Monday, November 10, 2008

டாக்டர் முபாரக் அவர்களே வருக

வழுத்தூர் உமர் தெரு அல்ஹாஜ் A.M சலாஹீத்தீன் சாஹிப் மற்றும் அல்ஹாஜ் A. குத்புத்தீன் சாஹிப் ஆகிய பெருந்தகைகளின் பேரனும் அல்ஹாஜ் S.முஹம்மது சித்தீக் அவர்களின் அன்புப் புதல்வரும் ஆகிய
டாக்டர் முஹம்மது முபாரக் அவர்கள்
தமது மருத்துவக் கல்வியை வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் நிறைவு செய்து மருத்துவராக தாயகம் திரும்பிய மகிழ்ச்சியான தகவலை இந்த வலைப்பதிவின் முதல் தகவலாகப் பதிவதில் பெருமிதம் கொள்கிறேன்.
பண்பான பெற்றோருக்குப் பணிவான மகனாகப் பிறந்து, சமுதாய சேவையைக் கருத்திற் கொண்டு மருத்துவக் கல்வியை முறையாகப் பயின்று மருத்துவராக வந்துள்ள டாக்டர் முஹம்மது முபாரக் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்.
மருத்துவத் துறையில் தனியொரு முத்திரையைப் பதித்து இம்மையிலும் மறுமையிலும் பயன் தரத்தக்க மனிதாபிமான சேவைகளை மனித சமூகத்திற்கு ஆற்றிட அடியெடுத்து வைத்திருக்கும் இந்த இளம் மருத்துவருக்கு எல்லாம் வல்ல இறைவன் அனைத்து வெற்றிகளையும் அள்ளித் தந்து கெளரவிப்பானாக. ஆமீன்.

Monday, September 29, 2008

பெருநாள் வாழ்த்துக்கள்


Monday, September 15, 2008

தனிப் பதிவு

இது எமது தனிப் பதிவு. சொந்த வாழ்க்கையின் அனுபவங்கள், எமது இதயத்தில் நீங்கா இடம் பெற்ற உற்ற நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர் பற்றிய தகவல்கள், வாழ்க்கையில் யாம் பெற்ற படிப்பினைகள், மறக்க முடியா நிகழ்ச்சிகள், தனிப்பட்ட முறையில் எமது உளள்த்தில் இடம்பிடித்த உத்தமர்கள் பற்றிய விபரங்கள் ஆகியவை மட்டும் இப்பதிவில் இடம்பெறும்.
அன்புடன்
அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா
 

Copyright 2009 அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா. Blogger Templates created by Deluxe Templates. Wordpress by Justin Shattuck.