமையில் இருக்கும் போது மனப்பூர்வமாக மன்னிப்பவர்களாக, இறைவன் நம்மை
ஆக்கிவைக்க பிரார்த்திப்போமாக. அதற்கேற்ற வகையில் நம் வாழ்க்கையை அமைத்துக்
கொள்வோமாக.</div>
<br /><b>ஆக்கம்: அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா</b></div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-84461191383857176652012-02-04T01:05:00.000+03:002012-02-04T01:05:20.827+03:00நானிலம் அதிசயித்த ஒரு நல்லடக்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
உலகின் மிகப் பெரிய எண்ணெய் வள நாட்டின் மன்னராக ஏறத்தாழ கால் நூற்றாண்டு
காலம் ஆட்சி புரிந்த மன்னர் பஹத் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் மரணித்து
விட்டார். அரபு நாடுகளிலேயே மிகப் பெரியதும், மக்கா மதீனா ஆகிய இரு
புண்ணியத் தலங்களை உள்ளடக்கியதும், இஸ்லாமிய நாடுகளில் உலக அளவில் மிகவும்
உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நாடுமாகிய சவூதி அரேபியாவின் மன்னர்
மரணித்து விட்டார் என்றால் இந்த நாடே ஸ்தம்பித்திருக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டங்களும், கடை அடைப்புகளும், மௌன அஞ்சலி ஊர்வலங்களும், அஞ்சலி
செலுத்தி ஆளாளுக்கு அடித்த சுவரொட்டிகளும், பதாகைகளுமாக நாடே அல்லோல
கல்லோலப் பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடக்க வில்லை.<br /><br />முழு
சவூதி அரேபியாவும் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தது. வியாபார
நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தன. வழக்கமாக ஒளிபரப்பாகும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து திருமறை குர்ஆன்
ஓதப் பட்டுக் கொண்டிருந்ததைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. தலை நகர்
ரியாதில் மட்டும் அடக்கம் நடைபெறுவதற்குச் சற்று முன் கப்ருஸ்தானை
அடுத்துள்ள பகுதிகளில் மட்டும் போக்கு வரத்து திருப்பி விடப்பட்டிருந்தது.
அதுவும் சில மணி நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டது.<br />தேசிய
அளவில் அல்ல, மாநில அளவில் ஒரு அரசியல் தலைவர் இறந்து விட்டால் கூட அந்த
மாநிலம் முழுவதும் தலை கீழாகப் புரட்டப்படுவதையும் பந்த்களையும்
தர்ணாக்களையும் பார்த்தும் கேட்டும் பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு, சவூதி
மன்னரின் மரணமும், அதனைத் தொடர்ந்து மறு நாள் நடைபெற்ற நல்லடக்கமும்,
ஆச்சரியத்தைத் தந்திருக்கும்.<br /><br />மன்னரின் மரணம் குறித்து அதிகாரப்
பூர்வமாக சவூதி தொலைக் காட்சியில் அறிவிக்கப்பட்ட அன்றைய தினம்
காலையிலிருந்து அடக்கம் செய்யப் படும் மறுநாள் மாலை வரை மன்னரின் ஜனாஸாவோ,
ஜனாஸா இருந்த இடமோ கூட தொலைக் காட்சியில் காண்பிக்கப்படவே இல்லை.<br />மன்னர்
இறந்த மறு நாள் அஸர் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா தொழ வைக்கப்படும் நேரத்தில்
ஆம்புலன்ஸ் வண்டியில் ஜனாஸா கொண்டு வந்து இறக்கப்பட்டபோது தான் மன்னரின்
ஜனாஸா முதன் முதலாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. அதுவும் மன்னர்
வழக்கமாக அணியும் மேலங்கியால் முழுவதும் மூடப்பட்ட நிலையில். இந்தக்
காட்சியை நேரடி ஒளிபரப்பில் கண்ணுற்ற உலக மக்கள் அனைவரும்
அதிசயித்திருப்பர்.<br /><br />அலங்ஙார ஊர்தி இல்லை. மலர் வளையங்கள் இல்லை.
மனங்கமழும் சந்தனப் பெட்டியில்லை. ஆம்புலன்ஸ் வண்டி திறக்கப்பட்டு
அதிலிருந்து மன்னரின் புதல்வர்கள். இறங்கி தங்கள் தந்தையின் ஜனாஸாவைத் தம்
தோள்களில் சுமந்த வண்ணம் பள்ளியின் உள்ளே எடுத்துச் சென்றனர்.<br />மன்னரின்
ஜனாஸாவை வைத்து எடுத்துச் சென்ற சந்தூக் பெட்டிக் கூட வழக்கமாக அனைத்து
ஜளாஸாக்களையும் வைத்து எடுத்துச் செல்லப் பயன்படுத்தப் படும் ஒரு சாதாரண
பழைய சந்தூக் தான். பார்த்தவர்கள் அசந்து போனார்கள்.<br /><br />அஸர் தொழுகை
முடிந்த பிறகு அனைவரும் அப்படியே எழுந்து நிற்க, சவூதியின் தலைமை முப்தி
அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள அப்துல்லாஹ்
அவர்கள் உட்பட பல இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களும் அணிவகுத்து நின்று
தொழுகையை நிறைவேற்றினர்.<br />இஸ்லாமிய முறைப்படி இறந்தவருக்காகச்
செய்யப்படும் இறுதி அஞ்சலி, கண் இமைக்கும் நேரத்தில் கனகச்சிதமாக நடந்து
முடிந்தது. தொழுகை முடிந்ததும் அருகில் உள்ள அல்ஊத் பொது மைய வாடிக்கு
அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.<br /><br />பீரங்கி வண்டி
இல்லை.ராணுவ மரியாதை இல்லை. அதிர்; வேட்டுக்கள் வெடிக்கப்படவில்லை.
ஆகாயத்தை நோக்கி குண்டுகள் முழங்கவில்லை. எவ்வித ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும்
இன்றி அமைதியான முறையில், இஸ்லாமிய வழியில் எல்லோருக்கும் பொதுவான மைய
வாடியில் எளிமையாக அடக்கம் செய்யப் பட்டதை இந்த உலகமே கண்டு வியந்தது.</div>
<br /><b>ஆக்கம:அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா</b><br />
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-41822682885958434912012-02-04T01:00:00.000+03:002012-02-04T01:01:22.284+03:00இங்கிதம் வேண்டும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="justify">
மனித வாழ்க்கையில்
நட்பு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. உற்றார் உறவினரிடமும், உற்ற
நண்பர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும், நட்பை வளர்த்துக் கொள்ள மிக
முக்கியமானது 'இங்கிதம்'.</div>
<div align="justify">
நமது
பேச்சில், செயலில், பழக்க வழக்கங்களில் இங்கிதத்தைக் கடைப் பிடித்தால்,
நம்மீது பிறருக்குள்ள மதிப்பு உயரும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும்.
கிடைத்த நட்பு நிலைத்து நிற்கும். உறவினர்களின் நெருக்கம் அதிகமாகும்.
உறவுகள் பலப்படும். உயர் அதிகாரிகளின் இதயத்தில் இடம் பிடித்துக்
காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ள முடியும். இவை யாவும் உருப்படாத
'ராசிபலன்' வார்த்தைகள் அல்ல. உணர்ந்து அனுபவித்த உண்மைகள்.</div>
<div align="justify">
அலுவலகம்
ஒன்றின் மேலாளர் அறையின் நுழைவாயிலில், 'உத்திரவின்றி உள்ளே வரக் கூடாது'
என எழுதி வைக்கப் பட்டிருந்தது. அந்த அலுவலகத்திற்குப் புதிதாக மாற்றலாகி
வந்த மேலாளர், தம் உதவியாளரை அழைத்து அந்த அறிவிப்புப் பலகையை அகற்றும்
படியும், அதற்குப் பதிலாக 'உத்திரவு பெற்று உள்ளே வரவும்' என எழுதி
வைக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.இரு வாசகங்களின் கருத்தும் ஒன்று தான்.
முதல் வாசகத்தின் எதிர்மறை அணுகுமுறை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
இரண்டாம் வாசகத்தின் நேர்மறை அணுகுமுறை அனைவர் மனதிலும் அற்புதமான ஓர்
ஈர்ப்பை ஏற்படுத்தும். இதுவும் ஓர் இங்கிதமே!.</div>
<div align="justify">
ஒருவரைச்
சந்திக்க நாம் செல்வதாக இருந்தால், அதுவும் ஏதேனும் ஒரு வகையில் அவர்
நம்மை விட உயர்ந்தவராக இருந்தால், நமக்கு வசதிப்பட்ட நேரத்தில நாம் செல்லக்
கூடாது. 'எந்த நேரத்தில் வந்தால் தங்களைச் சந்திக்கலாம்?' என்று அவரிடம்
முன் கூட்டியே கேட்டறிந்து, நம்மால் அவருடைய வழக்கமான அலுவல்களுக்கு
பாதிப்பு ஏற்படாவண்ணமும், அவருக்கு வசதிப்பட்ட நேரத்திலும் சந்திப்பை
வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நம் மீது அவருக்கு ஓர் ஈர்ப்பு
உண்டாகும். நம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதும் சுலபமாகும். </div>
<div align="justify">
பொதுவாக
உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கு நாம் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ
செல்ல நேர்ந்தால், நமது வருகையை முன் கூட்டியே அவர்களுக்குத் தெரிவித்து
விட்டுச் செல்ல வேண்டும். சர்வ சாதாரணமாகத் தொலைபேசி உபயோகம் வந்து விட்ட
இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் எளிது. தொலைபேசி வசதி இல்லாத இடங்களுக்கு
கடிதம் மூலமாகவேனும் தெரிவித்து விட்டுச் செல்லவேண்டும். முன்
அறிவிப்பின்றி திடீரெனப் போய்ச் சேருவது அவர்களுக்கு தர்ம சங்கடத்தை
ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது நேரத்தில் அவர்கள் தம் சொந்த
வேலையாக வெளியில் செல்லத் திட்டமிட்டிருக்கலாம். எதிர் பாரா விதமாக திடீரென
நாம் போய் நிற்கும் போது அவர்களின் அவசியமான அலுவல்கள் திட்டங்கள்
பாதிக்கப் படலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று
உபசரிக்கும் நற்குணம் கொண்டவர்களைக் கூட இது போன்ற திடீர் வருகை சில சமயம்
எரிச்சல் படவைக்கும். </div>
<div align="justify">
தம்
வீட்டை எப்போதும் தூய்மையாகவும், பொருட்களை ஒழுங்கு முறையுடன் அழகு
படுத்தியும் வைத்திருப்பதைச் சிலர் விரும்புவர். ஆனாலும் விளையாட்டுக்
குழந்தைகள் உள்ள வீடுகளில் பொருட்கள் சிதறிக் கிடக்கும். சிறு குழந்தைகள்
உள்ள வீடுகளில் இது தவிர்க்க முடியாதது. இது போன்ற சந்தர்ப்பங்களில் முன்
அறிவிப்பின்றி விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் உள்ளவர்கள்
அவமானப்பட்டதைப் போல் உணருவார்கள்.அப்படி ஒரு தர்ம சங்கடத்தை நாம்
அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. எனவே விருந்தினராக நாம் எந்த வீட்டுக்குச்
சென்றாலும் முதலில் அறிவித்து விட்டுச் செல்வது மிக முக்கியம். இதுவும்
ஓர் இங்கிதம். </div>
<div align="justify">
எந்த
வீட்டுக்குச் சென்றாலும் வீட்டாரின் அனுமதி கிடைத்த பின்னரே உள்ளே செல்ல
வேண்டும். உள்ளே இருப்பவரோ அல்லது வெளியிலிருந்து நம்மை உள்ளே அழைத்துச்
செல்பவரோ 'உள்ளே வாருங்கள்' என்று அழைக்கும் வரை நாமாக அவசரப்பட்டுச்
செல்லக் கூடாது. நமது சொந்த வீட்டைத் தவிர வேறு எவர் வீட்டிலும் அவர்
எவ்வளவு தான் நெருங்கிய உறவினராகவோ நண்பராகவோ இருப்பினும் அவர்கள் வீட்டில
முழு உரிமை எடுத்துக் கொண்டு சமையலறை வரை சர்வ சாதாரணமாகச் செல்வதைத்
தவிர்க்கவேண்டும். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். </div>
<div align="justify">
விருந்தினராக
அடுத்தவர் வீட்டுக்குச் சென்றால் வீட்டுக் காரர்களே சலிப்படையும்
அளவுக்குத் தங்குவது கூடாது. முதல் நாள் உபசரிப்பு தடபுடலாக இருக்கும்.
அடுத்தடுத்த நாட்களில் வித்தியாசத்தை நாமே உணரலாம். எனவே பலமான உபசரிப்பு
முடிந்ததுமே கௌரவமாக விடை பெற்றுக் கொள்ள வேண்டும். 'விருந்தும் மருந்தும்
மூன்று நாள் தான்' என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்? </div>
<div align="justify">
விருந்தினராக
அடுத்தவர் வீடுகளுக்குச் செல்லும் போது அவ்வீட்டில் சிறு குழந்தைகள்
இருப்பின் நம்மால் இயன்ற அன்பளிப்புப் பொருட்களை, குறிப்பாக இனிப்புப்
பண்டங்களை வாங்கிச் செல்வது சிறந்தது. அது ஒன்றிரண்டு மிட்டாய்களாகக் கூட
இருக்கலாம். அவ்வீட்டின் குழந்தைகள் நமது வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஒன்றுமே வாங்கமல் வெறுங்கையுடன் எப்போதும் ஒரு வீட்டிற்குச் செல்லும்
வழக்கமுடைய ஒருவர் ஒரு முறைச் சென்ற போது கதவைத் திறந்த அவ்வீட்டுக்
குழந்தை தனது தாயிடம் ஓடிச் சென்டறு 'ஒன்றுமே வாங்காமல் சும்மா வருமே அந்த
மாமா வந்திருக்கிறது' என்று சப்தம் போட்டுச் சொல்ல, வந்தவர் வெட்கத்தால்
கூனிக் குறுகிப் போயிருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. </div>
<div align="justify">
இரண்டு
நண்பர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் நாமும் சேர்ந்துக்
கொள்ள வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டால், நமது வருகையை அவ்விருவரும் அறிந்துக்
கொள்ளும் விதத்தில் அறிவித்து விட்டு அவர்களுடன் இணைந்துக் கொள்ளவேண்டும்.
நமக்குத் தெரிவிக்க விரும்பாத இரகசியம் எதுவும் அவர்கள் பேசிக்
கொண்டிருக்கலாம். அது வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்த தலைப்பை விட்டு வேறு
தலைப்புக்கு அவர்கள் திடீரென மாறினால், அதைக் கொண்டு நாம் புரிந்துக்
கொள்ளலாம். பிறகு சந்திப்பதாகச் சொல்லி விட்டு நாம் நாகரிகமாக நகர்ந்துக்
கொள்வது தான் இங்கிதம். </div>
<div align="justify">
பலர்
சேர்ந்து இருக்கும் இடத்தில் ஒருவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று
பேசுவதும், மற்றவர்களுக்குப் புரியாத மொழியில் ஒருவருடன் உரையாடுவதும்
முறையற்ற செயல். </div>
<div align="justify">
பலருடன்
சேர்ந்து அமர்ந்திருக்கும் போது நாம் அவசரமாகச் செல்ல நேரிட்டால்,
மற்றவர்களிடம் நமது அவசரத்தை அறிவித்து விட்டுத் தான் அந்த இடத்தை விட்டு
நகர வேண்டும். </div>
<div align="justify">
நம்மால் செய்ய இயலாத ஒரு
காரியத்தில் நமக்கு உதவும் நோக்கத்துடன் ஒருவர் வந்து உதவி செய்தால் முழு
வேலையையும் அவர் தலையில் கட்டி விட்டு நாம் ஒதுங்கி விடக் கூடாது. அவருடன்
கூடவே இருந்து சின்னஞ்சிறு ஒத்தாசைகளை செய்ய வேண்டும். அதுபோல் அவருடைய
காரியங்களில் நம்மால் இயன்ற வரை நமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். </div>
<div align="justify">
பிறருக்கு
நாம் உதவி செய்யும் போது அது பிரதி பலன் எதிர்பாராத உதவியாக இருக்க
வேண்டும். அதே சமயம் பிறர் நமக்காக உதவி செய்தால் நம்மால் இயன்ற பிரதி பலனை
நாம் செலுத்த வேண்டும். </div>
<div align="justify">
நமக்காக
ஒருவர் செலவு செய்தால் அதற்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ பிரிதொரு
சமயத்தில் அவருக்காக நாம் செலவு செய்ய வேண்டும். அதை உடனுக்குடன் செய்தால்
நாகரிகமாக இருக்காது. எனவே அதற்கான தருணத்தை எதிர் பார்த்து காத்திருக்க
வேண்டும்.</div>
<div align="justify">
நண்பர்கள்
உறவினர்கள் யாராக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் மிகவும் நேர்மையாகவும்
நாணயத்துடனும் நடந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நட்பும் உறவும்
நீடிக்கும். மிகச் சாதாரணமாக நாம் நினைக்கும் சின்னஞ்சிறு கொடுக்கல்
வாங்கல்கள் தான் நம்மைப் பற்றிய அபிப்பிராயத்தை பிறர் மனதில் பதிய
வைக்கும். </div>
<div align="justify">
'ஒருவரை
நல்லவர் என்று சொல்வதற்கு நீர் அவருடன் மூன்று விஷங்களில் சம்பந்தப்
பட்டிருக்க வேண்டும். நீர் அவருடயை அண்டை வீட்டுக்காராக இருக்க வேண்டும்,
அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும், அல்லது அவருடன்
கொடுக்கல் வாங்கல் நடத்தியிருக்க வேண்டும்' என்னும் ஒரு பேரறிஞரின் கூற்று
மிகவும் கவனிக்கத் தக்கதாகும். </div>
<div align="justify">
பலர்
சேர்ந்து அமர்ந்திருக்கும் போது பிறர் முகம் சுளிக்கும் படியான
காரியங்களைச் செய்யக் கூடாது. தும்முதல் கொட்டாவி விடுதல் போன்ற இயற்கையான,
நம்மால் கட்டுப் படுத்த முடியாத செயல்கள் ஏற்படும் போது பிறர் அருவருப்பு
அடையாத வகையில் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள வேண்டும். </div>
<div align="justify">
நமது
மிக நெருங்கிய நண்பராக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவருடன் மிகவும்
இயல்பாகப் பேசும் பழக்கம் நமக்கு இருந்தாலும் கூட அவரை உயர்வாக
மதிப்பவர்களிடம் குறிப்பாக அவரது மனைவி, குழந்தைகள், மற்றும் அவருக்குக்
கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரிடம் அவரைப் பற்றி விசாரிக்கும் போது
கண்ணியமான வார்த்தைகளைப் பயன் படுத்த வேண்டும். </div>
<div align="justify">
சிறு
குழந்தைகள் செய்யும் சின்னஞ்சிறு செயல்களைக் கூட நாம் அங்கீகரித்து
அவர்களைப் பாராட்ட வேண்டும். குழந்தை தவழ்வதற்கும், எழுந்து நிற்பதற்கும்,
நடப்பதற்கும் தன் முதல் முயற்சியைத் தொடங்கும் போது, அவர்களுக்குப்
புரியும் விதத்தில் அவர்களுடைய மொழியாகிய புன்னகை மொழியில் நம் பாராட்டைத்
தெரிவிக்க வேண்டும். </div>
<div align="justify">
படிக்கும்
குழந்தைகள் அனைவரும் அறிவாற்றலிலும், நினைவாற்றலிலும் சமமாக இருப்பதில்லை.
ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளில் ஆற்றலில் ஒருவருக் கொருவர்
வித்தியாசப் படுவதுண்டு. நன்றாகப் படிக்கும் குழந்தைகளைப் பாராட்டும் அதே
சமயம், குறைவான மதிப் பெரும் குழந்தையை மற்ற குழந்தைகளுக்கு முன்னால்
வைத்து மட்டம் தட்டக் கூடாது. தனிப்பட்ட முறையில் அக் குழந்தையின்
படிப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.இந்த ஆலோசனைகள் பெற்றோர் அந்தஸ்தில்
இருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும்
பொருந்தும். </div>
<div align="justify">
ஒரு
குடும்பத்தில் பல குழந்தைகள் இருக்கும் போது ஒரு குழந்தைக்கு மட்டும்
தனியாக எதுவும் வாங்கிக் கொடுப்பதோ, அதிக சலுகைகள் கொடுப்பதோ கூடாது. அது
மற்ற குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.</div>
<div align="justify">
தொலை
தூரத்தில் இருப்பவர்கள் தம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசி
மூலம் தொடர்பு கொள்ளும் போது, தவிர்க்கவே முடியாத அவசியம் ஏற்பட்டாலன்றி,
அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு நேரங்களில் தொடர்பு கொள்ளக்
கூடாது. சொந்தக் குடும்பத்தினருக்காயினும் சரியே. அகால நேரங்களில்
ஒலிக்கும் தொலைபேசி ஒலி பலருடைய உறக்கத்தை கெடுப்பது மட்டுமல்ல, சிலருக்கு
திடுக்கத்தையும் திகிலையும் ஏற்படுத்தும். </div>
<div align="justify">
தொலைபேசி
மூலம் தொடர்பு கொள்ளும் போது முதலில் நாம் யாருடன் தொடர்புக் கொள்ள
வேண்டுமோ அவர்தான் தொடர்பில் வந்திருக்கிறாரா? என்பதை நன்றாக
உறுதிப்படுத்திக் கொண்டு தான் பேசத் தொடங்க வேண்டும். உரையாடலைத் தொடங்கும்
போது அழகிய முகமன் கூறி, நலம் விசாரித்த பின்னர் தான் சொல்ல வந்த
செய்திகளையோ கேட்க வந்த விபரங்களையோ தொடங்க வேண்டும். </div>
<div align="justify">
தொலைபேசியில்
முடிந்தவரை சுருக்கமாகப் பேச வேண்டும். விரிவாகப் பேச வேண்டிய அவசியம்
ஏற்படும் போது மறுமுனையில் இருப்பவரிடம் முன் கூட்டியே தெரிவித்து அவர்
அதற்கேற்ற சூழ்நிலையில் இருக்கின்றாரா என்பதை கேட்டறிந்துக் கொண்டு நமது
உரையாடலைத் தொடரலாம். பேசிக் கொண்டிருக்கும் போது மறுமுனையில் இருப்பவர்
நமது பேச்சில் கவனம் செலுத்தாமல் 'சரி வேறு எதுவும் செய்தி உண்டா?' என்று
கேட்க ஆரம்பித்து விட்டாலே, அவர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார் என்பதைப்
புரிந்துக் கொண்டு நமது பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும். </div>
<div align="justify">
பேசிக்
கொண்டிருக்கும் போது தொலைத் தொடர்பு கோளாறு காரணமாகத் தொடர்பு திடீரெனத்
துண்டிக்கப் பட்டுவிட்டால் மறுபடியும் தொடர்புக் கொண்டு வருத்தம்
தெரிவித்தபின் உரையாடலைத் தொடரவேண்டும். </div>
<div align="justify">
மரணம்
போன்ற துக்கம் ஏற்பட்ட இடங்களுக்குச் சென்றால், அங்கு அமர்ந்துக் கொண்டு
ஊர்க் கதைகள் பேசுவதும், சிரித்துப் பேசி குதூகலிப்பதும் கூடாது. மரண
துக்கத்தில் இருப்பவர்களின் மன வேதனையைப் புரிந்து நடந்துக் கொள்ள
வேண்டும்.</div>
<div align="justify">
புதிதாக
அறிமுகம் ஆகும் நபர்களிடம் நம்மைப் பற்றியும் நமது குடும்பத்தைப் பற்றியும்
சுய புராணம் பாடிக் கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற பல
பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். </div>
<div align="justify">
பலருடன்
சேர்ந்திருக்கும் போது நாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
மற்றவர்கள் பேசவும் வாய்ப்பளிக்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதையும் செவி
தாழ்த்திக் கேட்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கும் நம் பேச்சைக்
கேட்பதற்கு ஆர்வம் பிறக்கும். </div>
<div align="justify">
பிரபலப்
பேச்சாளர் வரும் வரை சிறிது நேரம் பொது மேடைகளில் பேச வாய்ப்பு
கிடைத்தால், சுருக்கமாகப் பேச வேண்டும். எவ்வளவு தான் நாம் அருமையாகப்
பேசினாலும் பிரபலப் பேச்சாளரின் உரைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நமது
பேச்சு 'அறுவையாக'த் தான் தெரியும். இன்னும் கொஞ்ச நேரம் இவர் பேசமாட்டாரா?
என மற்றவர்கள் எதிர்பார்க்கும் போது நம் உரையை முடித்துக் கொள்ள வேண்டும்.
</div>
<div align="justify">
<span style="font-size: 100%;"><b>இங்கிதத்தைப்
பற்றி இன்னும் நிறைய எழுதலாம். படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும்
என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது. இதுவும் ஓர் இங்கிதமே!</b></span><br />
<br />
<span style="font-size: 100%;"><b>ஆக்கம்: மஸ்தூக்கா </b></span></div>
<div align="justify">
<span style="font-size: 100%;"><b>------------------------------------</b></span></div>
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-75576630372631766582011-01-27T23:07:00.001+03:002012-02-06T23:52:37.824+03:00JAMIA DARUSSALAM OOMARABAD<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<object height="300" width="400"> <param name="flashvars" value="offsite=true&lang=en-us&page_show_url=%2Fphotos%2F34627097%40N06%2Fsets%2F72157625793962045%2Fshow%2F&page_show_back_url=%2Fphotos%2F34627097%40N06%2Fsets%2F72157625793962045%2F&set_id=72157625793962045&jump_to=">
</param>
<param name="movie" value="http://www.flickr.com/apps/slideshow/show.swf?v=71649">
</param>
<param name="allowFullScreen" value="true">
</param>
<embed type="application/x-shockwave-flash" src="http://www.flickr.com/apps/slideshow/show.swf?v=71649" allowFullScreen="true" flashvars="offsite=true&lang=en-us&page_show_url=%2Fphotos%2F34627097%40N06%2Fsets%2F72157625793962045%2Fshow%2F&page_show_back_url=%2Fphotos%2F34627097%40N06%2Fsets%2F72157625793962045%2F&set_id=72157625793962045&jump_to=" width="400" height="300"></embed></object></div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-19064092978777787722011-01-27T01:07:00.000+03:002012-02-04T00:42:14.521+03:00அந்த"மான்" வந்தது ! ஆச்சரியம் தந்தது !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/_0YOf1e0CFrc/TUCat9mgUXI/AAAAAAAAAkA/iHT5lG4W2RA/s1600/HUSSAIN+OMARI.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/_0YOf1e0CFrc/TUCat9mgUXI/AAAAAAAAAkA/iHT5lG4W2RA/s1600/HUSSAIN+OMARI.jpg" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span style="font-size: large;">இன்று (26-01-2011) குடும்பத்தினருடன் இணையத்தில் உரையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாரா விதமாக நண்பர் ஹ+ஸைன் அவர்களிடமிருந்து எமது வீட்டு நம்பருக்கு ஒரு போன் கால் வருகிறது. தஞ்சாவூரிலிருந்து பேசுவதாக சொன்னபோது எனக்கு ஆச்சரியம். அலைகடலுக்கு அப்பாலிருக்கும் அந்தமான் தீவு அடிபெயர்ந்து எப்போது தஞ்சைத்தரணிக்கு வந்தது? எனக்கு ஆச்சரியம் தாங்க வில்லை. அப்படியே அவரது அலைபேசியில் தொடர்பு கொண்ட போது தான் புரிந்தது. அந்தமானிலிருந்து தமிழகத்துக்கு சொந்த வேலையாக வந்தவா எம்மைக் காண்பதற்காகவே தஞ்சைக்கு வந்திருக்கிறார். </span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span style="font-size: large;">உடனடியாக எமது வீட்டுக்கு வரவேண்டும் என அழைத்தேன் அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிட்டார். வீட்டில் உள்ள கணிணி மூலம் இணையத்தில் தொடர்பு கொண்டு நேரடியாகக் கண்டு அளவளாவினோம். அருகருகில் அமர்ந்து ஆசை தீரப்பேசினோம். </span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span style="font-size: large;">உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாகப் பயின்றோம் அந்த இன்ப நாட்களை இனிமையுடன் அசைபோட்டோம். 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று இணையத்தில் சந்திக்கிறோம். </span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span style="font-size: large;"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">மறக்க முடியுமா உமராபாத்தின் அந்த பசுமை நிறைந்த நினைவுகளை? உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் நண்பர்கள் கிடைத்தார்கள். அறிமுகத்துக்காக சிலரை ஊர்ப்பெயரால் அழைப்பதுண்டு. அது போல் தான் ஹ+ஸைன் என்ற இயறபெயரைவிட "அந்தமான்" என்ற பெயரே பிரசித்தமானது. இது அந்தமானிலிருந்து வந்த "மான்" . அதானால் தான் <b>அந்த"மான்" வந்தது ஆச்சரியம் தந்தது </b>என்று தலைப்பு கொடுத்தேன்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span style="font-size: large;"><br />
</span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span style="font-size: large;">மறக்க முடியாத அந்த உமராபாத் நினைவுகளை இன்று இணையத்தில் அலசியபோது சமீக்த்தில் உமராபாத் சென்று தமது நினைவுகளை அசை போட்ட ஒரு முன்னாள் மாணவர் ஜாமிஆவின் சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் உலாவ விட்டிருந்தார். கண்ணைக்கவரும் ஜாமிஆவின் அந்த வண்ணப்படங்களை ஸ்லைட் ஷோவாக உலவ விட்டிருக்கிறேன்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span style="font-size: large;">உமராபாத்தின் நினைவுகளை எழுத ஆரமபித்தால் எழுதிக் கொண்டே இருக்கலாம். நேரம் கிடைக்கும் போது தனியாக ஒரு கட்டுரை எழுதுகிறேன். இன்ஷா அல்லாஹ் </span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span style="font-size: large;"><br />
</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: large;"> (<span style="font-size: small;">இணையத்தில் உரையாடியபோது</span></span><span style="font-size: small;"> வெப்கேமராவில் கிளிக் செய்த படம்)</span></div>
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-43706208638808545522010-02-17T00:53:00.000+03:002012-02-04T00:37:15.550+03:00கதையல்ல நிஜம்-2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம், ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே மனதில் நிற்கின்றனர். எத்தனையோ நூல்களைப் படிக்கிறோம். ஆனால் அவற்றில் சில நூல்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. அது போல் நம் வாழ்வில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கின்றன, ஆனால் அவற்றில் சில நிகழ்ச்சிகள் வாழ்வில் மறக்க முடியா நிகழ்ச்சிகளாக மனதில் பதிந்து போகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவ்விதம் ஆழ் மனதில் பதிந்து போன மறக்க முடியா நிகழ்ச்சிகளை மறுபடியும் அசை போட்டுப் பார்த்தால் என்ன? என்று எண்ணியதன் விளைவு தான் இக்கட்டுரை. சந்தேகமில்லாமல் இது முழுக்க முழுக்க சுய புராணம் தான். ஆனாலும் சுவையான சுய புராணம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மறக்க முடியா நிகழ்ச்சி-2</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எமது வெளியீடான 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' நூலைப் படித்துப் பார்த்த எமது நண்பர் கொள்ளுமேடு முஹம்மது தாஹா அவர்கள் இந்நூலை இவ்வருடம் புனித ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்ள விருக்கும் தமது தாயார் உறவினர்களிடம் வாழ்த்தி வழியனுப்பி வைக்க வருமாறு அழைக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி வழங்க விரும்புவதாக தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நூலின் பிரதிகளை அவர் வீட்டில் கொண்டு போய் சேர்க்க நானே நேரில் சென்ற போது நண்பர் முஹம்மது தாஹா அவர்களின் மூத்த சகோதரர் முஹம்மது ஜக்கரியா அவர்கள் எம்மை வரவேற்று அன்புடன் உபசரித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வழக்கமான சுக விசாரித்தலுக்குப்பின் எமது நூலைப் பற்றிய பேச்சு எழுந்தது. 'தாங்கள் தான் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்காவா? அப்படியானால் தங்கள் சொந்த ஊர்?' என அவர் கேட்டு முடிக்கு முன் நான் 'திருப்பந்துருத்தி' என்று சொல்ல, தாங்கள் தான் 'திருப்பந்துருத்தி மஸ்தூக்காவா?' என்று கேட்டு ஆச்சர்யத்தில் அவர் கண்கள் அகல விரிந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சற்று பொறுங்கள் என் என்னிடம் கூறிவிட்டு அவர் தன் தாயாரை அழைத்து, 'அம்மா! நீங்கள் பலரிடமும் அடிக்கடி படித்துக் காட்டுவீர்களே! அந்தக் கடிதத்தை எடுத்து வாருங்கள்' என்று கேட்டுக் கொள்ள உடனே அவரின் தாயார் ஒரு கடித உறையைக் கொண்டு வந்துக் கொடுத்தார். அந்தக் கடித உறையை என்னிடம் கொடுத்த சகோதரர் ஜக்கரியா அவர்கள் 'கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பாருங்கள்' என என்னிடம் கேட்டுக் கொண்டதற் கிணங்க நான் அக்கடிதத்தைப் பிரத்துப் படித்துப் பார்த்தேன். இப்போது ஆச்சர்யத்தில் அகல விரிந்தது அவர் கண்களல்ல என் கண்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடிதத்தில் இடப்பட்டிருந்த தேதி 1987 ஆம் வருடம் எழுதிய கடிதம் அது என்று அடையாளம் காட்டியது. சகோதரர் ஜக்கரியா அவர்கள் சவூதியில் இருந்த போது புனித ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வந்து தனது பயண அனுபவங்களை ஒரு நீண்ட கட்டுரையாக தன் தாயாருக்கு அப்போது எழுதிய கடிதம் அது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புனித ஹஜ்ஜில் தாம் கண்ட காட்சிகளை வர்ணனையாக எழுதி இந்தக் கட்டுரைக்கான கருத்து உதவி 'திருப்பந்துருத்தி அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா' என்று நன்றியுடன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடிதத்தின் இறுதி வரிகளைப் படித்தபோது எனக்கு மெய் சிலிர்த்தது. இந்த சிலிர்ப்பு அல்லாஹ்வின் மீது ஆணையாக கர்வத்தில் அல்ல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் ஒரு அறிஞனுமல்ல, புகழ் பெற்ற எழுத்தாளனுமல்ல, இஸ்லாமிய எழுத்துலகில் நான் இன்னும் அரிச்சுவடி கூடப் படிக்காதவன். அப்படியிருக்க பெருமையும் கர்வமும் எங்கிருந்து வரும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருபது வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஹஜ் பயணக் கட்டுரை நூல், எங்கோ ஒரு மூலையில் எனக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு முஸ்லிம் சகோதரருக்கு, அதுவும் புனித ஹஜ்ஜை நிறை வேற்றும் வழிகாட்டியாகப் பயன் பட்டிருக்கிறதே! அல் ஹம்து லில்லாஹ். அந்த ஹஜ்ஜில் எனக்காகவும் அவர் துஆச் செய்திருப்பார் அல்லவா? அது போதும் எனக்கு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மிக அருமையாக ஹஜ்ஜின் அனுபவங்களை தன் தாய்க்கு கடிதமாக எழுதிய அந்தச் சதோதரர், தான் பெருமைப் பட்டுக் கொள்ளாமல் மிகவும் நன்றியுடன் எனது பெயரை அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாரே அவர் உயர்ந்தவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனது அன்பு மகன் எழுதிய அருமைக் கடிதத்தை இருபது வருடங்களாகப் பாதுகாத்து எல்லோரிடமும் படித்துக் காட்டிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறாரே அந்தத் தாய் உயர்ந்தவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனது தாயை வழியனுப்பி வைக்க வருகை தரும் அனைத்து உறவினர்களுக்கும் புனித ஹஜ்ஜின் மகத்துவத்தைப் புரியவைக்கும் புத்தகத்தை வழங்கி வித்தியாசமான முறையில் வழியனுப்பிவைக்கும் அந்தப் புனிதத் தாயின் நன்மக்கள் உயர்ந்தவர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அனு தினமும் தவறாது தொழுது அழுது மன்றாடிய முறையீட்டை ஏற்று புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் பெரும் பேற்றை அந்த நன்மக்களின் தாய்க்கு வழங்கிய அல்லாஹ் அனைவரையும் விட மிக மிக உயர்ந்தவன்.</div>
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-39063395559768987.post-813310582564237792009-12-27T00:11:00.000+03:002012-02-06T23:51:08.761+03:00கதையல்ல நிஜம்-1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
பெருநாள் தொழுகை முடிந்து மகிழ்ச்சியைக் கொண்டாட மக்கள் பள்ளிவாசலிலிருந்து அவரவர் வீடுகளுக்கு அவசரமாகப் புறப்பட்டுவிட்டனா. தள்ளாத வயதில் அந்த முதியவர் நிதானமாக கடைசியாகப் பள்ளியிலிருந்து வெளியே வருகிறார்.பள்ளிக்கு வெளியே ஒரு இளைஞன் அந்த முதியவருக்குப் பெருநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக் காத்து நிற்கிறான்.. வெளியில் வந்த முதியவருக்கு கை கொடுத்து பெருநாள் வாழ்த்துக் கூறுகிறான் பதிலுக்கப் பெரியவரும் அந்த இளைஞனுக்குப் பெருநாள் வாழ்த்துத தெரிவிக்கிறார்.. இளைஞன் புறப்படத் தயாராகும் போது அந்தப் பெரியவர் இளைஞனிடம் 'தம்பி! சென்ற வாரம் நான் உங்களிடம் ஒரு விஷயம் குறித்து கூறியிருந்தேன் அல்லவா அது குறித்து என்ன முடிவு செய்தீர்கள்? ஒரு நல்ல பெயராகத் தேர்வு செய்து விட்டீர்களா? எனக் கேட்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு சின்ன பிளாஷ் பேக்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த ஊரில் அனைவராலும் மிகவும் மதிக்கப்படும் அந்த முதியவர் பல் வருடங்களுக்கு முன்னர் புனித ஹஜ்ஜை நிறைவேற்றியவா என்பதால் ஊர் மக்கள் அனைவராலும் 'ஹாஜியார்' என்றே அழைக்கப்பட்டார். மிகவும் கண்ணியமானவர். தொழுகை இபாதத்துகளில் மிகவும் பேணுதலானவர்.. அனைவரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்தானவர். ஹாஜியார் என்னும் அடைமொழியுடன் அழைக்கப்பட்ட அம்முதியவரின் இயற் பெயர் குலாம் மைதீன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்ற வாரம் அந்த இளைஞன் அம்முதியவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தான். 'தங்களிடம் ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். தாங்கள் தவறாக நினைக்க் மாட்டீர்களே! என்று அந்த இளைஞன் பீடிகையுடன் தம் பேச்சைத் துவங்கினான்.. அதற்கு அம்முதியவா 'தம்பி தாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். யார் சொன்னாலும் நல்லதை நான் ஏற்றுக் கொள்வேன் எனது தவறுகளைத் திருத்திக் கொள்வேன்' .என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தங்கள் பெயர் தவறாக உள்ளது. குலாம் மைதீன் என்றால் மைதீன் எனப்பேச்சு வழக்கில் சொல்லப்படும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி)அவர்களின் (சேவகன்) அடிமை என்று பொருளாகிறது. நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள் அல்லவா? எனக்கேட்டான்.. அதற்கு அம்முதியவர் கோபப்படாமல் மிகவும் நிதானமாக 'தமபி! தாங்கள் சொல்வது நியாயம் தான். இப் பெயர் எனது பெற்றோர் எனக்கு சூட்டிய பெயர். இதில் எனது தவறு எதுவுமில்லையே! எனது தவறு என்றால் நான் திருத்திக் கொள்வேன். அறியாமையால் எனது பெற்றோர் இப்படிப் பெயர் வைத்து விட்டனர். அல்லாஹ் அவர்களின் குற்றத்தை மன்னிக்க வேண்டும். நான் எனது பெயரை இனி மாற்றிக் கொள்கிறேன். தாங்களே ஒரு நல்ல பெயராகத் தேர்வு செய்து எனக்குச் சொல்லுங்கள்" எனக் கூறவே அந்த உரையாடல் அத்துடன் நிறைவு பெற்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்று தான் அந்த இளைஞன் அம்முதியவரைச் சந்திக்கிறான். அது பற்றித்தான் அம்முதியவா அவ்விளைஞனிடம் வினவுகிறார். .தம்பி! சென்ற வாரம் நான் உங்களிடம் ஒரு விஷயம் குறித்து கூறியிருந்தேன் அல்லவா அது குறித்து என்ன முடிவு செய்தீர்கள்? ஒரு நல்ல பெயராகத் தேர்வு செய்து விட்டீர்களா? எனக் கேட்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த இளைஞன். 'தாங்கள் என்னை விட அதிகம் அறிநதவர் இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்று சொல்லவே அம்முதியவர் அப்படியானால் 'தங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தங்கள் பெயரை நான் வைத்துக் கொள்ள தாங்கள் அனுமதி தருவீர்களா? எனக்கேட்க 'தங்கள் விருப்பப்படி வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு எநத ஆட்சேபனையும் இல்லை என்று சொல்ல, உடனே அந்த முதியவர் 'சரி அப்படியானால் இன்று முதல் இந்த நேரம் முதல் எனது பெயர் குலாம் மைதீன் அல்ல இனி நான் அப்துஸ்ஸலாம்.என அழைக்கப்படுவேன். இது எனக்கும் தங்களுக்கும் தெரியும். இதற்கு அல்லாஹ்வே சாட்சி என்றார்கள். ஒரு அருமையான பெயர் சூட்டு விழா அழகாக நடந்தேறியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதியவரிடம் விடைபெற்ற அந்த இளைஞன் பள்ளிவாசலிலிருந்து மிக அருகிலிருக்கும் தன் வீட்டுக்கு சென்றடைந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். பள்ளிவாசலை நோக்கி சிலர் வேகமாக ஓடுவது தெரிந்து 'என்ன?" என்று விசாரித்தபோது 'பள்ளிவாசல் திண்ணையில் ஹாஜியார் அவாகள் இறந்து விட்டார்கள்'' என்னும் செய்தி அந்த இளைஞனை அதிர்ச்சியுறச் செய்தது</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த இளைஞன் ஹாஜியாரைச் சந்தித்து உரையாடியதற்கும் ஹாஜியாரின் மரணச் செய்தியை இளைஞன் செவியுற்றதற்கும் இடைப்பட்ட நேரம் மிகவும் குறைவு. ஹாஜியார் கடைசியாகப் பேசியது அந்த இளைஞனிடம் தான். கடைசியாகப் பேசிய வார்த்தைகள் 'இனி இந்த நேரம் முதல் நான் அப்துஸ்ஸலாம் என அழைக்கப்படுவேன். இதற்கு அல்லாஹ்வே சாட்சி" இந்த இனிய வார்ததைகளுடன் ஒரு இறைநேசரின் ஆன்மா பிரிந்து விட்டது.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உறவுகளையும் ஊர் மக்களையும் பொறுத்தவரை குலாம் மைதீன் ஹாஜியார் ஆனால் அந்த இளைஞனையும் அல்லாஹ்வையும் பொறுத்தவரை அப்துஸ்ஸலாம் என்னும் ஒரு நல்லடியார் இறந்து விட்டார். அனைத்து வகையிலும் நமக்குத் தெரிந்தவரை ஒரு நல்ல இறைநேசராக வாழ்ந்த அம்முதியவரிடம் இருந்த ஒரு குறையைக்கூட அல்லாஹ் இறுதி நேரத்தில் நிவாத்தி செய்து விட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது கதையல்ல நிஜம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இச்சம்பவம் நடந்து ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. ஆனால் அந்த மறக்கமுடியாத நினைவு மட்டும் அந்த இளைஞனின் இதயத்தில் நீங்கா இடம் பெற்று விட்டது அந்த நல்ல இறைநேசரை இன்றளவும் அந்த இளைஞன் நினைவு கூர்கிறான். அந்த அற்புத நினைவை இன்ற இந்த வலைப்பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆம் அந்த இளைஞன் <b>அப்துஸ்ஸலாம் </b>என்னும் நான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மரணிப்பதற்குச் சற்றுமுன் வரை குலாம் மைதீனாக இருந்து இறுதி நேரத்தில் தம் பெரை மாற்றிக் கொண்ட அப்துஸ்ஸலாம் என்னும் அந்த முதியவர், 'சாந்திவளாகம்' மாத இதழின் ஆசிரியர் கவிஞர் வஹாப்ஜி என்கிற அப்துல் வஹாப் அவர்களின் தந்தையும், பெரம்பலூர் சர்க்கார் சில்க ஹவுஸ் உரிமையாளர் ஹாமீம் அவர்களின் பாட்டனாரும் ஆவார்.</div>
<div style="text-align: justify;">
இது கதையல்ல நிஜம் </div>
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-86933295174535827482009-11-30T01:42:00.001+03:002012-02-06T23:49:00.110+03:00மாபெரும் மேதை மறைந்து விட்டார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<link href="file:///C:%5CDOCUME%7E1%5CUser%5CLOCALS%7E1%5CTemp%5Cmsohtmlclip1%5C01%5Cclip_filelist.xml" rel="File-List"></link><link href="file:///C:%5CDOCUME%7E1%5CUser%5CLOCALS%7E1%5CTemp%5Cmsohtmlclip1%5C01%5Cclip_themedata.thmx" rel="themeData"></link><link href="file:///C:%5CDOCUME%7E1%5CUser%5CLOCALS%7E1%5CTemp%5Cmsohtmlclip1%5C01%5Cclip_colorschememapping.xml" rel="colorSchemeMapping"></link> <m:smallfrac m:val="off"> <m:dispdef> <m:lmargin m:val="0"> <m:rmargin m:val="0"> <m:defjc m:val="centerGroup"> <m:wrapindent m:val="1440"> <m:intlim m:val="subSup"> <m:narylim m:val="undOvr"> </m:narylim></m:intlim> </m:wrapindent><style>
<!--
/* Font Definitions */
@font-face
{font-family:"Cambria Math";
panose-1:2 4 5 3 5 4 6 3 2 4;
mso-font-charset:1;
mso-generic-font-family:roman;
mso-font-format:other;
mso-font-pitch:variable;
mso-font-signature:0 0 0 0 0 0;}
@font-face
{font-family:Calibri;
panose-1:2 15 5 2 2 2 4 3 2 4;
mso-font-charset:0;
mso-generic-font-family:swiss;
mso-font-pitch:variable;
mso-font-signature:-1610611985 1073750139 0 0 159 0;}
@font-face
{font-family:aAvarangal;
panose-1:2 11 3 3 2 0 0 2 0 4;
mso-font-charset:0;
mso-generic-font-family:swiss;
mso-font-pitch:variable;
mso-font-signature:-2146434973 0 0 0 1 0;}
/* Style Definitions */
p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal
{mso-style-unhide:no;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
margin-top:0cm;
margin-right:0cm;
margin-bottom:10.0pt;
margin-left:0cm;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:Calibri;
mso-fareast-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Arial;
mso-bidi-theme-font:minor-bidi;
mso-bidi-language:TA;}
.MsoChpDefault
{mso-style-type:export-only;
mso-default-props:yes;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:Calibri;
mso-fareast-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Arial;
mso-bidi-theme-font:minor-bidi;
mso-bidi-language:TA;}
.MsoPapDefault
{mso-style-type:export-only;
margin-bottom:10.0pt;
line-height:115%;}
@page Section1
{size:595.3pt 841.9pt;
margin:72.0pt 72.0pt 72.0pt 72.0pt;
mso-header-margin:36.0pt;
mso-footer-margin:36.0pt;
mso-paper-source:0;}
div.Section1
{page:Section1;}
-->
</style></m:defjc></m:rmargin></m:lmargin></m:dispdef></m:smallfrac><span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">…<o:p></o:p></span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">ஓர் அறிவுச் சுரங்கத்தின் வாயிற் கதவு அடைபட்டுப்போனது</span></b><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"><b>. <span lang="TA">ஒரு நடமாடும் பல்கலைக் கழகம் தமது</span> <span lang="TA">நெடுங்கதவை மூடிக் கொண்டது</span>. <span lang="TA">மேலத்திருப்பூந்துருத்தி ஈன்ற மேன்மை மிகு அறிஞர் விடை பெற்றுக் கொண்டார்</span>. <span lang="TA">ஆம் மேதகு முஹம்மது இப்ராஹீம் பி காம் அவர்கள் இறையடி சேர்ந்து விட்டார்</span>.</b><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">பட்டப் படிப்பு படித்தவர் பலகோடி</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">பட்டமே பெயராக அமைந்தது நமக்குத் தெரிந்து இவர் ஒருவருக்குத் தான்</span>. <span lang="TA">பி காம் பயின்றவர்கள் உலகில் அநேகம் பேர் இருக்கலாம்</span>.<span lang="TA">ஆனால் பி காம் என்றால் எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தில் படிப்பறிவில்லாதவர் கூட பட்டென்று இவரைத்தான்</span> <span lang="TA">அடையாளம் காட்டுவர்</span>. <span lang="TA">இவர் பயின்ற கல்லூரி இவருக்கு பிகாம் என்னும் பட்டத்தைத் தந்தது</span>. <span lang="TA">எங்கள் ஊர்</span> <span lang="TA">இவர் பெற்ற பட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து அந்தப் பட்டத்தையே இவருக்கு பெயராகச் சூட்டியது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">மேலத்திருப்பூந்துருத்தி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகனை வகித்து ஊருக்கும் சமுதாயத்திற்கும் அளப்பெரும் தொண்டாற்றியவர்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">பதவியில் இருந்த போதும் சரி அனைத்து பதவிகளிலிருந்தும் ஓய்வு பெற்று விலகி இருந்த போதும் சரி</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">, <span lang="TA">ஊருக்கு வருகின்ற அறிஞர்கள் யாராக இருந்தாலும் அவர் எம்மதத்தவராயினும் எத்துறையினராயிரும் இவரைச் சந்திக்காமல் சென்றதில்லை</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">சமுதாய மேடையானாலும் சன்மார்க்க மேடையானாலும் இவர் எழுந்து நின்று பேச ஆரம்பித்தால் அனைவரின் செவிகளும் கூர்மையாக இவர் பேச்சைக் கேட்க ஆரம்பித்து விடும்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">தெளிந்த நீரோடையைப் போன்ற தெளிவான பேச்சு</span>, <span lang="TA">கொஞ்சமும் பிசிறில்லாத குரல் வளம்</span>, <span lang="TA">குற்றால அருவியென கொட்டுகிற கருத்துக்கள்</span>, <span lang="TA">அள்ளி அள்ளி வழங்கும் புள்ளி விபரங்கள்</span>, <span lang="TA">சொல்லுகின்ற செய்தி எதுவானாலும் அதனைக் கோர்வையாகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் சொல்லும் அற்புத ஆற்றல்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">பள்ளிவாசலில் நடைபெறும் மாநாடுகளாகட்டும், மீலாது விழா மேடைகளாகட்டும், பொதுக் கூட்ட மேடைகளாகட்டும், இவர் எழுந்து பேச ஆரம்பித்தால் எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கேட்பவருக்கு அலுப்புத் தட்டாது</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">கடந்த நிகழ்வுகள்</span>, <span lang="TA">நிகழ்காலசம்பவங்கள்</span>,<span lang="TA">எதிர்காலத்</span> </span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"><span lang="TA">திட்டங்கள் இப்படி எதைச் சொன்னாலும் தெளிவான ஆதாரங்கள்</span> <span lang="TA">மற்றும்</span> <span lang="TA">சரியான புள்ளி விபரங்களுடன் கூறுவார்</span>.</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">அறிவுத்தேடல் உள்ள எவரும் இவருடன் அமர்ந்து அரை மணி நேரம் உரையாடினால் போதும் அறிவுச் சுரங்கத்திலிருந்து</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"> <span lang="TA">நிறைய அள்ளிக் கொண்டு வரலாம்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">அரசியல் அறிவியல் வரலாறு இலக்கியம் ஆன்மீகம் என்று இவர் தொட்டுப் பேசாத துறையே இல்லை எனலாம்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">இவர் போன்ற சகலகலா வல்லவர்களை நம் சமகாலத்தில் காண்பதரிது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">மதங்களைக் கடந்த மனித நேய மாண்பாளர். அதனால்தான் மாற்றுக் கருத்துடைய பிற மதத்தவர் கூட மரியாதை நிமித்தம் அடிக்கடி இவரைச் சந்தித்து அளவளாவிச் செல்வதில் அகமகிழ்வு கொள்வர்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">இஸ்லாமிய ஆன்மீகத்தில் அளப்பெரும் ஈடுபாடு கொண்டவர்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">முஸ்லிம் அறிஞர்கள் கூட தெரிந்து வைத்திராத மார்க்கச் சட்ட நுணுக்கங்கள் இவருக்கு அத்துபடி</span>. <span lang="TA">அதுபோலவே ஒரு சராசரி இந்துவைவிட அதிகமாக இந்து மத்தைப் பற்றியும் ஒரு சராசரி கிறிஸ்தவரை விட அதிகமாக கிறஸ்தவ மதத்தைப் பற்றியும் அறிந்து வைத்திருந்த ஞானி</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">தமக்கென தனியாக ஒரு அலுவலகம் அமைத்துக் கொண்டு, அலுவலத்திலேயே ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொண்டு</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">,<span lang="TA">ஆன்மீகம் மற்றும் பொது அறிவு நூல்களை தம்மைச் சுற்றி அடுக்கி வைத்துக் கொண்டு அழகாக அமர்ந்திருப்பார்</span>. <span lang="TA">இவரது மேசை மீது எப்போதும் ஏதாவது ஒரு நூல் விரித்து வைக்கப்பட்டிருக்கும். </span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">இவரைக் காண இவருடைய அலுவலகத்துக்கு எப்போது சென்றாலும் யாராவது முக்கியஸ்தர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். முக்கியஸ்தர்கள் உரையாடும்போது நாம் இடையூறாக இருக்கக் கூடாது என்று நாசூக்காக நான் நகர்ந்தாலும் என்னையும் அமரச் செய்து அளவளாவுவார்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">இவருடைய அறிவாற்றலுக்கும் தகுதிக்கும் வயதுக்கும் நான் சமமானவன் அல்ல என்ற போதிலும் மற்றவர்களுடன் சேர்த்து என்னையும் அமரச் செய்து எனக்கு கண்ணியம் அளித்தவர்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">எங்கள் உரையாடலுக்கு மத்தியில் யாரேனும் பெரிய மனிதர்கள் வந்து விட்டால் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்து எனக்கு கௌரவம் அளித்ததை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"> <span lang="TA">சில தினங்கள் நான் போகாவிட்டால் கூப்பிட்டனுப்புவார்</span>. “<span lang="TA">உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாருங்கள்</span> <span lang="TA">உங்களிடம் நிறைய பேசவேண்டும்” என்று அவர் சொன்ன போது நான் மெய் மறந்து போனேன்</span>. <span lang="TA">ஒரு சாதாரணமானவனாகிய எனக்கு அவர் அளித்த முக்கியத்துவம் அவர் மீது எனக்கிருந்த மரியாதையை மேலும் அதிகப்படுத்தியது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">சில பிரபல மார்க்க அறிஞர்களை எனது வெளியூர்ப் பயணங்களில் சந்திக்கும்போது எனது ஊரைச் சொல்லி என அறிமுகம் செய்து கொண்டால் அவர்கள் முதலில் விசாரிப்பது இவரைப் பற்றித்தானிருக்கும்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">பல்வேறு சந்தர்ப்பங்களில் இவருடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்திருக்கின்றன</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">இவரிடமிருந்து நான் பெற்ற பொது அறிவுப் பொக்கிஷங்கள் ஏராளம்</span>. <span lang="TA">ஆயிரமாயிரம் விஷயங்களை அறிந்து வைத்திருந்த இவர் பேசும் போது கவனமுடன் எனது மனக்குறிப்பேட்டில்</span> <span lang="TA">பதிவு செய்து கொள்வேன்</span>. <span lang="TA">என் வீட்டுக்குச் சென்றவுடன் மறக்காமல்</span> <span lang="TA">எழுதி வைத்துக் கொள்வேன்</span>. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">எங்கள் உரையாடலுக்கிடையே</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"> <span lang="TA">நான் சொல்லும் சில கருத்துக்களைக் கூட</span> <span lang="TA">பொறுமையுடன் கேட்டு எனது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார்</span>. <span lang="TA">இத்தகைய பெருந்தன்மை எல்லோருக்கும் வராது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">ஒரு முறை நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">, <span lang="TA">ஒரு நூலில் நான் படித்த ஒரு பேரறிஞரின் கூற்றை பகிர்ந்து கொண்டேன்</span>. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"><b>“<span lang="TA">ஒரு மனிதன் இவ்வுலகில் வாழ்ந்து மறைந்தான் என்பதற்கு ஆதாரம்</span>, <span lang="TA">அவன் ஒரு நூல் எழுதியிருக்க வேண்டும்</span>, <span lang="TA">ஒரு வீடு கட்டியிருக்க வேண்டும்</span>. <span lang="TA">ஒரு ஆண் குழந்தையைப் பெற்றிருக்கவேண்டும்</span>. <span lang="TA">இவை தான் அந்த மனிதன் மறைந்த பின்னும் அவன் பெயர் நிலைக்க காரணமாக அமையும்</span>”</b><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">எப்போதோ ஏதோ ஒரு நூலில் படித்த இந்தக் கருத்தை இவரிடம் நான் பகிர்ந்து கொண்ட போது யதார்த்தமாகத் தான் எடுத்து வைத்தேன்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">ஆனால் இதைச் சொன்ன மறு நிமிடமே இவர் சொன்ன பதில் என்ன தெரியுமா</span>? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"><b>“<span lang="TA">நீங்கள் இவை மூன்றையும் செய்து விட்டீர்கள்</span>. <span lang="TA">ஆனால் நான் இரண்டைத்தானே செய்துள்ளேன்</span>. <span lang="TA">நான் நூல் எதுவும் எழுதவில்லையே</span>. <span lang="TA">அப்படியானால் அதையும் செய்து விடட்டுமா</span>?”</b> <span lang="TA">என்று இந்தப் பேரறிஞர் சொன்ன போது எனக்கு மெய்சிலிர்த்தது</span>. <span lang="TA">அப்போது உருவானது தான்</span> “<span lang="TA">திருக்குர்ஆனில் சில தேன் துளிகள்</span>” <span lang="TA">என்னும் இவரது நூல்</span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">திருக்குர்ஆன் குறித்து இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் திரட்டி வைத்திருந்த குறிப்புகளை என்னிடம் தந்து, இவற்றை கோர்வையாக்கி நூல் வடிவில் தொகுத்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற் கிணங்க நான் தொகுத்து வழங்கிய </span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"> <b>“<span lang="TA">திருக்குர்ஆனில் சில தேன் துளிகள்</span>“</b> <span lang="TA">அந்த நூலுக்கு என்னை ஒரு மதிப்புரையும் எழுதச் சொன்னார்</span>. <span lang="TA">எனது மதிப்புரைக்கு மதிப்பளித்து முன் பக்கத்தில் இடம் பெறச்செய்து என்னை கௌரவித்தார்</span>. <span lang="TA">அந்நூலின் மதிப்புரையில் நான் குறிப்பிட்டது போல் இவரது இதய சிம்மாசனத்தில் எனக்கொரு இடம் அளித்ததற்காக மனம் நெகிழ்ந்து போனேன்</span>. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">சமீப காலங்களில் நான் எழுதிய பல்வேறு ஆக்கங்களுக்கு நான் பெற்ற கரு இவருடன் உரையாடும் போது நான் பெற்றவை தான் என்பதை நன்றியுடன் இங்கே நினைவு கூர்ந்தாக வேண்டும்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">எமது ஒவ்வொரு விடுமுறையிலும் தாயகம் வரும்போது அடிக்கடி இவரது அலுவலகம் சென்று பேசிக் கொண்டிருப்பேன்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">பொதுஅறிவு</span>, <span lang="TA">ஆன்மீகம்</span>, <span lang="TA">இயக்கங்கள், கொள்கைகள் இப்படி அனைத்து வகையான கலவையாக எங்கள் உரையாடல் அமையும்</span>.<span lang="TA">ஆனால் இம்முறை எங்கள் உரையாடல் அனைத்தும் ஆன்மீகம் பற்றியதாகவே மட்டும் இருந்தது</span>. <span lang="TA">மற்ற விஷயங்கள் குறித்தெல்லாம் பேச இப்போது மனம் விரும்பவில்லை என்றார்கள்</span>. <span lang="TA">அவர்களுடான எனது இந்த இறுதிக் கட்டச் சந்திப்புகளில், இஸ்லாமிய</span> <span lang="TA">வணக்க வழிபாடுகள், மார்க்கக் கடமைகள்,</span> <span lang="TA">ஆகியன பற்றி மட்டுமே எங்கள் உரையாடல்கள் இருந்தன</span>. <span lang="TA">மற்றவைகளிலிருந்து மனதளவில் ஒதுங்கி விட்டார்கள்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">எனது பாட்டனார்<b> அப்துஸ்ஸலாம் சாஹிப் </b>அவர்கள் திருக்குர்ஆனை</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"> <span lang="TA">பாரசீக மொழியில் மொழி பெயர்த்துள்ள விபரம் குறித்து இவரிடம் சொன்ன போது அதை எடுத்த வரச் சொல்லி தம் கரங்களில் வாங்கி, பக்கம் பக்கமாகப் புரட்டிப்பார்த்து</span> <span lang="TA">வியந்தார்கள்</span>. <span lang="TA">எனது பாட்டனார் <b>அப்துஸ்ஸலாம் சாஹிப் </b>அவர்கள் குறித்து மிகவும் சிலாகித்து பேசியவர் இந்த ஊர் இத்தகைய பேரறிஞர்களை யெல்லாம் பெற்றுள்ளதே என்று போற்றினார்கள்</span>. <span lang="TA">இந்த குர்ஆன் கையெழுத்துப் பிரதியை மிகவும் பத்திரமாகப் பேணிப் பாதுகாக்கும்படியும்</span>, <span lang="TA">இதனைப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளும்படியும் அறிவுரை கூறினார்கள்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">தமது முன்னோர்களில் தமக்குத் தெரிந்த அனைவரின் பெயரையும் பட்டியல் தயாரித்து அவர்கள் அனைவருக்காகவும் அடிக்கடி தாம் துஆ செய்து கொண்டிருப்பதாகச் சொல்லி அந்தப் பட்டியலை என்னிடம் காண்பித்தார்கள்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">அப்போதே எனது பாட்டனார் பெயரையும் அந்தப் பட்டியலில் இணைத்துக் கொண்டார்கள்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">ஏற்கனவே நான் உருவாக்கிய எனது குடும்பத்தாரின் வம்சாவழிப் பட்டியல் ஒன்றை இவரிடம் காண்பித்திருந்தேன்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">அதனைப் பின்பற்றி தாமும் தமது குடும்பத்தாரின் வம்சாவழிப் பட்டியல் ஒன்றை உருவாக்கி யிருப்பதாகவும் தம்முடைய உறவினர்கள் அனைவருக்கும் அதனைப் பிரதி எடுத்து கொடுத்திருப்பதாகவும் சொன்னார்கள்</span>. <b>“</b><span lang="TA"><b>எங்கள் வம்சாவழிப் பட்டியலை நான் உருவாக்குதற்கு நீங்கள் தான் மூல காரணம்”</b> என்று அவர்கள் என்னிடம் சொன்ன போது அந்தப் பெரிய மனிதரின் வஞ்சகமில்லாப் புகழ்ச்சி என்னை நெகிழச் செய்தது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"> <span lang="TA">அடிக்கடி என்னிடம் திருக்குர்ஆன் விரிவுரைகள் ஹதீஸ் தொகுப்பு நூல்கள் எதையேனும் குறிப்பிட்டுக் கேட்பார்கள். நானும் என்னிடம் உள்ள பல்வேறு நூல்கனள படிக்கக் கொடுத்திருக்கிறேன்</span>. “<span lang="TA">தாங்கள் ஆர அமரப் படித்து விட்டு பிறகு தந்தால் போதும்“ என்பேன்</span>. <span lang="TA">அந்த பெரும் பெரும் நூல்களை யெல்லாம் முழுவதுமாகப் படித்து முடித்திருக்கிறார்கள் என்பதை</span>, <span lang="TA">மறுமுறை சந்திக்கும்போது ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் அவர்கள் குறிப் பெடுத்து வைத்திருப்பதைக் கொண்டு புரிந்து கொள்வேன்</span>. <span lang="TA"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">இம்முறை நான் கொடுத்த நூல்களைப் புரட்டி சில குறிப்புகளை மட்டும் படிக்கச் சொல்லி கேட்டுவிட்டு உடனுக்குடன் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். எதையுமே வைத்துக் கொள்ள வில்லை</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <b>“</b><span lang="TA"><b>முன்பு போல் இப்போது படிக்க முடியவில்லை கண்கள் மறைக்கின்றன“ </b>என்று சொன்னதுடன் நிறுத்திக் கொள்ள வில்லை,</span> <b>“</b><span lang="TA"><b>மரணம் நெருங்குகிறது எனவே அடுத்தவர் உடமைகளை நாம் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?“ </b>என்று அவர் சொன்ன போது நான் சாதராணமாகத் தான் எடுத்துக் கொண்டேன்</span>. <span lang="TA">தமது அந்திம காலம் நெருங்கிவிட்டதை மனதளவில் அவர்கள் உணர்ந்திருக்கலாம்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">பல வருடங்களாக தமக்கு வந்து கொண்டிருந்த இஸ்லாமிய மாத இதழ்களை வரிசைப்படி அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">இவற்றை இப்படியே வைத்திருப்பதை விட யாருக்காவது கொடுத்தால் படித்துப் பயனடைவார்களே என்று கருதியதாகவும் யாரிடம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தாம் யோசித்த போது முதலில் என்னைத் தான் நினைத்ததாகவும் சொல்லி என்னிடம் தந்தார்கள்</span>. <span lang="TA">நான் எடுத்துச் செல்ல முன்வந்த போது</span> “<span lang="TA">நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம் ஆள் மூலம் கொடுத்தனுப்புகிறேன்</span>” <span lang="TA">என்று சொல்லி ஆள் மூலம் எனது வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">தமது அலுவலத்தில் வந்து அமர இயலாத முதுமையும் இயலாமையும் இவருக்கு ஏற்பட்ட போதும் கூட, அவ்வப்போது காலார நடந்து வந்து சிறிது நேரமேனும் தமது அலுவலகத்தின் வாசற்படிகளை மிதிக்கத் தவறியதில்லை</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">மூடப்பட்டுவிட்ட அந்த அலுவலகத்தின் வெளிப்புறத்தில் இவர் அமர்ந்திருந்த போது எதிர்பாராவிதமாக நான் அவ்வழியே செல்ல</span>, <span lang="TA">என்னை அன்புடன் அழைத்து தன் தோளின் மீது போட்டிருந்த துண்டை எடுத்து தமக்கருகில் உள்ள இடத்தை தானே சுத்தம் செய்து தமக்குச் சமமாக என்னை அமரச் செய்தார்கள்</span>. <span lang="TA">இத்தகைய உயர்ந்த பண்பாடு உயர்ந்தவர்களிடம் மட்டும் தான் இருக்கும்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"><o:p></o:p><span lang="TA">வழக்கம் போல்</span> <span lang="TA">பயணம் சொல்லிக் கொள்ள இம்முறை நான் இவர்கள் இல்லம் சென்ற போது தாம் ஓய்வெடுத்துக் கொண்டிக்கும் அறைக்கே என்னை வரச் சொன்னார்கள்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">தமது பல்வேறு குறிப்பேடுகளை எடுத்து என்னிடம் காண்பித்தார்கள்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்</span>. <span lang="TA">ஒரு மகனுக்கு தந்தையைப் போல்</span>, <span lang="TA">ஒரு மாணவனுக்கு ஆசிரியரைப் போல்</span>, <span lang="TA">ஒரு சீடனுக்கு ஆசானைப்போல பல்வேறு அறிவுரைகளும் அறவுரைகளும் கூறினார்கள்</span>. <span lang="TA">எவ்வளவோ விஷயங்களைச் சொன்னவர் இறுதியாக</span> “<span lang="TA">என் மனதில் தோன்றியதைச் சொன்னேன் உங்கள் விருப்பப்படியும் வசதிப்படியும் செய்து கொள்ளுங்கள்</span>” <span lang="TA">என்று மிகவும் இங்கிதமாக உரைத்தார்கள்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">கடைசியாக விடை பெற்ற போது அவரின் நா தடுமாறியது பேச்சு வரவில்லை</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர்த் துளிகள்</span>. <span lang="TA">தம் கரங்கள் நடுங்க எனது கரங்களை பற்றிக் கொண்டு</span> <b>“<span lang="TA">எனக்காக துஆச் செய்யுங்கள்</span>“ </b><span lang="TA">எள்று நா தடுமாற அவர்கள் உரைத்த போது அவர் கண்கள் மட்டுமல்ல எனது கண்களும் குளமாயின</span>. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">இன்னும் இன்னும் இவரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கக் கூடாதா</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">? <span lang="TA">இன்னும் இன்னும் இந்த அறிவுப் பேழையிலிருந்து ஆழ்ந்த கருத்துக்களை அள்ளி வந்திருக்கக் கூடாதா</span>? <span lang="TA">இன்னும் இன்னும் இந்த கல்வி ஞானக் கடலில் மூழ்கி நாம் முத்துக் குளித்திருக்கக் கூடாதா</span>? <span lang="TA">இது தான் இறுதிச் சந்திப்பு என்பது நமக்கு எப்படித் தெரியும்</span>? <span lang="TA">அது இறைவன் மட்டும் அறிந்த இரகசியம் அல்லவா</span>? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">இயலாமை,முதுமை, முதுமைக்குப்பின் மறுபடியும் தொடங்கும் குழந்தைப் பருவம் இவையாவும் இறைவன் வகுத்த நியதி</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">, <span lang="TA">ஒரு குடும்பத்தலைவராக தமது கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்து முடித்து</span>, <span lang="TA">இறுதியாக எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி அமைதியாக தமது வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த நிலையில் இறைவன் இவர்களை அழைத்துக் கொண்டான்</span>. <span lang="TA">இது இறைவன் இவருக்கு அளித்த நற்பாக்கியம் தான்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">இந்த பி காம் வாழ்ந்த சமகாலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">என் தந்தையின் வயதொத்த இவர்கள்</span>, <span lang="TA">எனது ஆசிரியப் பெருந்தகைகளுக்கு நிகரான அறிவையொத்த இவர்கள்</span> <span lang="TA">தமக்குச் சமமாக அமரவைத்து பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னை கௌரவித்திருக்கிறார்கள்</span>. <span lang="TA">இந்த மாமேதை எமக்களித்த கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் தனி ஒரு நூலே தொகுத்தாலும் தகும்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, அவனியில் யார்க்கும் அஞ்சாத தன்மை கொண்ட அந்த பி காம்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">கணீரென்ற குரலில் தெளிவான உச்சரிப்புடன் சரியான வார்த்தைகளை கவனமுடன் பேசும் அந்த பி காம்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">அறிவு வேட்கை</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">, <span lang="TA">ஆன்மீகத் தேடல்</span>, <span lang="TA">அறிந்து கொள்ளும் ஆர்வம்</span>, <span lang="TA">இன்னமும் கற்க வேண்டும் என்னும் தணியாத தாகம் இவை அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற அந்த பி காம்</span>, <span lang="TA">நம்மை விட்டுச் சென்று விட்டார்</span>. <span lang="TA">நமதூரின் ஒரு அறிவுச்சுடர் அணைந்து விட்டது</span>. <span lang="TA">நமதூரில் பல நூறு பி காம்கள் இனி உருவாகலாம்</span>. <span lang="TA">ஆனால் இப்படி ஒரு</span> <span lang="TA">பி காம் கிடைப்பாரா</span>? <span lang="TA">காலம் தான் பதில் சொல்லும்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">. <span lang="TA">தலைமுறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்</span>. <span lang="TA">சிலர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி மறைந்த பிறகும் கூட மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுவர்</span>. <span lang="TA">மேலத்திருப்பூந்துருத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மாமனிதர்களில் இந்த மேதைக்கு ஒரு தனி இடம் உண்டு</span>. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">இந்த மாபெரும் அறிஞரைப் பற்றி இன்னும் நிறைய எழுதிக் கொண்டே போகலாம். மறுபடியும் தொடங்கிய துவக்கத்திற்கே வருகிறேன்</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">ஓர் அறிவுச் சுரங்கத்தின் வாயிற் கதவு அடைபட்டுப் போனது</span></b><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"><b>.<span lang="TA">ஒரு நடமாடும் பல்கலைக் கழகம் தமது</span> <span lang="TA">நெடுங்கதவை மூடிக் கொண்டது</span>. <span lang="TA">மேலத்திருப்பூந்துருத்தி ஈன்ற மேன்மை மிகு அறிஞர் விடை பெற்றுக் கொண்டார்</span>. <span lang="TA">ஆம் மேதகு முஹம்மது இப்ராஹீம் பி காம் அவர்கள் இறையடி சேர்ந்து விட்டார்</span>.</b><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">எல்லாம் வல்ல இறைவன் இவரின் பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்வை மகிழ்வாக்கி</span><span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;">, <span lang="TA">மறுமை வாழ்வை சிறப்பாக்கி</span>, <span lang="TA">நல்லோர்களின் கூட்டத்தில் இவரைச் சேர்த்து வைப்பானாக</span>. <span lang="TA">நாளை மறுமையில் நல்ல இறை நேசர்களுடன் இவரை எழுப்புவானாக</span>. <span lang="TA">இம்மை வாழ்வை விடச் சிறந்த மறுமை வாழ்வை இவருக்கு நல்குவானாக</span>. <span lang="TA">ஆமீன்</span>.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"><o:p>அன்புடன்</o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "aAvarangal","sans-serif"; font-size: 14pt; line-height: 115%;"><o:p><b>அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா </b><br />
</o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br /></div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-54023375677983982332008-11-10T22:43:00.000+03:002012-02-06T23:47:53.845+03:00டாக்டர் முபாரக் அவர்களே வருக<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="justify">
வழுத்தூர் உமர் தெரு அல்ஹாஜ் A.M சலாஹீத்தீன் சாஹிப் மற்றும் அல்ஹாஜ் A. குத்புத்தீன் சாஹிப் ஆகிய பெருந்தகைகளின் பேரனும் அல்ஹாஜ் S.முஹம்மது சித்தீக் அவர்களின் அன்புப் புதல்வரும் ஆகிய </div>
<div align="justify">
<span style="font-size: 130%;"><b>டாக்டர் முஹம்மது முபாரக் அவர்கள்</b></span></div>
<div align="justify">
தமது மருத்துவக் கல்வியை வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் நிறைவு செய்து மருத்துவராக தாயகம் திரும்பிய மகிழ்ச்சியான தகவலை இந்த வலைப்பதிவின் முதல் தகவலாகப் பதிவதில் பெருமிதம் கொள்கிறேன்.</div>
<div align="justify">
பண்பான பெற்றோருக்குப் பணிவான மகனாகப் பிறந்து, சமுதாய சேவையைக் கருத்திற் கொண்டு மருத்துவக் கல்வியை முறையாகப் பயின்று மருத்துவராக வந்துள்ள <b>டாக்டர் முஹம்மது முபாரக்</b> அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்.</div>
<div align="justify">
மருத்துவத் துறையில் தனியொரு முத்திரையைப் பதித்து இம்மையிலும் மறுமையிலும் பயன் தரத்தக்க மனிதாபிமான சேவைகளை மனித சமூகத்திற்கு ஆற்றிட அடியெடுத்து வைத்திருக்கும் இந்த இளம் மருத்துவருக்கு எல்லாம் வல்ல இறைவன் அனைத்து வெற்றிகளையும் அள்ளித் தந்து கெளரவிப்பானாக. ஆமீன்.</div>
<div align="justify">
</div>
</div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-86267506724120631592008-09-29T04:09:00.000+03:002008-09-29T04:13:38.703+03:00பெருநாள் வாழ்த்துக்கள்<a href="http://2.bp.blogspot.com/_0YOf1e0CFrc/SOArmdaeA9I/AAAAAAAAAKo/-r9if-CYpUg/s1600-h/Greetings.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5251245105244668882" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_0YOf1e0CFrc/SOArmdaeA9I/AAAAAAAAAKo/-r9if-CYpUg/s320/Greetings.gif" border="0" /></a><br /><div></div>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-39063395559768987.post-52192172337945443462008-09-15T04:18:00.000+03:002008-11-11T12:50:15.452+03:00தனிப் பதிவு<div align="justify"><span style="font-size:130%;">இது எமது தனிப் பதிவு. சொந்த வாழ்க்கையின் அனுபவங்கள், எமது இதயத்தில் நீங்கா இடம் பெற்ற உற்ற நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர் பற்றிய தகவல்கள், வாழ்க்கையில் யாம் பெற்ற படிப்பினைகள், மறக்க முடியா நிகழ்ச்சிகள், தனிப்பட்ட முறையில் எமது உளள்த்தில் இடம்பிடித்த உத்தமர்கள் பற்றிய விபரங்கள் ஆகியவை மட்டும் இப்பதிவில் இடம்பெறும்.</span></div><div align="justify">அன்புடன்</div><span style="font-size:180%;">அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா</span>மஸ்தூக்காhttp://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com0